Skip to main content

யார் தோழி

                            ஓதற்பிரிவு 😌😇


ஒரு குழந்தை பள்ளிக்கூடம் கூடம் செல்வது அந்தக்குழந்தைக்கு மிக இயல்பாக நடந்துவிடுகிறது. வீட்டில் தான் பரபரப்பு. ஒரு வாரமாகவே அவனை எப்படி பழக்குவது,அவனுடைய பை முதல் சகலபொருட்களையும் சேகரித்தல். தண்ணீர் பாட்டிலை பழக்குதல் என்று அது நீளும். அவன் இயல்பாக காலை எழுந்து பொம்மைகளுடன் விளையாடிவிட்டு, இரண்டு முறையாவது கீழே விழுந்து எழுந்து அழுதப்பின் அடுத்த விளையாட்டிற்கு தாவுவான். அவனை இழுத்து குளிக்க வைத்து கிளம்பும் வரை அவன் கவனமெல்லாம் கையிலிருக்கு பொம்மை மீதோ, பலூன் மீதோ இருக்க வீடே போராடிக்கொண்டிருக்கும். போர்க்களத்தில் பூக்கும் பூவாக அவன் உலகத்தில் அவன் இருப்பான்.  அதையெல்லாம் கடந்து பள்ளி செல்லும் முன் கையசைக்கும் அந்த நொடி இனி இருபத்துஐந்து ஆண்டுகளாவது இப்படி கிளம்புவான் என்று தோன்றியது. முதன் முதலாக தனித்து அவன் வயது சமூகக்குழுவிடம் விடுகிறோம். இனி அவனை சமூகம் கைகளில் எடுத்துக்கொள்ளும். சமூகம் என்றால் நேரடியாக அல்ல. சமூகத்தின் வெவ்வேறு பிரதிநிதிகளான அவனின் சகர்கள்.




ராஜமித்திரன் பள்ளிக்கூடம் சென்றப்பின் சிலநிமிடங்கள் அவனுடைய பொம்மைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று இந்த வரிகள் தோன்றியது. இந்த வார்த்தைகளும் இங்கே இருக்கட்டும்....

சங்கக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பதால் வரும் சிக்கல் இது.

கூறுவார் யார் தோழி

பால்பாட்டிலை கைவிட்டு

பையை எடுத்துக்கொண்டு

பள்ளிக்கூடம் சென்றுவிட்டான்

அவன் கலைத்துவீசி

 பிரிவாற்றாமையால்

முகம்திருப்பி கிடக்கும் 

பொம்மைகளிடம்...தலைவன்

பொன்மதிய பொழுதில்

இல்லம் வந்து சேர்வான் என்று

கூறுவார் யார் தோழி? ☺






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...