நீரென எழும் காலம் எங்கும் நீர் நிறைந்து நப்புத்தட்டி முடங்கிக் கிடக்கிறது ஊர். தட்டியெழுப்ப எண்திசைகளிலிருந்தும் எழும்சாமிகள் உடுக்கையோடும் முழவுகளோடும் தெருக்களில் நடமாடும் இரவுகளில்… அவன் குளிரென எழுகிறான். ஒவ்வொரு வீடாக திண்ணையில் அமர்ந்து இற்றுப்போனவைகளை சேர்த்துக்கட்டி வடக்குநோக்கி விரைகிறான். சாமிகள் செய்வதறியாமல் வழிவிட்டு நிற்கின்றன. ஊரெங்கும் பரவிக்கிடக்கும் ஈரக்குளிரை இருளோடு போர்த்திக்கொண்டு ஒலிக்காத தண்டைகளுடன் நடந்து செல்கிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் காலம் தன்னை உலுக்கிக்கொள்கிறது. ...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி