Posts

Showing posts from August, 2022

காதலும் வீரமும்

Image
             2019 நவம்பர் 1 வாசகசாலை இணைய  இதழில் வெளியான   கட்டுரை. இந்தக் கட்டுரை வெளியானது எனக்கு மறந்திருந்தது.  அண்மைய வாசிப்பில் புத்தகங்கள் உணர்த்திய அசலான   'வன்முறை' மனதில் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகளும்,கேள்விகளும் இந்தக் கட்டுரையை நினைவுபடுத்தியது. இதை எழுதிய அன்றை விட இன்று இந்தக் கட்டுரை எனக்கு முக்கியமானதாக தெரிகிறது.                      காதலும் வீரமும் காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய எழுதும் எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு.  குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாக கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என்பக்கத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து என் மடியில் கால்நீட்டி கதை சொல்லு என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். சங்கோஜத்துடன் என்னைப்பார்த்து திரும்பியவள் நான் புன்னகைத்ததும் மகனிடம் திரும்பிக் கொண்டாள். நானும் காக்காவா,நரியா,சிங்கமா,புலியா,ராஜகுமாரியா,குமாரனா என்று காத்திருந்தேன். ஒரு ஊர்ல உன்னையாட்டமே ஒருபய இருந்தானாம்…மொசக்குட்டிப்பல்லு..லட்சண குஞ்ஜைய்யாவாம் என்று அம்மா

அகமும் புறமும் : 2

Image
                 2022 ஆகஸ்ட் 1,வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.             மொட்டவிழும் கணம்                                  ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? அகநானூறு:82     பாடியவர்:கபிலர்   திணை:குறிஞ்சி அகநானூற்றில் களிற்று யானை நிரை என்ற முதல் பகுப்பில் வரும் பாடல். தலைவி தோழிக்கு கூறியது. ‘அவனை ஆயத்தார் பலரும் கண்டாரென வந்தோன் முட்டியவாறும்,அவருள் நெகிழ்த்தோளான் யானே எனத் தானே கூறியவாறும்’ காண்க,என்பர் நச

ஒரு பந்தலின் கீழ்: சிறுகதை

Image
 2019 பிப்ரவரி சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை ஒரு பந்தலின் கீழ் கோடையின் ஈரம் கழுத்திலும் நெற்றியிலும் தன்இருப்பை உணர்த்த, பால்காரரின் ஷாரன் ஒலி கேட்டு கோகிலா பாயிலிருந்து கண்விழித்தாள்.மெல்லிய ஔி எழுந்திருந்த வானம் ஒருசித்திரம் என கண்முன்னே விரிந்தது.மொட்டைமாடியில் மென்மையான தண்மையைத் தவிர காற்றில்லை.வீடுகளை அடுத்த வயல்களில் தென்னைமரங்கள் மட்டும் வானத்தை நோக்கி பூமி நீட்டிய காம்புநீண்ட ஒற்றை பூவென ஆங்காங்கே நின்றிருந்தன.அதற்குள் ஔி மேலும் தெளிந்திருந்தது. தெருவின் தெற்குமுனையிலிருந்து ஒருசிறு பெண் அவளின் அம்மாவை ஒத்தவருடன் தோளுரச நடந்து வந்துகொண்டிருந்தாள்.வயது பதினைந்திற்குள் இருக்கலாம்.யார்? யார்? என்று மனம் தேடியலைந்தது.ராசுதாத்தாவின் வீட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தாள். அமுதா ...என்று இதயத்தினுள் படபடக்க கைப்பிடி சுவர் அருகே நின்று தன்வீட்டின் முன் நடந்துசெல்லும் அவளைப் பார்த்தாள்.இவ்வளவுபக்கத்தில் அவள் யாரோ என்றிருந்தாள்.மீண்டும் கண்ணெட்டும் தொலைவில் அமுதாவானாள்.பால்யத்தின் கோடைவிடுமுறை நாட்களில் மனதிற்குள் புதைந்த அவள், கண்முன்னே சாயலாக தெரியும் இந்நேரம் , கண்ணாமூச்சி விளையாட்ட

குருதியுறவு :கதை

Image
    2019 ஜூன் வாசகசாலை இணய இதழில் வெளியான கதை.                                                                   குருதியுறவு                                                                                                      1                                     கருக்கிலேயே மூர்த்திக்கு  விழிப்புத்தட்டி விட்டது.படுக்கையிலிருந்து எழுந்து நின்ற போது இடதுகால் தள்ளாடியது.படுக்கையிலேயே அமர்ந்து காலை பிடித்துவிட்டபடி இருளுக்குள் பார்த்துக்கொண்டிருந்தார்.ருக்மணி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.அரவம் கேட்டு விழித்துவிடக்கூடாது என்று மெதுவாக வெளியே வாசலுக்கு வந்தார்.இடதுகாலில் நடுக்கம் இருந்து கொண்டிருந்தது. இரவெல்லாம் உறக்கம்பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த அயர்வு உடலில் எஞ்சியிருந்தது. ஒரேஇரவில் அவரின் மனதின் உள்ளே பலஆண்டுகள் புரண்டு கொண்டிருந்தன.பெருமூச்சு எழ கைகளை நீட்டி மடக்கியபடி திண்ணையில் அமர்ந்தார்.பால்காரன் மின்னல் வேகத்தில் கடந்து சென்றான்.நான்குமணி இருக்கலாம் என்று நினைத்தபடி திண்டில் சாய்ந்து வானத்தைப்பார்த்தார்.கோணல் பிறை தனித்து நின்றிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த

முதல்பயணி

Image
                             முதல் பயணி மழைமுடித்த சாலை யாருமற்று கருமையாய் நீண்டு செல்கிறது... முதல் பயணியாய் அப்போதுதான் சுடர்ந்த தெருவிளக்கு வெளிச்சம்

மீண்டும் ஒரு சந்திப்பு: சிறுகதை

Image
       தமிழினி  ஏப்ரல் இதழில் வெளியான சிறுகதை               மீண்டும் ஒரு சந்திப்பு தை மாதத்தின் பின்பனி புகைமூட்டம் சென்னையின் சாலையில் நகரும் திரை என நடக்க நடக்க முன் சென்று கொண்டிருந்தது. சற்று மூச்சு வாங்க சாலையோர சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பின்னால் பன்னீர் மரம். இரவில் மலர்ந்த மலர்களின் நறுமணம் என்னைச் சுற்றி பரவியிருந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டதும் மனதிற்குள் ஒரு சின்ன குதூகலம் போன்ற உணர்வு. பள்ளிக்கூடத்து மைதானம் நினைவிற்கு வந்தது. பக்கவாட்டிலிருந்த சுற்றுசுவரை தாண்டி எட்டிக்கொண்டிருந்த செம்பருத்தி கிளையின் இலைகளில் இருந்து பனிநீர் ஒவ்வொரு சொட்டாக விழுவது போடியம் விளக்கொளியில் படக்காட்சி போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அடுத்த சொட்டு  தாமதமாக நீட்டிய என் கைகளிலிருந்து தப்பியது.  சென்ற மாதத்திலிருந்து எழுபது வயது முடிந்துவிட்டது. கடற்கரைக்கு செல்ல மாலாவிடம் அனுமதி கேட்டவுடன் வயதை முதலில் சொல்லிக்காட்டினாள். விடிஞ்சு போனா என்ன? என்று கேட்டாள்.  குளிர்ஆடையின் பைகளில் கைகளை நுழைத்து அன்னாந்து மேலே பார்த்தேன். முகத்தில் விழுந்த துளி நீரால் முழு உடலும் அதிர்ந்தது. தலைக்கு மாட

அகமும் புறமும் _ 1

Image
  வாசகசாலையின் இணைய  இதழில் சங்க கவிதைகள் சார்ந்து புதிய தொடர் ஒன்றை எழுத உள்ளேன். இதுதான் என னுடைய முதல் 'தொடர் எழுதும் ' முயற்சி. இதற்காக என்னுடைய வாழ்வனுபவத்திற்கும், நான் கேள்விப்பட்ட மனிதர்களின் வாழ்வனுபவத்திற்கும் ஒத்துப்போகும் பாடல்களை தேடுவது தான் சவாலானது. நிறைய கவித்துவமான பாடல்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான அனுபவம் எனக்கு கிடைக்கும்போது ஒருவேளை மீண்டும் எழுதலாம். இந்த சிறிய வாழ்வின் எல்லைக்குள் எத்தனை சங்கப்பாடல்களுக்கான அனுபவங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஏற்கனவே உணர்ந்த சில தருணங்கள் சட்டென தெளிந்து வருகின்றன. பாடல்களை வாசிக்கும் போது சில வாழ்க்கைகளை புதிதாக இணைத்து கொள்ள முடியலாம். நானே என்னுள் இருப்பவற்றை தேடி கண்டடையும் அனுபவமாகவும், உணர்ந்தவைகளை பகிரும் அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் நன்கு அறிந்த சில சங்கப்பாடல்கள், என் வாழ்வின் வெளிச்சத்தில் எனக்கு என்னவாக இருக்கின்றன என்பதாகவும் இருக்கலாம். செங்காந்தலின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே  இலக்கியங்கள் தன் ஆன்மாவாக கொண்டிருக்கின