Skip to main content

கவிதை

                                                                   பொருள்மயக்கம்

மலர்முகை தீண்டும் தென்றல்

கருமுகில் தீண்டும் காற்று

மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி

கைகால்முளைத்த கருசிசு தீண்டும் முதல்உந்தல்

கருவறை தெய்வத்தை தீண்டும் சிறுமலரின்

மென் தொடுகை…

அது அப்படியே

அப்பொருளிலேயே இருக்கட்டும்…


பதாகை இதழில் வெளியான கவிதை


Comments