'கடல்' என்னுடைய நான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த ஆண்டு ஜனவரியில் வாசகசாலை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் முன்னுரை எழுதியுள்ளார். அவருக்கு என் அன்பு. எளிமையும் ஆழமும் கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. ச...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி