Posts

Showing posts from May, 2021

வங்கக்கடலின் அலைகள்

Image
                             சிறுகதை:ஒரு நாள் கழிந்தது ஆசிரியர்:புதுமைப்பித்தன் ஒரு நாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தனின் கதை அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்ட கதையாக இருக்க வாய்ப்புண்டு. எனினும் அதைப்பற்றி சொல்ல அவரவர்களுக்கு வேவ்வேறு வாசகபகிர்தல்கள் இருக்கும் தானே? ஒரு எழுத்தாளரின் ஒருநாள், அதுவும் ஒரு சாயுங்காலம் இந்தக்கதை. கதையை எத்தனை முறை வாசித்திருந்தாலும், கதையை எடுத்துவிட்டால்  புதுமைப்பித்தன் சொல்வது போல மீண்டும் வாசிக்கவைக்கும்  ‘சாகாவரம் பெற்ற கதை’. புதுமைப்பித்தனுக்கு அதிகதுயரத்தை எழுதுகையில், துயரைவிட அதிக எள்ளல்தன்மை மிக்க நடை கைகூடிவிடும் என இன்று புரிகிறது. அந்த முதல் வாசிப்பில், முதல் புதுமைப்பித்தனில் அந்த நகைச்சுவை எனக்கு மிகப்பிடித்ததாக இருந்தது. புதுமைப்பித்தனின் பெண்குழந்தைகள் மீதான வாஞ்சையானது கடவுளும்கந்தசாமிப்பிள்ளை மற்றும் ஒரு நாள் கழிந்தது ஆகிய இருகதைகளிலும் அழகான ஒன்று. ஏறத்தாழ இரண்டும் ஒன்றுதான். இரண்டிலும் கதைநாயகர் கூட அவரேதான் என்று தோன்றும். “கமலம்! அந்தக்கூஜாவில தண்ணீர் எடுத்து வா” என்று தொடங்கும் இந்தக்கதை. அவர் குடியிருக்கும் வினோதமான இல்லம் பற்றிய வ

மண்ணும் மனிதரும்

Image
                                                                  அரபிக்கடலின் கோடியில் சிவராமகாரந்த் நாவல்:மண்ணும் மனிதரும் (கன்னடநாவல்)  மொழிபெயர்ப்பு:தி.ப.சித்தலிங்கையா அரபிக்கடற்கரையில் உள்ள கோடி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் ,மண்ணின் கதை. அரபிக்கடற்கரையும் அதன்கழிமுகப்பகுதிகளும், அதையொட்டிய தென்னை மற்றும் புன்னை தோப்புகளும், மணற்மேடுகளும், ஏரியும், ஆங்காங்கு தள்ளி அமைந்த வீடுகளும், கோடிகிராமத்தை சுற்றியுள்ள ஐரோடி, மங்களூர், மந்தர்த்தி, ஹெங்காரகட்டே,படுமுன்னூர், உடுப்பி, குந்தாபுரம், மங்களூர்,பெங்களூரு,பம்பாய் மற்றும் மதராஸ் என்று கதைக்களம் விரிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கதை துவங்குகிறது. பார்வதி மற்றும் ராமஐதாளர் திருமணம் பெருமழைகாலத்தில் நடப்பதிலிருந்து கதை துவங்குகிறது. ஐதாளரின் விதவைதங்கை சரஸ்வதி. பார்வதி சரஸ்வதி இருவரின் உறவானது அன்பும், உழைப்பும்,புரிதலும் இணைந்த தோழமைஉணர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மழை ,பனி, கோடை காலங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தேவையானவைகளை உழைத்து ஈட்டிக்கொள்ளும் எளிமையான வாழ்வு அவர்களுடையது. அவர்களுக்கு விவசாயத்தில் உதவும் செம்ப

முரண்களின்சமன்

Image
                       முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில்  சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும்.                                                                                 ஆயுதம்                                                                                          அன்பின் பொருட்டு ஆயுதம் ஏந்தியவனின் கைகுருதியில் மலர்கின்றன மலர்கள். அவன் சென்ற வழிகளில் திறக்கின்றன ஊற்றுக்கண்கள். அவன் பார்க்கும் திசைகளில் சூழ்கின்றன மழைமேகங்கள். கட்டியெழுப்பிய அன்பு மாளிகையின் முகப்பில் அனைத்தையும் கைக்கழுவி உள்நுழைகிறான். அங்கு வழிந்த குருதி வழுக்கி விழுந்தவன் அவசரமாய் தன்ஆயுதத்திற்காய் கைநீட்டுகிறான்.

தி.ஜானகிராமன் நாவல்கள்

Image
                                                    ஒருபறவையின் இருசிறகுகள் கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது?  கதைகள் கொஞ்சமேனும் மனிதவாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களை கண்டுகொள்வதால். சொல்பவரின் எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால். இதிகாசங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் புதியவாசகர்களுக்கு நல்லவாசிப்பனுபவத்தை அளிப்பது எதனால்? அது சொல்லும் வாழ்க்கை சிக்கல்கள்,உறவுசிக்கல்கள்,அரசியல் சார்ந்த கேள்விகள் ,தத்துவசிக்கல்கள் போன்றவை அந்தந்த தளங்களில் இன்னும் இருந்து கொண்டே இருப்பதால். ஆகமொத்தத்தில் வாழ்க்கை போல ஒன்றை கதையோடு வாழ்ந்து, தெரிந்து, உணர்ந்து கொள்வதால்தான் குழந்தைக்கதைகள் முதல் இதிகாசங்கள் வரை மனிதருடன் இணைந்து இருக்கின்றன.தான் உணர்ந்தை மற்றவர்களுடன் உரையாட நினைத்ததுதான் கலைகளின் ஆதாரமாக இருக்கக்கூடும். எழுத்தும் அவ்வகையான காலம் கடந்த உரையாடல் தானே.. எழுத்தாளர் தி.ஜானகிராமனின் எழுத்தை மனதிற்கு நெருக்கமானதாக ஆக்குவது எது? அவர் எழுத்தின் ஆதாரமான…  மனிதனுக்கு இயற்கையுடனான உணர்வ

பேராலமரத்தின் விழுதுகள்

Image
                                                            பேரலமரத்தின் விழுதுகள் நூல்:சுதந்திரத்தின் நிறம் ஆசிரியர்:லாராகோப்பா மொழிபெயர்ப்பாளர்:பி.ஆர்.மகாலிங்கம் வெளியீடு: தன்னறம் நூல்வெளி  பேட்டிவடிவில் எழுதப்பட்டுள்ள கிருஷ்ணம்மாள், ஜெகநாதனின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகள் அடங்கிய நூல். முதலில் இந்தமாதிரியான நூல்கள் ஏற்படுத்தும் நல்லவற்றின் மீதான நம்பிக்கை முக்கியமானது. ஏனெனில் நடைமுறை அந்தநம்பிக்கையை அழித்துக்கொண்டேயிருப்பதால் இந்தநூல்களை கொண்டு மீட்டெடுக்க முடிகிறது. லாரா கோப்பா இத்தாலியை சேர்ந்த காந்திய ஆராய்ச்சியாளர். அவர் மதுரையில் உள்ள காந்திகிராமத்திற்கு வந்து தங்கியிருந்து கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகநாதனுடன் நேரடியாக உரையாடி வாழ்க்கைவரலாற்றை பதிவு செய்து எழுதுகிறார். கிருஷ்ணம்மாள் தனிபெற்றோரான தன் தாயிடமிருந்து," வறுமையிலும் பகிர்ந்துண்ணும் பழக்கம்,எதற்கும் கலங்காத உறுதி,கடவுள் பக்தி ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாகவும், அது தன்வாழ்வு முழுவதும் உடனிருந்தது,"என்று கூறுகிறார். ஜெகநாதன் கல்லூரிக்காலத்தில் காந்தியப்பற்று கொண்டு காந்திக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் மதுவிலக்கு

ஒரு பழைய கடிதம்

Image
                                                                                           எழுத்தாளர் முத்துலிங்கம் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு...  ஒரு வாசகக் கடிதம், கடவுள் தொடங்கிய இடம் நாவல் மூலம் உங்களை வாசிக்கத் தொடங்கிய தொடக்கநிலை வாசகி நான். வீட்டிலிருந்து இரண்டுமணிநேர திருச்சி பயணத்திற்கு இரண்டுநாள் திட்டமிடும் எங்களைப் போன்றோர்க்கு சேருமிடம் நிச்சயமில்லாத பயணங்கள் நிறைந்த இந்தநாவல் முதலில் ஏற்படுத்துவது பதட்டத்தை தான். இயல்பாக ஈழவாசிகள் ஏதோ ஒருநாட்டின் பெயரைச்சொல்லி கிளம்புகிறார்கள். நாடில்லாதது என்பது “எத்தனைகளின்   இல்லாததுகள்”என்று சொல்லும் நாவல். எனக்குன்னு தனியா ஒருகணிணி இல்லை என்ற முறையீட்டை இந்தநாவலுக்கு பிறகு வைக்க தயக்கமாக இருக்கிறது. வாழ்க்கை எத்தனை சாத்தியங்கள் நிறைந்தது. அந்தவகையில் அகதி என்பது எத்தனை காயங்கள் நிறைந்த வாழ்க்கை சாத்தியம். மகாபாரதம் சொல்லும்போது சிறுவயதில் அய்யா”எதற்காக நடந்தாலும் போர் என்பது யாருக்குமே... வெற்றியாளருக்கும் கூட நல்லதில்ல”என்று சொன்னது நாவல் முடியும்வரை நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது . நிஷாந்த் உணவகத்தில் தட்டு கழுவுகையில்” அப்பாவி

புதுமைபித்தனின் செல்லம்மாள்

Image
அன்புக்கான ஒரே கதை செல்லம்மாள் கதையை கல்லூரியில் பாடமாக முதலில் படித்தேன். முதல் வாசிப்புக்குப் பின் கதையை சுருங்கக் கூறுவதில் கவனம் இருந்தது. பின்பு உணர்த்தவியலாத ஒரு வாசிப்பு இன்பத்தை அந்தக் கதை கொடுத்தது. நான் அதிகமுறை வாசித்தக் கதை செல்லம்மாள் தான். என்றாலும் மீண்டும் வாசிப்பேன். செல்லம்மாள் சார்ந்த வாசிப்பு முதல் வீச்சு. பிரம்மநாயகம் பிள்ளையை தவிர்த்து செல்லம்மாளை மட்டும் எடுத்துக் கொள்வது  பெண்ணியம் சார்ந்த வாசிப்பு. இவ்வாறுதான் கல்லூரியில் எங்களால் வாசிக்கப்பட்டது. என்னால் இன்னும் தீவிரமாக பெண்ணியம் சார்ந்து வாதம் செய்யப்பட்டது. அதற்காகவும் மீண்டும் வாசிக்கப்பட்டது. ஊருக்கே அந்தம்மாவ கூட்டிக்கிட்டு போகல, தந்தி கொடுக்கல, என்னமாதிரியானவரா இருந்தா அந்தம்மா நினைவில்லாம இருக்கறப்ப அவரைத்திட்டும் அந்தம்மா. கைய காலை கட்டிவைக்கிற மனுசனா இருந்திருப்பாரோ?  எவ்வளவு சாவகாசமா சுவாததீனமில்லாம கிடக்கிற அம்மாவ கைகால் கழுவிட்டு வந்து பாக்கறாரு கண்ணுலருந்து ஒரு சொட்டு தண்ணி வரனுமே! பதியாம்… என்று அன்று பெண்ணியமாக தெரிந்த லட்சணத்தில் பேசி, வாதம் என்பது மறந்து கடைசியில், “ பசங்க இப்படித்தானோ வயசானப

கவிதை

                                                                    பொருள்மயக்கம் மலர்முகை தீண்டும் தென்றல் கருமுகில் தீண்டும் காற்று மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி கைகால்முளைத்த கருசிசு தீண்டும் முதல்உந்தல் கருவறை தெய்வத்தை தீண்டும் சிறுமலரின் மென் தொடுகை… அது அப்படியே அப்பொருளிலேயே இருக்கட்டும்… பதாகை இதழில் வெளியான கவிதை

அபிதா

Image
       [2019 ஜூன் பதாகை இதழில் வெளியான கட்டுரை]                                                          யாவும் அழகே உன்காட்சி                                                                                                                      எழுத்தாளர் லா.சா.ராமாமிர்தம்            சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் அபிதா. இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது. மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது. வயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை. ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும்  தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது. ஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம். அது இன்னொரு வசீகரம். சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது. நீண்ட ஒற்றைக்கனவ

கதைசொல்லி பாட்டனாருக்கு அஞ்சலி

Image
                                                                  நிலாக்காலம் முதுதந்தை கி.ராஜநாராயணன் அவர்களை வணங்கி... சூரியன் விழுந்தப்பின் உணவுக்குப்பின் களத்தில் பாய்விரித்து இரும்பு உரலில் தாத்தாவுக்கு வெற்றிலை இடித்துக் கொடுக்கையில் எழும் மணத்தை வைத்து, சுண்ணாம்பு தூக்கல் என்று சொல்வதிலோ,வானம் பார்த்து கோட்டை கட்டியிருக்கும் நிலாவின் வழியோ,காற்றுவருவதோ இல்லை வராது குறித்த பேச்சிலோ தொடங்கும் கதைகள். பிளிப் ரேடியாவில் ஏழுமணி செய்திகள் வாசிக்கும் சரோஜ்நாராயணசாமியின் குரல் ஒலிக்கையில் மட்டும் பரிபூரண அமைதி காக்க வேண்டும்.அப்படிக் கேட்ட கதைகளின் மனிதர்களை அடுத்தநாள் சந்திக்க முடியும் என்பதைப் போல கி.ராவின் கதைகள். மனிதர்களின் நகைச்சுவை,வைராக்கியம்,பண்புகளின் எதார்த்தப்பக்கங்கள்,ரசனைகள் என உண்மை உலகமாய் விரியும் கதைகள்.கிட்டத்தட்ட ஒரு சிலமைல் தொலைவுக்குள்ளாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தமனிதர்களின் அகபுற உலகங்கள் முட்டி மோதும் வெளி தான் இவரின்படைப்புலக களம்.இன்றும் எனது கிராமத்தில் இப்படியான மனிதர்களோடு வசிக்கிறேன்.இது ஒன்றும் எங்கோ எப்போதோ நடந்த கதைகள் என்று நினைப்பதற்குரியவை அல்

மைதானத்துமரங்கள்

Image
                                              சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்                                                                                                                          எழுத்தாளர் கந்தர்வன் சிறுகதை:மைதானத்துமரங்கள் பொங்கலுக்கு அடுக்கும்போது மட்டும் எடுக்கப்படும் புத்தகங்களில் மனதிற்கு இனியவை. என் மேல்நிலை வகுப்புகளின் ‘ சிறுகதைசெல்வங்கள்’ என்று பெயரிடப்பட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அவ்வாறானவை. அந்தக்கதைகளை எத்தனையோ முறைகள் வாசித்தாயிற்று என்றாலும் அந்தப்புத்தகங்களை யாரிடமும் கொடுக்க மனம் துணிவதில்லை. அட்டையில்  தாமரை போன்ற மலர் வரைந்த அந்தப்புத்தகங்கள், பள்ளி துவங்கிய முதல்வாரத்தில் தலைமையாசிரியரால் கொடுக்கப்படும் பொழுதே கதைப்புத்தகம் என்று தனித்த மகிழ்ச்சியை தந்தவை. அன்று அவை என் முன்னோடிகளின் முதல்அறிமுகம் என்ற புரிதலின்றி கைகளுக்கு வந்தவை. விடுதியின் வேம்புகளில் ஒன்றின் அடிமரத்தில் ஆனமட்டும் சாய்ந்தபடி புத்தகங்களுக்கு அட்டைப்போட்ட பிறகு, நம்மால் ஆசிரியரின்றி வாசிக்கமுடியும் என்று முதலில் கையிலெடுக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அவை. புதுமைப்பித்தன்,அசோகமித்த

சிறுகதை

Image
                                                                           பனிப்பொழிவு               பட்டையான மரவேலிகள், கடுகுச்செடிகள், தக்காளி, குடைமிளகாய், முள்ளங்கி செடிகள் மீது பனித்துகள்கள் விழுந்து வெண்படலமாக பரவிக்கொண்டிருந்தது. மரங்கள் பாதி நரை கண்டதை போல மாறிக்கொண்டிருந்தன. அறைக்குள் பாதி இருள். பாதையில் ஒரு கருப்பு கார் செல்வது பெரிய கண்ணாடி ஜன்னல்வழி தெரிகிறது. தகரஎடுப்பானால் நடைபாதை படிகளில் படிந்திருக்கும் பனிப்படிவை மது சுரண்டி எடுத்துப்போடுகிறார். கருஞ்சிவப்பான பனிஆடையுடன் நிமிர்ந்து சற்றுநின்று வேடிக்கைப்பார்க்கிறார். அவர் பார்க்கும் திசையில் பனிதாளாது ஒரு மரக்கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்திருக்கிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. ஈரமரம். பனி மின்சாரக்கம்பிகளை ஆக்கிரமித்து தடித்த வெண்வடங்களாக மாற்றியிருக்கிறது.  பார்வையைத் தழைத்து மது நிற்கும் தாழ்வாரத்திற்கு கண்களை திருப்பினேன். அவர் தலைக்குமேல் தொங்கிய இரும்பு கொக்கி மடிப்பில் பனி நிறைந்திருந்தது. எழுந்து மெத்தைமேல் சாய்ந்து அமர்ந்தேன்.தேதிகிழமைகள் கண்களில்பட்டன. அவற்றை கவனிக்காவிடில் நாட்களுக்கிடையேயான கோடுக

அரூ அறிவியல்புனைக்கதை

Image
அரூ இதழின் இந்தஆண்டு அறிவியல் புனைவு போட்டிக்கதைகள்: . https://aroo.space/2021/05/10/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa-2/ பிரசுரத்திற்கு தேர்வான என்கதையின் தலைப்பு ஆண்டாளின் சொல்லாட்சியான சொல்லாழி வெண்சங்கே நன்றி: அரூ இதழ்