Posts

Showing posts from July, 2022

அன்பில் : சிறுகதை

Image
       2019 ஏப்ரல் 10 பாதாகை இதழில் வெளியான  சிறுகதை          அன்பில் தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின்புறம் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டது கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தினார். சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார். சற்று மூச்சுவாங்கியது.அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது. இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா? என்று தோன்றியது. இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழேவந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்தவயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்துவிட்டு சரிசெய்து திரும்பினார். வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம் திருச்சியின் நம்பர்ஒன் டோல்கேட் என்று அவர்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும். இதோ

மைத்ரி : நாவல் வாசிப்பனுபவம்

Image
 புரவி ஜூலை இதழில் வெளியான கட்டுரை.              பேரெழிலின் சங்கமங்கள் எழுத்தாளனுடைய, கவிஞனுடைய, இசைக்கலைஞனுடைய, ஓவியனுடைய, சிற்பியுடைய, யோகியுடைய பார்வையிலிருக்கும் அதே பாவத்தோடு ஒன்றிப் போகச்செய்யும் போது படைப்பாளனும் நுகர்வோனும் ஒரு பிறப்புகணத்தின் இரு பகுதிகளாகின்றனர்.                                  _ நித்ய சைதன்ய  யதி                    நாவலாசிரியர் அஜிதன் உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல். மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு நிலைகள். மனமும் மனமும் சங்கமிக்கும் இடங்கள். ஆணும் பெண்ணும் சங்கமிக்கும் இடங்கள். இறுதியில் தானே தன்னை அறிந்து தன்னுடன் சங்கமிக்கும் ஒரு அறிதல் நிலையில் நாவல் முடிகிறது. மேலே கூறியவை எழுத்தாளர் அஜிதனின் ‘மைத்ரி’ நாவலை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு நிலை. இந்த நாவல் அஜிதனின் முதல் நாவல். மேலே உள்ள வரிகளை எழுதும் போது  புன்னகை எழுகிறது. இங்கு அனைத்துமே சங்கமம் தானே. பிரிவும் கூட

எழுத்தாளர் திருச்செந்தாழை

Image
 எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு இலக்கியத்திற்கான புதியதலைமுறை தமிழன் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். கண்விழித்ததும் பார்த்த முதல் செய்தி. உடனே அவரின் கதைகள் மனதில் சுழன்றன. அவற்றைப்பற்றி நான்கு வரிகளாவது எழுதிவிட வேண்டும் தோன்றியது. நேற்று முன்தினம் தமிழினி இணையஇதழில் திருச்செந்தாழையின் வீழ்ச்சி சிறுகதை வாசித்தேன். அந்தக்கதை மனதிலேயே சுழன்று கொண்டிருந்ததால் சமைக்கும்போது அம்மாவிடன் கதையாக கூறினேன். ஒரு வாசகியாக செந்தாழையின் கதைகளில் என்னைத் தொட்டு அசைப்பவை அவரின் கதைமாந்தருக்குள் இருக்கும் 'வெகுளித்தன்மை' . வியாபாரத்திற்கு சரியான எதிர்நிலை என்றால் அது வெகுளித்தனம் தானே. வியாபரம் என்பது எத்தனை பெரிய ஆடுகளம். வியாபாரத்தை ஒருவர் கையிலெடுக்கும் போது முதலில் எழும் எண்ணம் வீழ்ச்சி பற்றியதாகத்தான் இயல்பிலேயே நமக்கு எழுகிறது. வியாபாரத்தை கதைக்களனாக் கொண்டு எழுதும் போது வியாபாரத்தில் வெல்லும் ஒருவரை விட தோற்கும் ஒரு கதாப்பாத்திரம் நம்மை பதட்டமடைய வைக்கிறது. பொதுவாக வியாபாரத்தில் வெல்லும் தலைமுறைக்கு அடுத்தத்தலைமுறை வியாபார சூட்சுமங்களை மன

வெய்யிலின் மொழி

Image
 2019 பிப்ரவரி 9 சொல்வனம் இணைய இதழில் வெளியான கதை வெய்யிலின் மொழி            சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே சசியை சுற்றிச்சுற்றி வந்தது.இது எப்பவும் இப்படித்தான்.இங்கு வரும் நாளைத் தவிர அடுத்தக்காலையிலிருந்து அவ்வப்போது நாட்களை மணிக்கணக்காகப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் மனம். சசி சமையலறைக்கு வெளியிலிருந்த தாழ்வாரத்திலிருந்து படுக்கையறையை எட்டிப்பார்த்தாள்.சீரான மூச்சுடன் கங்கா படுத்திருந்தான்.முன்பிருந்ததைவிட உடல் இளைத்திருக்கிறான்.நிறம்கூட மாறியிருக்கிறது.இவன் யார் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் துணுக்குற்று பார்வையை மாற்றினாள். “எட்டி…எட்டி பாத்துக்கிட்ருக்காம சாப்பிடு சசி,” “நீங்களும் மாமாவும் காட்டுப்பெருமாள் கோயிலுக்கு போகனுன்னு சொன்னீங்க…போயிட்டு வாங்க,”என்றாள். “பரவாயில்ல…பாத்துக்கலாம்,” “நான் அடுத்தவாரம் வரமுடியுமான்னு தெரியல…நீங்க கெளம்புங்க,”என்றபடி எழுந்தாள். மாமா,“பத்து நாளுக்கு முன்ன விரல அசச்சான்.அப்பப்ப அசக்கிறான்…நம்ம பேசறத கேட்டுதான் விரல அசக்கிறான்னு டாக்டர் சொன்னார்…இப்ப என்னாச்சுன்னு தெரியல,”என்றபடி முற்றத்தைக் கடந்தார். அவர்கள் கோயிலுக்கு சென்றதும் சசி

மெல்ல உருகும் மெழுகு

Image
 நேற்று மக்தலேனால் திருவிழா. கோட்டப்பாளையத்தின் மிக முக்கியமான திருவிழா. பதினைந்திற்கும் மேற்பட்ட சுற்றுபுற கிராமங்களின் திருவிழா. மதஒற்றுமை இயல்பாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி நடக்கும். ஜூலை இரண்டாம் வாரம்  கொடியேற்றப்பட்டு திருவிழாத் தொடங்கும். முதல் வேளையாக பெரிய பெரிய மிட்டாய் கடைகளுக்காக சாரம் கட்டப்படுவது நடக்கும்.  ஊரின் முச்சந்தியிருந்து பிரியும் மூன்று முக்கியத்தெருக்களை நிறைத்து கடைகள் போடப்படும். எங்கள் பக்கம் நடக்கும் திருவிழாக்களில் இங்குதான்  பெரிய திருவிழாக்கடைகள் நடத்தப்படும். புரியும்படி சொன்னால் பெரிய தெருவோர shopping mall . மண்பானைகளிலிருந்து விவசாயக்கருவிகள், பீங்கான் பாத்திரங்கள், அரிவாள் கொடுவாள், சமையல் பாத்திரங்கள், சாவிக் கொத்துகளுக்கான தனிக்கடைகள், உலக்கை ,மரக்கால் முதல் பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,கல்லால் செய்யப்பட்ட பாத்திரங்கள்,நெல் உளுந்து சலிக்கும் இரும்பு சல்லடைகள் என்று வகைப்படுத்துவது கடினம். சகலமும் கிடக்கும் என்று உண்மையாகவே சொல்லலாம்.  இதன் காரணமாக கடைசியாக மலையடிவாரத்தில் இருக்கும் எங்கள் ஊருக்கு மூன்றுநாட்

உயிர்த்தெழல்: சிறுகதை

Image
 ஜூன் 16, 2022 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை. உயிர்த்தெழல் எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்  வரை காலமுண்டு. காலத்தின் நினைவாக எஞ்சுவது எதுவாக இருக்கும். என் அன்பரின் சொற்களே  இனிவரும் காலத்தின் நினைவாகும். காலத்தை முன் பின் என பகுக்கும். இதோ அவர் எருசலேமின் மதிலிற்கு வெளியே சிலுவையில் நிற்கிறார். எருசலேம் பாறைகளின் நிலம். இந்த பாறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர். அவர் எப்போதும் மதில்களை  அன்பின் பொருட்டு பொடித்துக் கொண்டே இருந்தார். என் மனதின் மதில்களை கணத்தில் உதிர்த்தவர். இங்கே எத்தனை எத்தனை மதில்கள் நீண்டு கிடக்கின்றன. காற்றென மதில்களைக் கடக்கும் அவரின் சொற்களின் பொருட்டு இப்போது அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். சொற்களை சிலுவையில் அறைய முடியும் என்று நம்பி அறைந்திருக்கிறார்கள். எருசலேமின் நீண்ட கல்மதிலில் புழுதிக்காற்று மோதித் திரும்புகிறது.  மற்றவர் ரணங்களை தன் சொற்கள

மித்ரா :சிறுகதை

Image
 சொல்வனம் 2018 அக்டோபர் 13 இதழில் வெளியான கதை மித்ரா      மித்ரா பேருந்தின் மூடியிருந்த கண்ணாடிசன்னலை இழுத்துவிட்டுக் கொண்டு அமர்ந்தாள்.நெல்லங்காடு நீண்டு சென்ற பாதையின் வளைவில் ,ஆதவன் மேகங்களை கங்குகளாக்கிக் கொண்டிருந்தான்.பேருந்தில் விக்னவிநாயகா….என்று பாடல் ஒலிக்கத்துவங்கிய நேரத்தில், கள்ளுக்கடை முடக்கில் பேருந்து நின்றது.ஔி படர்ந்த பச்சை வயல்களில் இருந்து கண்களைத்திருப்பிய மித்ரா தன்னையறியாமல் புன்னகைத்தாள். ஆனந்தாநீலத்தில் மென்பழுப்பு நிற பூக்கள் நிறைந்த சேலையில் மேனகா! மித்ரா மேனகாவை பார்த்து ஆண்டுகளாகின்றன.தொலைவு என்பது இடமோ நேரமோ மட்டும் தானா? என்று மித்ரா நினைத்தாள்.மேனகா இடதுகையால் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்தாள்.அதைப் பார்க்கையில் தான் அவள் கர்பிணி என்பது மித்ராவுக்குத் தெரிந்தது.மித்ராவின் முன்னிருக்கையில் அமர்ந்தாள். மித்ரா அழைக்க எத்தனித்த நேரத்தில் நடத்துநர் வந்து மேனகாவிடம் பேசத்தொடங்கினார். “மச்சான் இப்ப எப்படி இருக்கார்?” “ம்..அப்படியேதாண்ணா,” “துறையூருக்கு தனியாவாம்மா…”என்று பேசியபடி சீட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.அடுத்த நிறுத்தத்தில் அவளருகில் செல்ல மித்ரா நினைத்

உள்புண்

Image
 2018 ஆகஸ்ட் 11 பதாகை இதழில் வெளியான சிறுகதை உள்புண்                                                                      பின்புறம் துணிக்காய வைக்கும் இடத்திலிருந்து அப்பா, “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க,வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க,”என்று தன் அடைத்தக்குரலில் வெட்டிவெட்டி  பாடிக்கொண்டிருந்தார். கார்த்திகா முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்தாள். முற்றத்தில் பாத்திரங்கள் கழுவிய ஈரம் அவள்கால்களுக்குக் கீழே பிசுபிசுத்தது. “அம்மா…ஒழுங்கா கழுவிவிட மாட்டியா…யாராச்சும் விழப்போறாங்க பாரு,”என்று நைட்டியை தூக்கிப்பிடித்தபடி கத்தினாள். “படிக்கறப்பதான் ஒன்பதுமணிக்கு எழுந்திருச்ச.இப்போ வேலைக்கு போயும் அதே பொழுது.நான் எந்த வேலையென்னு செய்யறது.இன்னிக்காச்சும் ஒத்தாசையா இருக்கலாம்ல,”என்று சொல்லும் பொழுதே கடையிலிருந்து, “அக்கா….போட்டுக்கடலை வேணும்,”என்ற குரல்கேட்டு அம்மா முற்றத்திலிருந்து கடையின் பின்புறம் ஏறினாள். “கார்த்திய பொண்ணு பாக்க வரவங்க நல்ல பெரிய இடமாமே?இதுக்குன்னுதான் இவ்வளவு நாளாச்சுன்னு நெனச்சி பட்டுன்னு முடிங்க.இவ சித்தப்பன் மவ ரெண்டு  பிள்ளகள பெத்து பெரிய மனுசியாயிட்டா,”என்று ரத்தினம் அ