இந்த ஆண்டு வெள்ளிமலை மரபிலக்கிய வகுப்புடன் தொடங்கியது. வம்சவிருட்சம் _ எஸ்.எல் பைரப்பா புத்தம் வீடு _ ஹெப்சிபா ஜேசுதாசன் காவியம் _ ஜெயமோகன் மீஸான் கற்கள்_ புனத்தில் குஞ்ஞப்பதுல்லா நாலுகெட்டு _ எம்.டி.வாசுதேவன் நாயர் பாத்துமாவின் ஆடு,மதிலுகள் _ வைக்கம் முகமது பஷீர் [இரண்டாம் முறை] கூளமாதாரி _ பெருமாள் முருகன் முனைவர் வேதாசலத்தின் நூல்கள் நவீன தமிழிக்கிய அறிமுகம் [ மூன்றாவது வாசிப்பு] மாகே கஃபே _அரிசங்கர் பாரீஸ் _ அரிசங்கர் நெருப்பு ஓடு _ தேவி லிங்கம் சூன்யதா _ ரமேஷ் பிரேதன் மௌனி சிறுகதைகள் இந்த ஆண்டு வாசித்த நூல்களுள் இந்த நூல்கள் முக்கியமானவை. கவிதை வாசிப்பனுபவங்கள்,இரண்டு சிறுகதைகள், எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா ,பெருமாள் முருகன் படைப்புகள் பற்றி கருத்தரங்க நிகழ்விற்கான கட்டுரைகளும்,நாவல் வாசிப்பனுபவங்களும் எழுதியிருக்கிறேன். 2024 ம் 2025 ம் ஆண்டுகளின் அன்றாடத்தில் வாசிப்பிற்கும் எழுதிற்கும் இது வரை சந்திக்காத இக்கட்டுகளை, சூழல் காரணமான நெருக்கடிகளை உணர்ந்த ஆண்டுகள். இந்த ஆண்டில் இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். வரண்டகாலத்தில் உயிர்ப்பிடிக்கும் சப்...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி