நம் சூழலில் வாசிப்பதற்கான இடம்
ஒரு தனிநபர் இலக்கியத்திற்காக முயன்று பெற்ற இடங்கள்😜 எழுதத்தொடங்கியப்பின் வீட்டிற்குள்ளேயே நான்கு இடங்களுக்கு மாறிவிட்டேன். எட்டுவயதில் வாசிக்கத்தொடங்கியதில் இருந்து வீட்டை மூன்று முறை மாற்றி கட்டியாயிற்று. முதலில் கூட்டுக்குடும்பத்தின் நடுவில் முற்றம் வைத்த சுற்றுக்கட்டு ஓட்டு வீட்டின் முற்றத்திலும்,படுக்கையிலும் சிறுவர் இதழ்களும், கல்கியும், நா. பார்த்தசாரதியும் ,சாண்டில்யனும்,அகிலனும் நிறைந்திருக்கிறார்கள். ஆறுஆண்டுகள் ஒரே கல்லூரியின் இரு நூலகங்கள். வைரமுத்துவில் தொடங்கி நாஞ்சில்நாடன், தி.ஜா,ஜெயகாந்தன், எஸ்.ரா வரை. கல்லூரிநூலகத்தின் மிகப்பரிய மேசையும் நாற்காலியும், அவ்வளவு அழகான வாசிக்கும் இடத்தின் அமைதியும், அங்கு நான் எப்போதும் அமரும் ஜன்னல் ஓரத்தின் புல்வெளியும் பொன்கொன்றையும்,மஞ்சள் அரளியும்,வாசிப்பில் நிகழ்ந்த மாற்றங்களும் என் இனிய நினைவுகள். மீண்டும் வீட்டின் முதல்தளத்தில் பெரியஅறையில் சன்னலோர படுக்கையில் அமர்ந்து புதுமைப்பித்தன்,ஜெயமோகனின் கொற்றவையில் இருந்து தொடங்கி முடியாத வரிசை இன்று வரை நகர்ந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் அதே தளத்தின் சிறிய அறையின் பால்கனியில் வெண்முரச