Skip to main content

Posts

Showing posts from March, 2022

மூச்சே நறுமணமாக

2022 மார்ச்மாத சொல்வனம் இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை. சிவகாமி நேசன் எனும் இனிமை பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார்.  அவை ‘மூச்சே  நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல்,ஒலி,கவித்துவம்,மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான்  அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன்.  நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவன...

எல்லைகளை விரித்தல்

 சொல்வனம் இணையஇதழில் வெளியாகும் எனது கதைகளுக்கு சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவம் தருகிறார். இது மாதிரியான முயற்சிகள் வாசிக்கமுடியாதவர்கள்,முதியவர்கள்  என்று பலதரப்பட்ட வாசகர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவி. இது அவர்கள் மற்றொருவர் உதவியின்றி தன்னிச்சையாக, தன் நேரத்திற்கு கதைகளை கேட்பதற்கான அழகான வழி. அதற்காக சொல்வனத்திற்கும் ,சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு. மத்தளம் கொட்ட சிறுகதைக்கான சுட்டி https://youtu.be/4U0ecR_wT6w

ஊற்றுகள்: சிறுதை

      2017 ஜூலை சொல்வனம்  இணைய இதழில் வெளியான    சிறுகதை                ஊற்றுகள்                   அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு ஃபோர்வண்டியின் ஒலி எழுந்தது. அது முடக்குவேம்பைக் கடந்து நின்றது. பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன. அப்போதுதான் அசந்துபடுத்த நாய்கள் சுழன்றெழுந்து குறைத்து, பின் நிதானம்கொண்டு சுற்றிவந்தன. மாசிமாதகிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிற கூரைவீடுகளும்,முற்றம் வைத்த மஞ்சள்ஓட்டுவீடுகளும்,தகரம்வேய்ந்த மண்வீடுகளும்,மில்லினியத்திற்குப் பின் கட்டிய பச்சை,ரோஸ்,ஊதா நிற திண்ணைகள் இல்லாத சிறுமாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது. இரும்புக்குழாய்களை இறக்கிபோட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர். வெயிலேறத் தொடங்கியது.  வயல்வேலையில்லாததால் ஆட்டுமாட்டிற்கு தண்ணீர்காட்டி ,தீனிபிடுங்கிப் போட்டுவிட்டு வந்தவர்கள் அந்தஇடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீ...

பொன்சிறகு சிறுகதையின் ஒலிவடிவம்

சொல்வனம் இணையஇதழின் யூடியூப் சேனலில் வாசிக்கப்பட்ட கதை. வாசித்தவர் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அதற்கான சுட்டி: https://youtu.be/1xT_sUWifm8

அமுதம் சிறுகதையின் ஒலிவடிவம்

 சொல்வனம் இதழில் வெளியான அமுதம் என்ற கதையின் குரல் வடிவம். நன்றி: சொல்வனம் மற்றும் கதைக்கு குரல் கொடுத்த சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.  https://youtu.be/haIBNtdI5MI

ஊசல் :சிறுகதை

 2017 ஜீன் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை   ஊசல் கல்லூரி நூலகக்கடிகாரத்தின் ஊசல், சட்டியில் பயறை வறுக்கும் கரண்டியென இடவலமாக ஆடிக்கொண்டிருந்தது.அனைத்து நொடிகளும் ஒன்றேயான முடிவிலாக் காலத்தின் சாட்சியென நினைத்த அமுதா சன்னலை ஒட்டியிருந்த வட்டமேசையில் புத்தகத்தை வைத்து இடதுமுழங்கையை ஊன்றி கன்னத்தில் கைவைத்து, வலதுகையால் பக்கங்களை புரட்டினாள் . “இந்த அர்த்த ராத்திரியில் என்னடாதெருவில் நடை?” ...நாயைப்பார்த்த பாபு வாயை முடிக்கொண்டான் என்ற வரியைப் படித்துவிட்டு சன்னலுக்கு வெளியே பார்த்துப் புன்னகைத்தாள்.மாலை ஔியில் புல்வெளியில் இருந்த மரம் மஞ்சளாய் கொழித்திருந்தது.பெயர் என்ன?...மஞ்சள்புங்கை என வைத்துக்கொள்ளலாம். கையிலிருந்த காகிதக்குறிப்பில் இந்தமாதத்திற்குள் வாசிக்கவேண்டுமென குறித்த புத்தகப்பட்டியலில் கால்பாகம் கூட முடிக்கப்படாததைக் கண்டு காகிதத்தை மேசையில் வீசினாள். கல்லூரி சேர்ந்து இந்த நான்குமாதங்களில் மனதினுள்ளே சிலாம்பாக அருவிக்கொண்டேயிருப்பது ‘எல்லாம் போச்சு’ என்ற ஏக்கம்.இந்த மைக்ரோபயாலஜி என்ற பெயரே ஒட்டவில்லை. மனதை எந்தக்காரணம் கொண்டும் தட்டிக்கொடுக்க முடியவில்லை.தனக்குப் பி...

மனஅலைகள் மீட்டும் முரசம்

 நன்றி:எழுத்தாளர் முனைவர் பா.சரவணன். ‘புனைவுலகில் ஜெயமோகன்’ என்ற நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை மனஅலைகள் மீட்டும் முரசம் கமலதேவி, எழுத்தாளர். (வெளியீடு - எம்.ஜெ. பப்ளிஷிங் ஹவுஸ், விலை – 400, தொடர்புக்கு -  9943428994.) ‘வெண்முரசை வாசிப்பது’ என்பது, அதன் அளவிற்கே மிக நீண்ட கனவு. இதைப் போன்ற ஒரு மாபெரும் படைப்பை, அது எழுதப்படும் காலத்திலேயே அதன் கர்த்தாவுடன் இணைந்து வாசிப்பது நமக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பு. அதைப் பற்றி எதைச் சொன்னாலும் அது அதன் கர்த்தாவின் மொழியிலேயே அமையும். அந்தப் போக்கிலேயே சென்றால் நம்முடைய திசையைக் கண்டுகொள்ளலாம். எனக்கு, ‘வெண்முரசை வாசிக்கும் அனுபவம்’ என்பது, பச்சைமலை மற்றும் கொல்லிமலையை அனுதினமும் காண்பதை ஒத்த அனுபவம். வெவ்வேறு தொலைவிலிருந்து, வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு பொழுதுகளில் பார்ப்பதற்கு ஒப்பானது.   பச்சைமலைத்தொடரின் ஏதோ ஒரு குன்றில் உதித்து, கொல்லிமலைத் தொடரின் ஏதோ ஒரு குன்றின் பின்னால் மறையும் சூரியனின் ஔியில் இரு மலைத்தொடர்களையும் காண்பதைப் போன்றது. முழுநிலவின் குளிர்வெளிச்சத்தில், மழைநாளில், கோடையில், வசந்தத்தில் என்று பலவாகக் ...

செங்காந்தளின் ஒற்றை இதழ்

2017 மே மாத சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை. செங்காந்தளின் ஒற்றை இதழ் ஊரைச்சுற்றியுள்ள சாமிகளுக்கு ஆடும்,கோழியுமாகக் கொடுத்து ஊர்மணக்கும் மும்மாரியின் மூன்றாம் காலகட்டம். மழைபெய்து வெள்ளம் நிதானித்திருந்தது.பிடிங்கி நட்ட நாற்றுகள்  தலையெடுத்து மென்னிளம் பசுமையால் கொல்லிமலையின் அடிவாரக்காட்டையடுத்த விளைநிலங்கள் முழுவதும் போர்த்தப்பட்டிருந்தன. தெற்குவாய்கால் கரையில் மெய்யாயி அம்மாயி  அமர்ந்து கால்களை நீருக்குள் விட்டிருந்தாள்.இளம்சிகப்பு கல்பதித்த பம்படம் நீண்டகாதுகளில் ஊஞ்சலாட கொல்லிமலைக் குன்றுகளில் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.அவளின் இரண்டு பசுக்கள் அறுத்துப் போட்ட புல்லை, “நறுக்க்..நறுக்க்..”கென மென்று கொண்டிருந்தன. வடக்குதெற்காக கண்களுக்கு எட்டும்வரை நீண்டிருந்த மலைத்தொடர் மழைதந்த பசுமையில் சிலிர்த்திருந்தது.ஒவ்வொருமரத்திலும், செடிகொடிகளில், புல்பூண்டுகளி்ன் இளந்தளிர்களிலிருந்து சொட்டியநீரும் சேர்ந்த மழையோடைகள் மலையின்கண்ணீர் போல வழிந்து ஆற்றில்சேர்ந்து பலவாய்கால்களில் பிரிந்து மீண்டும் ஆற்றில் கலந்துகொண்டிருந்தன. தாண்டவன்தாத்தா வீட்டைவிட்டு இறங்கியபின் இந்தசில மழைகால...