Posts

Showing posts from December, 2021

தொடக்கம்

Image
  2021 ன் தொடக்கத்தில் எனக்கான ஒரு வலைப்பூவை தொடங்கி எழுத வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஜூலை மாதம்தான் எழுதத் துவங்கினேன்.  தாமதம் என்று நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை இது இயல்பானதே. எதையும் நினைத்ததும் செய்யக்கூடிய இயல்பு எனக்குக் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செய்கிறேனா என்ற பரிசீலனைக்குப் பிறகே எப்போதும் செய்கிறேன். எழுத்து மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு. இப்படி ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை யோசித்தே தீர வேண்டிய வாழ்க்கை சூழல் பெண்களுக்குரியது. பெண்ணியம் பேசுவதாக சலித்துக்கொள்ள வேண்டாம். இந்த இயல்புதான் என் எழுத்து செயல்பாட்டின் ஆதாரமாக சொல்வேன். இல்லை என்றால் என் வாழ்க்கை எழுத்தல்லாத பாதையில் எங்கோ சென்று ஒன்றுமில்லாததாக மாறியிருக்கும். இங்கு பெண்களின் சிறு சிறகசைப்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அது மிகச்சரியாக அவர்கள் அறியாமலேயே களையப்பட வேண்டியதாக முதலில் தாய்  தந்தையர்களை சமூகமும், குடும்பமும் எச்சரிக்கின்றன. "பொம்ளப்பிள்ளய எதுக்கு பள்ளிக்கூட புத்தகத்து மேல கதை புத்தகங்கள் படிக்கவிடனும். சொன்னப்பேச்சு கேக்காது ...வீட்டு வேலையப்பழக்குங்க..

தமிழ் சிறுகதைகள் இன்று

Image
 தமிழினி இதழில் 'தமிழ் சிறுகதைகள் இன்று' என்ற தலைப்பில் இன்றைய  சிறுகதையாளர்களை பற்றிய கட்டுரைத்தொடர் வெளியாகிறது.   இதை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதுகிறார். எழுத்தாளர்கள் தூயன்,சுரேஷ்பிரதீப்,சித்துராஜ் பொன்ராஜ்,ராம்தங்கம்,கிருஷ்ணமூர்த்தி,அனோஜன் பாலகிருஷ்ணன்,கார்த்திக் பாலசுப்ரமணியன்,சுனில் கிருஷ்ணன்,மயிலன் ஜி.சின்னப்பன் ஆகியோரது கதைகள் பற்றிய கட்டுரைகளை தமிழினியில் எழுதியுள்ளார். நவம்பர் இதழில் என் கதைகளை பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. என் பெரும்பாலான கதைகளை தேடி எடுத்து அதன் சிக்கல்களுக்கு தலைகொடுத்து ,சலிக்காமல் சிலமுறை வாசித்து அதற்குரிய அக்கறையை தந்து இந்தக்கட்டுரையை எழுதிய எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். தொடக்கத்திலிருந்து இதுவரை நான் எழுதிய கதைகள் பெரும்பாலானவற்றை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளருக்கும் தமிழினி இதழிற்கும் நன்றி.   https://tamizhini.in/2021/11/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%a

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

Image
 நவம்பர் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல். எழுத்தாளருக்கும் புரவிக்கும் அன்பு. எஸ்.ரா என்று ப்ரியத்துடன் அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்றைய தமிழிலக்கியத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவர். நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய அவரின் சஞ்ரசாரம் எனும் நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது. நோய்கள் பற்றியும் அதன்வேர்க்காரணங்களாக இருக்கூடிய மனிதஆழ்மன சஞ்சலங்கள் பற்றியும்,எது நோய்மை? என்பது குறித்தும் விரிவான பின்புலத்தில் எழுதப்பட்டநாவல் ‘துயில்’. இது துயிலை மையப்படுத்திய நேர்காணல். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல் 1.நோய்மை என்பது வாதையா மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்க சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது?  நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்துவி டுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் சில முடிவுகளை எடுத