மழையையே பார்த்துக்கொண்டு கைகளை மறந்து போனேன்... சட்டென்று குனிந்து பார்த்தேன் என் வெல்லக்கட்டி எப்போதோ கரைந்து போயிருந்தது. வெல்லக்கட்டியை வைத்திருந்த கையையும் வழிந்தோடும் நீரையும் மாறி மாறி பார்த்தேன். கலங்கல் நீரில் ஒன்றுமில்லை. குழிந்திருந்த மறுகையின் உள்ளங்கை நீருக்கு குளிரின் சுவை.
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி