Posts

Showing posts from April, 2023

நம் சூழலில் வாசிப்பதற்கான இடம்

Image
ஒரு தனிநபர் இலக்கியத்திற்காக முயன்று பெற்ற இடங்கள்😜 எழுதத்தொடங்கியப்பின் வீட்டிற்குள்ளேயே நான்கு இடங்களுக்கு மாறிவிட்டேன். எட்டுவயதில்  வாசிக்கத்தொடங்கியதில் இருந்து வீட்டை மூன்று முறை மாற்றி கட்டியாயிற்று. முதலில் கூட்டுக்குடும்பத்தின் நடுவில் முற்றம் வைத்த சுற்றுக்கட்டு ஓட்டு வீட்டின் முற்றத்திலும்,படுக்கையிலும் சிறுவர் இதழ்களும், கல்கியும், நா. பார்த்தசாரதியும் ,சாண்டில்யனும்,அகிலனும் நிறைந்திருக்கிறார்கள். ஆறுஆண்டுகள் ஒரே கல்லூரியின் இரு நூலகங்கள். வைரமுத்துவில் தொடங்கி நாஞ்சில்நாடன், தி.ஜா,ஜெயகாந்தன், எஸ்.ரா வரை. கல்லூரிநூலகத்தின் மிகப்பரிய மேசையும் நாற்காலியும், அவ்வளவு அழகான வாசிக்கும் இடத்தின் அமைதியும், அங்கு நான் எப்போதும் அமரும் ஜன்னல் ஓரத்தின் புல்வெளியும் பொன்கொன்றையும்,மஞ்சள் அரளியும்,வாசிப்பில் நிகழ்ந்த மாற்றங்களும் என்  இனிய நினைவுகள். மீண்டும் வீட்டின் முதல்தளத்தில் பெரியஅறையில் சன்னலோர படுக்கையில் அமர்ந்து புதுமைப்பித்தன்,ஜெயமோகனின் கொற்றவையில் இருந்து தொடங்கி முடியாத வரிசை இன்று வரை நகர்ந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் அதே தளத்தின் சிறிய அறையின் பால்கனியில் வெண்முரச

அகமும் புறமும் 18

Image
       ஏப்ரல் 1 ,2023          வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.           ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப், பொலங்கலம் சுமந்த பூண்தாங்க இளமுலை, ‘வருக மாள,என் உயிர்!’ எனப் பெரிது உவந்து, கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன், ‘மாசுஇல் குறுமகள்! எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?’ என யின்தற் கரைய,வந்த விரைவனென் கவைஇ, களவு உடம்படுநரின் கவிழ்ந்து,நிலம்கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு,யானும் பேணினென் அல்லெனோ_ மகிழ்ந! _ வானத்து அணங்குஅருங் கடவுள் அன்னோள்,நின் மகன்தாய் ஆதல் புரைவது_ ஆங்கு எனவே! அகநானூறு:16 பாடியவர்: சாகலாசனார் திணை : மருதம் துறை :  தலைவனுக்கு தலைவி கூறியது. அகத்துறை முழுவதுமே  உன்னதமான காதல் வரிகள், தருணங்கள் நிறைந்துள்ளன. இத்தனை உன்னதமா? என்ற தராசின் இந்தப்பக்கம் தலைவனின் பரத்தமை புன்னகையுடன் அமர்ந்திருக்

அவள்

Image
எப்போதும் அவளைத் தேடிச்செல்கிறேன். அன்றொரு நாள் அவளிடம் எதையாவது  கேட்கச்சொன்னார்கள். என்ன கேட்பது? சொல்லாகி நிற்பவள் முன்பு வெற்று கல்லென்று நின்றேன். மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே செல்கிறேன். ஆனால் அவள் சென்ற பாதையில் அல்ல.. அவளை அடையவும் அல்ல அவளாக மாறவும் அல்ல. என்றாலும்  அவளையே தேடிச்செல்கிறேன். அவள் மதுமணக்கும் மலர்வனம். நான் சமனமாகாத துலாத்தட்டில் விழும் ஒற்றை துளசி.

சன்னிதி

Image
  சன்னிதியின் படிகளில் படிந்திருக்கும் ஒவ்வொரு சுவட்டிலும் வியர்வையின் ஈரம்.. உள்ளே சிவந்த ஔியாய் தேங்கி நிற்கிறது அமைதி... ஆகாயத்தின் கீழே உக்கிரமானவெயிலில் நனைந்தபடி கோபுரஉச்சியில் தனித்து நிற்கிறது சிலுவை.. உன் கோபுர இடுக்கொன்றில்  கூடு கட்டியிருக்கும் குருவி ஒன்று தன் குஞ்சுகளை  உன்னிடம் விட்டுவிட்டு இறைதேடி செல்கிறது... அதன் இறகில் நீ அமர்ந்து பறக்கிறாய்.

பாலாமணி பங்களா

Image
 [2023 மார்ச் 16 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை] பாலாமணி பங்களா காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழையநவாப் காலத்துக் கட்டில். மாசிமாதக்குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல் வழியே உள்ளே புகுந்து அறையின் இதமான சூட்டை குழைத்தது. எப்போதும் பங்களாவில் ஐம்பது அறுபது பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் வெளியேறிவிட்டார்கள். இவளே மற்ற நாடகக் கம்பெனிகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தாள். நினைக்க நினைக்க அறைக்குள் மூச்சு முட்டியது. வெளியே வந்து பின்பக்கமான நின்றாள். முதல்மாடியின் பின்பக்க உப்பரிகை அது. கைப்பிடி கட்டையில் கையூன்றி குனிந்து நின்று கொண்டாள். எந்த நேரமும் வயிற்றுப்புண்ணின் வலி இருந்து கொண்டிருந்தது.  வரிசையாக அத்தனை அறைகளும் ஒழிந்து கிடந்தன. சுவரில் அங்கங்கே திட்டு திட்டாய் சிவந்த சாந்துப்பொட்டு இழுப்பல்கள் மங்கியிருந்தன. காய்ந்த பூச்சரம் ஒன்று காலில் தட்டுபட்டதும் பாலாமணி  சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். ஏதோ

அகமும் புறமும் 17

Image
                    ஆம்பல் குளம்                    அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையாயினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்ன வைகலுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே. புறநானூறு  திணை : பொதுவியல் திணை துறை : தாபத நிலை பாடியவர் : ஓக்கூர் மாசாத்தனார் . ஒரு பெண் தன் இளம் வயதில் விருப்பத்துடன் தன்னை அழகுபடுத்திக்கொள்ள பயன்படுத்தும் பொருட்களை கணவன் மறைவிற்கு பின் பயன்படுத்த சமூகம் விடுவதில்லை. தற்காலத்திலும் இந்த நிலை முழுவதுமாக மாறவில்லை.  கட்டாயப்படுத்தி சடங்குகளை  செய்ய வைத்துவிட்டு கைம்மை நோன்பு என்று சொல்கிறோம். இந்தப்பாடல் அந்த வகையான ஒரு கைம்மை நோன்பை காட்டுகிறது.  உணவு பழக்க வழக்கங்களை கூட கணவனை இழந்தப்பின் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். சூரியன் உதிப்பதற்கு முன் ஒரு வேளை உணவு. அதுவும் எப்போதும் உண்ணும் உணவல்ல. அல்லி அரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவு.  அல்லியின் கிழங்கு கோடையிலும் அழியாதது. தண்டிற்கு மேல் உள்ள சூழகத்தில் ஏராளமான அல்லி விதைகள் உள்ளன. அது அல்லி அரிசி என்று அழைக்கப்படுகின்றது. அதை உணவாக்கி கணவனை இழந்த பெண்களுக்கு ஒரு வேளை