பதின் வயதில் இந்த அல்லிக்குளத்தில் சாய்ந்து கொண்டு முதன்முதலாக தென்றல் பற்றி சொந்தமாக இருபது வரிகள் எழுதினேன். தென்றல், கடல், மலை என்று தலைப்புகள் கொடுத்து இருபது வரி கவிதை எழுதுவது தான் வீட்டுப் பாடம். விடுதியில் இருந்ததால் பள்ளி முடிந்தப்பின் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இந்த குளத்தின் வலது ஓரம் என்னுடைய இடம். நேற்று தங்கை நிவேதா பொதுத்தேர்வு கணிதத்தாள்களை திருத்தும் பணிக்காக முசிறி அமலா பள்ளிக்கு சென்றாள். எனக்காக பள்ளியை புகைப்படம் எடுத்து வந்தாள். 'பையனோ பெண்ணோ தெரியல நூறு மார்க் போட்டேன் கமலா.. ஒரு சின்ன தப்பு இல்லை.. ஆறு பேர் மறுபடி மறுபடி திருத்தம் பாத்தாங்க.. என்று பரவசமாக சொன்னாள். கணிதப்பிரிவு வேண்டாம் என்று இங்கு தான் நான் உறுதியாக சொன்னேன். நான் விரும்பிய சிறப்பு தமிழ் பிரிவு வேண்டாம் என்று அய்யா உறுதியாக இருந்தார். அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டு தமிழில் எதையாவது சொந்தமாக எழுதி பழகியதும் இங்குதான். பத்தாம் வகுப்பு வரை வீட்டில் கல்கியின் கதைகள், கல்கி மாத இதழ்,இந்தியா டுடே, ராமகிர...