Posts

Showing posts from October, 2023

இற்றைத்திங்கள் அந்நிலவில் 3

Image
              செப்டம்பர் 2023 இதழில் வெளியான கட்டுரை சங்கப்பெண்கவிகள்:3         மொழியென்னும் ஆடி ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார்,காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற்றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று  சொல்லப்படுகிறது.  திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் ஊஞ்சலில் வைக்கப்பட்டப்பின், பெண்கள் கூடி கைக்கோர்த்து வட்டமாக ஆடும் ஆட்டம் துணங்கை கூத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.   ஆட்டன்அத்தியை காவிரி வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவரைத் தேடிச் செல்லும் மனைவி ஆதிமந்தியார் பாடும் பாடல் இது. ஆடிமாத காவிரியில் வெள்ளம் கரை புரள அதை வரவேற்கும் விழாக்கள் கரை நெடுக நடக்கின்றன. ……………… என்கைக் கோடீ ரிலங்குவளை  நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகளமகனே [குறுந்தொகை :31 ஆதிமந்தியார்: மருதத்திணை] அனைவரும் கூடி ஆடி மகிழ்ந்திருக்கும் விழாவில் பாயும் காவிரி நீரில் தலைவனை தொல

இற்றைத்திங்கள் அந்நிலவில் 4

Image
         [அக்டோபர் 2023   சொல்வனம் இணைய இதழில்  வெளியான கட்டுரை]                                      காட்டாற்று வெள்ளம்               ஒக்கூர் மாசாத்தியார் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் பிறந்தவர். இவர் மூதின் முல்லைத்துறையில் பாடிய புறநானூற்றுப் பாடல் இன்று வரை சங்ககால மகளீரின் வீரத்திற்கான பாடலாக  உள்ளது. இவர் சங்க இலக்கியத்தில் எட்டுப்பாடல்கள்  பாடியுள்ளார்.  இயற்பெயர் மாசாத்தியார். [ஒக்கூரில் (சிவகங்கை மாவட்டம்) நிறுவப்பட்டுள்ள மாசாத்தியார் நினைவுத்தூண்] சங்ககாலத்தில் தொடர்ந்து போர் நிகழ்ந்ததை சங்கப்பாடல்களின் வழியே அறிகிறோம். முல்லைநிலத்தின் தலைவி ஒருத்தி தன் தந்தையை,கணவனை முந்தின நாட்களின் போரில் இழந்திருக்கிறாள். இன்றும் போர்ப்பறையின் ஒலி கேட்கிறது. மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறான். ‘ இன்றும் செறுப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே’ [புறம்: 279] போர்ப்பறையின் ஒலியில் மயங்கி விரும்பி மகனை அழைக்கிறாள். ஆடை அணிவித்து குழல் சீவி போர்களம் நோக்கி செல

சின்னஞ்சிறிய தாய்மை

Image
 கடந்த பதினைந்து நாட்களாக தெருவிற்கு பேசுவதற்கு இரண்டு நாய்க்குட்டிகள் கிடைத்து விட்டன. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 'ஆதாரம் இருக்கிறதா?' என்ற கதை மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சின்ன விஷயம் எப்படி பெரிய புரளியாகிறது என்று அழகாக எழுதியிருப்பார். எதிர்வீட்டில் வீடு கட்டிக் கொண்டிருக்கறார்கள். மேல்தளம் போட்டு ஒரு மாதம் கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்ட மழை இரவில் ஒரு நாய் அங்கு குட்டிகளை ஈன்றது. அந்த வீட்டுக்காரர்கள் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களுடைய சின்னம்மா அந்த நாய்க்கு உணவு வைத்தார்கள். நாய் வீட்டுப்பக்கம் குட்டிகள் ஈனுவதை முதல் முறை பார்க்கிறேன்.  குட்டிகளுடன் அது தெருவில் இறங்கிய போது 'இனிமே இங்கருந்து போவாது...பெரிய தொல்லையா போயிடும். சோறு வைக்காம முடுக்குங்க' என்ற குரல்தான் தெருவின் அம்மாக்களிடம் இருந்து கேட்டது. கனகா என்ற அத்தை குழந்தைகள் இல்லாதவர். தனியர். அவர்தான் அதிகாலைகளில் தினமும் குட்டிகளுக்கு பால் வைப்பார். சொந்தவீடோ, நிலமோ,கணவனோ அற்றவர்.  அடுத்ததாக எங்கள் வீட்டில் தம்பி. தயிர் சோறும் ,பிஸ்கெட்டுகளும் வயிறு நிரம்ப வைப்பான். இவனும் இன்னும் திருமணமாகா

நகுமே தோழி நறுந்தண் காரே

Image
புரட்டாசிமாதம் பெருமாள்மலையானை துறையூரில் இருந்து தூக்கி வந்து கொல்லிமலையாக்கி வைக்கும்.  பச்சை மாமணி போல் மேனி, பவளவாய், கமலச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தானை கண்ணெதிரே காணும் காலம்.  ஐப்பசி ஒரு நசநசப்பான காலம். நெல் அறுவடையை முடிக்காதவர்கள் பதறும் காலம். கதிர் சாய்ந்த வயல்கள் விவசாயிகளின் வயிற்றில் புளியை கரைக்கும். அறுவடை முடிந்த வயல்கள் மஞ்சளாய் 'சிவனே' என்று வானம் பார்த்து கிடக்கும். நான் இந்த பத்து நாட்களை 'நிலம் புரண்டு படுக்கும் காலம்' என்பேன். இங்கு நஞ்சைக்கு ஓய்வில்லை. சம்பா, குறுவை என்று எதாவது ஒரு பயிர் வயலில் தளிர்விடும் அல்லது விளைந்து கிடக்கும். நெல் அறுவடைக்குப் பின் குத்துகளுடன் கிடக்கும் வயல் எனக்குப்பிடிக்கும். இந்த பத்துநாட்களுக்குள் அறுவடையாகக் காத்திருக்கும் வயல்களும்,அறுவடை முடிந்த வயல்களையும், நாற்று முளைக்கும் வயல்களையும் ஒரு சேரக்காணலாம். கொட்டிக் கலைத்த சொப்பு சாமான்களை போல நிலம் கலைந்து கிடக்கும்.  ஐப்பசி எப்போதும் தான் வருகிறது. ஆனால் என் வாசிப்பில் இது சங்ககாலத்து கார்காலம். 'இப்பம் கொஞ்சம் மாற்றமா தெரியுது. [மொழியே மாறிடுச்சு பாருங்

வெந்தழால் வேகாது 6

Image
  மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை  நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாட காட்சிகளில்,நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதை பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும் மாறி மாறி காணமுடிகிறது. அதே போல இவர் கதைகளில் நகரமும் கிராமமும் இரு இழைகளாக பின்னிக் கிடக்கின்றன.  ஆளில்லாத ஸ்டேஷன்களில் நின்று செல்லும் ரயில் போல கவனத்தில் இருந்து தவறக்கூடிய சிறிய தருணங்களை, உணர்வுகளை கதைகளில் காணமுடிகிறது.   ஏழெட்டு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வரும் ஒருவர் முற்றிலும் தோற்றம் மாறிப்போன தன் நண்பரின் மனைவியை கண்டு திடுக்கிறார். அது வரை இல்லாத எண்ணமாக தன் மனைவியும் இப்படித்தானே தொடர்ந்த குழந்தைப்பேறால் உடல் குழைந்து போயிருக்கிறாள் என்று சட்டென்று அவருக்குத் தோன்றுகிறது. [ கதைத்தலைப்பு : பார்த்தது]. கருக்கலைப்புகளோ,குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களோ முறையாக இல்லாத காலகட்டத்தில் அழகிரிசாமி நிறைய கதைகளில் இந்த விஷயத்தை எழுதியிருக்கிறார். இயல்பாகவே பெண்கள் மீதான வாஞ்சையில், அ

எட்டா வாழ்வை எட்டும் கதைகள்

Image
         எழுத்தாளர் இராசேந்திர சோழன் எட்டாத வாழ்வை எட்டும் கதைகள் என்ற கட்டுரை நூலிற்கான தொகுப்புரை: சிற்றில் நண்பர்கள் குழு சார்பாக எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு, குமரகுரு பன்முக கலைகல்லூரியில் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  ஏற்கனவே சிற்றில் சார்பாக எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர்,யூமாவாசுகி,விட்டல்ராவ் மற்றும் வண்ணநிலவன் ஆகியோருக்கு ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. “எட்டாத வாழ்வை எட்டும் கதைகள்” கருத்தரங்குக்கு தலைமையுரையாற்றி எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இரண்டாம் அமர்வாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைத்த இராசேந்திர சோழன் புனைவுலகம் சார்ந்து எழுத்தாளர்கள் ஹரிஸ், சிவப்ராசாத், கோகுல் பிரசாத் ஆகியோர் உரை வழங்கினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பேராசிரியர்  திலீப்குமார் இராசேந்திர சோழன் எழுதிய நாடகங்கள் பற்றிய உரையை வழங்கினார். மேலும் அவருடைய நாடகக் குழு எழுத்தாளர் இராசேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நகைச்சுவையுடன் நிகழ்த்திக் காட்டினார்கள். அபுனைவு அரங்கையும், நிறைவு விழா அரங

ஒலிவடிவம் : இற்றைத்திங்கள் அந்நிலவில்

Image
 சொல்வனத்தில் நான் எழுதும் சங்கப்பெண் கவிகள் குறித்த இற்றைத்திங்கள் அந்நிலவில் தொடரை கீழ்வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். தொடர்ந்து ஒலிவடிவம் அளிக்கும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். https://youtube.com/playlist?list=PLzZTV3lMEa4ya0Cfs-Y68-ZwfK6yafIqs&si=bISuwuz7hK9fIj0E                    சரஸ்வதி தியாகராஜன்