2021 ஜூன் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை. எஞ்சும்சூடு தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்றுகுனிந்து களைகளை பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது. வெயில் ஏற ஏற தண்ணீரின் ஆவிஅடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும் போது ஒருவருஷம் போல ஊருக்குவந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசிதங்கம் இருந்த இடத்தை சைகையில் காட்டி எடுத்து, த...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி