தமிழில் 2016 லிருந்து கதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறேன். சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பா. மேட்டூர்.
அருகில் உள்ள கோட்டப்பாளையத்தில் மக்தலேனால் மருத்துவமனையில் 17 ஜூன் 1983 ல் பிறந்தேன்.
தந்தை இராஜாராமன். தாய் அன்னகாமு. ஒரு தங்கை உடன்பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ளேன். கோட்டப்பாளையம் புனித எட்வர்ட் தொடக்கப்பள்ளியிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியிலும் புனித லூர்து அன்னை உயர்நிலை பள்ளியிலும், முசிறி அமலா மேல்நிலை பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றேன். பெரம்பலூர் தனலட்சுமி கல்வி நிறுவறுங்களில் கல்லூரி கல்வி பயின்றேன். சிறுவயதில் தந்தையால் வாசிப்பு அறிமுகமாகியது. எட்டு வயதிலிருந்து வாசிக்கிறேன். சிறுவர் இலக்கியத்திலிருந்து கல்கி பின் ஜெயகாந்தனிலிருந்து தீவிர இலக்கியத்திற்குள் வந்தேன். இக்கட்டான காலகட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து இலக்கியத்தின் முடிவிலா பாதையை கண்டுகொண்டேன். எழுதத்துவங்கினேன். எழுதுவது என்பது மட்டுமே என்னுடைய பதின்வயதிலிருந்து இன்று வரை உள்ள தீர்ந்து போகாத கனவு.
எழுதுவது என் தந்தையின் கனவும் கூட.





Comments
Post a Comment