Posts

Showing posts from January, 2023

அறம்: தாயார்பாதம்

Image
 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும்.  நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என்  முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை.  'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும். இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும்.  அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும். ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்கு மிக நெருக்கமான

இலை

Image
பொழிதலால் நீர் கரைதலால் மண். பெருமழைக்காலம். வேடிக்கைப் பார்க்க தன்னை முழுதும் நீட்டி நிற்கிறது இலை.

ஆழி : என்னுரை

Image
                  எழுத்துமுன்னோடிகளுக்கு எப்பொழுதும் என் பேரன்பும் வணக்கங்களும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு. முதலும் முடிவும் அற்ற முழுமை மனித மனத்தின் உணர்வுநிலைகளை மாற்றத்திற்கு உள்ளாகும் ஒன்றாகவே நாம் பார்க்கிறோம். ஆனால் மொத்தமாக மானுடம் என்ற அளவில் பார்த்தால் உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுதல் என்பது  மாறாத நியதி. மானுடம் என்ற எல்லையை கடந்து உயிர்க்குலத்திற்கு பொதுவான நியதி. அடிப்படைஉணர்வுகளை நியதிகள் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மாற்றத்திற்குள்ளாகும் ஒன்றை நியதி என்று எப்படி சொல்வது?  தனி மனிதனுக்குள் உணர்வுகள் கொந்தளித்து மாறிக்கொண்டே இருக்கின்றன. மானுடத்திரளிற்கு ‘மாறிக்கொண்டே இருக்கும் உணர்வுகள்’ பொதுவானவை என்பதால் அவை அடிப்படை உணர்வுகள் என்ற இடத்தில் இருந்து  நியதியாகவும் ஆகிறது.  நம்பள்ளி வயதில் கணித வகுப்பில் கைகளில் காம்பஸ்ஸுடன் அமர்ந்த அந்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். தொடங்கிய வட்டத்தை முடிக்கும் பதட்டத்துடன்,நம்முடைய அனைத்து புலன்களையும் அந்த சிறுபுள்ளியில் குவித்து அந்த வட்டத்தை நிறைவு செய்யத் தொடங்கினோம். சிலருக்கு முதல் முயற்சியில்  சரியான வ

வெந்தழலால் வேகாது : 1

Image
    எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகிரிசாமி நூற்றாண்டில் அவர்களின் சிறுகதைகள் குறித்த வாசிப்பனுபவக் கட்டுரைத்தொடர்  ஒன்றை புரவி இதழில் எழுதுகிறேன். நவம்பர் 2022 இதழில் வெளியான கட்டுரை.    ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்?  நாம் காலத்தை நூறுநூறு ஆண்டுகளாக பிரித்து கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும் தான். தொடக்கமும் முடிவும் அற்ற ஒன்றின் முன் நிற்கும் பதற்றம் மனிதனுக்கு மட்டுமேயான தனித்த உணர்வுநிலை.  காலத்தின் முன்னால், இலக்கிய செயல்பாடு என்பது மனிதன் தன்னை நிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் தலையாயது என்று நினைக்கிறேன். ஊழித்தீ என்பது காலம் தான். அது அணுகணத்தையும் எரித்து  ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. நாமே அணுகணமும் எரிந்து கொண்டேயிருக்கும் ஊழித்தீயின் சின்னஞ்சிறு வடிவம் தானே. காலம் தன்னை நிகழ்த்திப்பார்க்கும் களம் நாம். நாம் நம்மை  நிகழ்த்திப் பார்க்கும் களம் கலைஇலக்கியம்.  நிலையின்மை என்ற பதற்றத்திற்கு  மாற்றாக ந

சக்யை _ ஒரு நினைவு

Image
  பதின்வயதின் கனவு எழுதும் ஒவ்வொருக்கும் முதல் நூல் என்பது எத்தனை ஆண்டுகளின் கனவு. எழுதத்தொடங்கும் முன்பே பதின் வயதில் மனதில் விழும்விதை. என்னுடைய முதல் புத்தகத்திற்கு நான் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை.  சொல்வனத்திலும் பதாகையிலும் சிறுகதைகளும்,வாசிப்பனுபவங்களும் எழுதிக்கொண்டிருந்தேன். இணையவெளியில் என் கதைகள் இருக்கின்றன என்பது எனக்கு போதுமானதாக இருந்தது. வெளியில் சென்று செய்யும் அளவிற்கு என் அகப்புற சூழல்கள் இல்லை. ஆனால் 2016 ல் இருந்து தொடர்ந்து இடைவிடாது எழுதிக்கொண்டிருந்தேன்.  திடிரென்று ஒருநாள் இரவு சொல்வனம் மைத்ரேயன் அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. வாசகசாலை என்ற அமைப்பு உங்கள் கதைகளை புத்தகமாக வெளியிட விரும்புகிறார்கள். உங்கள் அலைபேசி எண்னை அவர்களுக்கு கொடுக்கட்டுமா என்றும், அது என்ன அமைப்பு என்று நான் விசாரித்துவிட்டேன்...கதைகளை கொடுக்கலாம். எழுதியவை புத்தகமாக வெளிவருவது நல்லது என்றும்  எழுதியிருந்தார். வாசகசாலையில் இருந்து முதலில் தம்பி ப்ரவீன் தான் பேசினான். பின் கார்த்திகேயன் வெங்கட்ராமன் பேசினார். கதைகளை தருகிறேன் ஆனால் வெளியீட்டிற்கு வர முடியுமா? என்று தெரிய

விட்டுச்செல்லல்

Image
  மார்கழியின் அந்திசூரியன்  கொல்லிமலையின் பின்னே மறைந்த பின்... இருள் வந்தும்  தென்மேற்கு மூலை சிவந்திருந்தது, மறைந்த சூரியன் அந்த சிகரத்தின் உச்சியில் ஒரு வீண்மீனை விட்டுச் சென்றிருந்தது. சூரியனைப் போலவே, அத்தனை பிரகாசத்துடன் மினுங்கிய அதை... இமைக்காமல் பார்த்த கண்களின்  ஈரம் மாற்ற அன்னாந்து பார்த்தேன், வானெங்கும் சிவந்த துளிகளாய் அத்தனை விண்மீன்கள்.