Posts

Showing posts from May, 2022

சிறுகதை: சொல் பேச்சுக் கேட்காத கரங்கள்

Image
 2018 ஜீலை பதாகை இதழில் வெளியான சிறுகதை. சொல்பேச்சுக் கேட்காத கரங்கள் பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது.அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தது.கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏறமுடியாமல் பேருந்தில் ஏறினார்.பேருந்தில் நல்ல கூட்டம்.அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள்.வேட்டியை மடித்துக்கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தப்பின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலயகட்டிக்கிட்டு நிக்க முடியாது…வேணாம்,”என்ற குரல் தடுக்கையிலேயே எழுந்து கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமர சொன்னதும் அமர்ந்து கொண்டார்.பக்கத்தில் அமர்ந்திருந்தஅம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார்.இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான்.கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறிய கற்றிருக்கிறது.அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,”என்றாள்.நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்றால்

மலைநாடனோடு கொண்ட நட்பு

Image
அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இது நாற்பதாவது திருமணநாள்.  அய்யா திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவர்.  தனக்கு வந்த மாப்பிள்ளைகளில் அய்யாவின் ஆளுமையை,தோற்றத்தை விரும்பி அம்மா அய்யாவை தேர்ந்தெடுத்தார்.           அய்யாவின் கையெழுத்தில் அவரின் திருமண புகைப் படத் தொகுப்பு ட்யூசன் மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த தந்தையில்லாத வறுமையான குடும்பத்தின் மூத்த மகனிற்கு, நிலஉடைமையாளரான தாத்தா தன் மகளின் விருப்பத்தின் பொருட்டும்,பையனின் நன்நடத்தைக்காகவும் படிப்பின் மீதான நம்பிக்கையிலும் தன் மகளை அளித்தார்.   அம்மா முதன்முதலில் பார்த்த அய்யா அய்யா தன் திருமணப்பத்திரிகையில் சாதிப்பெயரை எடுத்தார். இன்றைய தலைமுறையில் என் தங்கையின் திருமணப்பத்திரிகையில் அதை எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் குடும்பவாழ்க்கை நடைமுறை வாழ்வைத்தாண்டி  கொஞ்சம் இசக்கு பிசக்கான சிக்கல்களை கொண்டது.  கூட்டுகுடும்ப அமைப்பு காலாவதியான காலத்தில் இவர்கள் கூட்டுக்குடும்பத்தின் தலைவன் தலைவியாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்கள்.  ரொமாண்டிக்கான தம்பதிகளா? என்று கேட்டால் ....அவர்களிடம் அது இப்பொழுதுள்ள பொருளில் சுத்தமாக இல்லை

கடல்: ஸ்பாட் லைட் நிகழ்வு

Image
 என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பான 'கடல்' குறித்து வாசகசாலையின் ஸ்பாட் லைட் என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசப்பட்டது. வாசகபார்வையில் நந்தினி மாரிமுத்து அவர்கள் பேசினார். ஜா.ராஜகோபாலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இருவருக்கும் அன்பும் நன்றியும்.  வாசகபார்வைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/33rqYWlKldU சிறப்புரைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/4SfKiRnr0cw வழக்கம் போல வாசகசாலைக்கு எப்போதும் என் அன்பு.

நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று: சிறுகதை

Image
 2018 மே பதாகை இதழில் வெளியான கதை. நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று இளம்காலை விடுதியின் வாயிலில் நின்ற என்தோளில் சங்கரிதான் கைவைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான சற்றுதண்மையான கைகளின் தொடுதலுக்கு நெக்கியது உடல்.நண்பர்கள் அனைவரிடமும் தயக்கமில்லாமல் எதார்த்தமான சங்கரியின் இந்தத் தொடுகை முதலில் விதிர்ப்பை , சிறுபதட்டத்தை உண்டாக்கி பின் இயல்பாகியது .  பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நிமிர்ந்த சங்கரியிடம் நான், “மலரக்கா வரலயா?”என்றேன். இல்லையென தலையாட்டிய சங்கரி,  வாயிலவரிடம், “அண்ணா...ஏழுமணிக்கெல்லாம் வந்திருவேன்,”என்றபடி படியிறங்கினாள்.நாங்கள் நடந்துசென்ற  சிமெண்ட் பரப்பில் வெயில் ஔியாய் விரிந்திருந்தது. “சாப்பிட்டியாம்மா?”என்ற அவரின் குரல் கேட்டு சங்கரி திரும்பி புன்னகைத்து தலையாட்டினாள். வடக்காக சாலையைக்கடந்து பேருந்துநிலையத்தின் காந்திசிலையருகே நடந்து கொண்டிருக்கையில், நேர்காட்டில் தொலைவில் கண்களில்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தைக் கண்டதும், “மழை வராப்ல இருக்கு சீக்கிரம் வேலைய முடிக்கனும்.வழியில் எதாச்சும் கோயிலுக்கு போயிட்டு போலாம்,”என்றேன்.மனதில் இந்தஅவசரத்தில் எத

கங்காளனின் பாதங்கள்

Image
 கடல் புத்தகத்தின் எழுத்தாளர்களுக்கான பிரதிகள் வந்து சேர்ந்ததும் ஆண்டாள் நினைவிற்கு வந்தாள். திருவெள்ளறை ஆண்டாள். எப்போது திருவெள்ளறைக்கு சென்றாலும் வெளிசுற்றில் ஆண்டாளை வணங்கிவிட்டு அருகில் உள்ள தூண்வரிசைகள் நீளும் மதிலோர பிரகாரத்தில் அமரும் போது எழுத்தெல்லாம் சுடராகி எரியவேண்டும் என்ற பாரதியின் சொற்கள் நினைவிற்கு வரும். சொற்கள் வேண்டும் என்று ஆண்டாளிடம் அன்றி யாரிடம் கேட்பது. கடல் புத்தகத்தை அவள் பாதங்களில் வைக்க எண்ணியிருந்தேன். இதுவரை எழுதும் பெண்கவிஞர்களின்  ஒன்றிணைத்த வடிவமாக எனக்கு ஆண்டாள் இருக்கிறாள். அங்கு செல்ல அமையவில்லை. நேற்று ஜம்பேரி என்ற பெரிய ஏரியை கோடையில் பார்க்கச்சென்றிருந்தேன். கொல்லிமலைத் தண்ணீரை சேமிக்கும் மிகப்பெரிய ஏரி அது.  வைரிசெட்டிப்பாளையம் என்ற ஊரின் மேற்குபுற எல்லையில் உள்ளது. கொல்லிமலைத்தொடரும் பச்சைமலைத்தொடரும் இணைவதை உயர்ந்த ஏரிக்கரையிலிருந்து கண்டேன் . பெயர் வைத்து நாம் தான் மலைத்தொடர்களை பிரித்து விட்டோம்.  ஏரிக்கரை ஊரின் நாயகர் சப்தரீஸ்வரர். நாயகி குங்குமாம்பாள். மிகப்பழைய கோவில். காலையில் இறைவனுக்கு மாணிய நெல் அளந்து குவித்திருந்தார்கள் போல. சாயுங்க

நேர்காணல்: லாவண்யா சுந்தரராஜன்

Image
 வாசகசாலை ஏப்ரல் மாத இணைய இதழில் வெளியான நேர்காணல் இது. எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் முதல்நாவல் காயாம்பூ . அந்த நாவலை மையப்படுத்திய நான் செய்த நேர்காணல். குழந்தையின்மை என்ற பேசுபொருளை அணுகியிருக்கும் விதம் சார்ந்து தமிழ் நாவலில் செய்யப்பட்டுள்ள முதல் முயற்சி என்று நினைக்கிறேன். எழுத்தாளருக்கும் வாசகசாலை இணைய இதழிற்கும் என்  அன்பு. 1. கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி சொல்லுங்க இந்த நாவலை எழுத ஆரம்பித்த போது இதெல்லாம் எழுதலாமா? நாவலின் மைய பாத்திரமான நந்தினியை போன்ற பெண்களின் இவ்வளவு பெரிய வலியை படைப்பாக்கும் போது அது புலம்பல்களின் திரட்டு போல ஆகிவிடுமா? இதில் எதை எல்லாம் சொல்லலாம். எதைச் சொல்லாமல் விடுவது. வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி பல மனத்தடைகள் இருந்தன. மேலும் புனைவுகளை வாசிக்கும் போது அதில் நாவலாசிரியரை தேடும் வழக்கம் எல்லா வாசகர்களுக்கும் இருக்கும். நிஜம் போல எழுதப்பட்ட புனைவு தான் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. அப்போது நாவலாசிரியர் அல்லது கதைசொல்லியின் சாயலை அதில் உலவும் கதைப் பாத்

இப்படிக்கு..:சிறுகதை

Image
 2018 சொல்வனம் மார்ச் இதழில் வெளியான கதை இப்படிக்கு …                                                                                                                    ப்ரியமுள்ள யது,  அன்றாடபாடுகளுக்கு நம்தெருவாசிகள் சென்றுவிட்ட அமைதியில் சிட்டுகளின் கிச்கிச்களும்,காகங்களின் உரையாடல்களும்,தவிட்டு குருவிகளின் ஙாஙா க்களும்,சேவல்களின் மந்தித்த கொக்கரிப்புகளும்,மைனாக்களின் ங்ங்ஙாஙா க்களும் தெருவை உயிர்ப்பிக்கின்றன.மழைமாதகாலையின்  முதல்ஔி, எதிரே உள்ள கொல்லிமலையை பசுமையாக விரித்து அங்கங்கே கருமையாய் மடித்து பிளங்களை முப்பரிமாணத்தில் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.பச்சை மாமணி போல் மேனி என்று மனம் சொல்லிக் கொள்ளும் தருணம் இயல்பாக உன்பெயரோடு இணைந்து உன்னை கண்முன் நிறுத்துகிறது.இதையெல்லாம் நீ பள்ளிச்சிறுவனாக இருக்கையில் பார்த்த நினைவிருக்கலாம். மென்பொறியாளனாகியப் பிறகு இவையெல்லாம் உன் வாயில் எழவே இல்லை.இப்போது நம் ஊர் என்பது உனக்கு விடுமுறைக்கான ஒரு சடங்கு இல்லையா? பொருள் தேடும் சென்னையின் காலைமாலைகள் குளிர் அறையில் ஒன்றுபோலத்தான் என நினைக்கிறேன்.எனினும் உன் பேச்சில் அந்த ஊரின் கால நிலைகளை

கடவுளின் டி.என்.ஏ:சிறுகதை

Image
   ஏப்ரல் புரவி ஆண்டுவிழா சிறப்பிதழில் வெளியான சிறுகதை.                கடவுளின்   டி. என். ஏ இன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானஈசனுக்கு  தெப்பத்திருவிழா. பங்குனி வெயில் ஏறுபொழுது. வியர்த்து வழிந்தது. “சாயங்காலம் தெப்பக்குளத்துக்கு போகனும். இந்த நேரத்துல புத்தகஅலமாரிய எதுக்கு குடையற,” “போகனுமா?” “வருஷா வருஷம் தெப்பத்திருவிழா வந்துச்சுன்னா உன்னோட இதே தொல்லை…வயசானவா பாக்கனுங்கறா. புத்ர சோகம் என்னான்னுட்டு தெரியுமாடீ?   அவா வீட்டுக்குத்தான் போக மாட்டிக்கற. பொது எடத்துலயாச்சும் பாக்கலாமில்லையா. உன்னைய கெளப்பி அனுப்பறதுக்குள்ள இன்னிக்கு இன்னொரு பீ.பி டேப்லட் போடனும்,” என்ற அம்மாவின் குரல் பின்கட்டு வரை தேய்ந்து மறைந்தது. புத்தக அடுக்கின் பின்வரிசையில் இருந்த கடவுளின் டி. என் .ஏ தரையில் விழுந்தது. செல்வா கல்லூரி மாணவனாக இருந்த போதே வெளிவந்த முதல் கவிதைத் தொகுப்பு.  என்னுரையில் ‘இயற்கையின் அமைதியில் எனக்குள் என்னையே நோக்கிய நொடியில் இல்லாமல் போனேன். இறைவனானேன்’ என்ற வரி அவளை புன்னகைக்க வைத்தது. இறைவன் என்ற சொல்லை செல்வா கண்டபடி பந்தாடுவான். சில நேரங்களில் சிக்ஸராக விளாசுவான். சில நேரங்களில் ஸ்