புரவி இதழிலி வெளியான கட்டுரை உயிர்ப்பின் வெளி இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும் போது வா. - வில்லியம் சிட்னி வால்கர் உன் கடிதத்தை இவ்வாறாக எதிர்பார்த்தேன் என்று கி.ராவிற்கு கு.அழகிரிசாமி எழுதுகிறார். கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள் ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் கி.ரா இந்தக்கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுபூர்வமானவை என்கிறார். இந்தநூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைகழிப்புகளும், அன்பின்பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை. சென்னையில் இருந்து இடைசெவலிற்கு தினம...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி