Skip to main content

யார் தோழி

                            ஓதற்பிரிவு 😌😇


ஒரு குழந்தை பள்ளிக்கூடம் கூடம் செல்வது அந்தக்குழந்தைக்கு மிக இயல்பாக நடந்துவிடுகிறது. வீட்டில் தான் பரபரப்பு. ஒரு வாரமாகவே அவனை எப்படி பழக்குவது,அவனுடைய பை முதல் சகலபொருட்களையும் சேகரித்தல். தண்ணீர் பாட்டிலை பழக்குதல் என்று அது நீளும். அவன் இயல்பாக காலை எழுந்து பொம்மைகளுடன் விளையாடிவிட்டு, இரண்டு முறையாவது கீழே விழுந்து எழுந்து அழுதப்பின் அடுத்த விளையாட்டிற்கு தாவுவான். அவனை இழுத்து குளிக்க வைத்து கிளம்பும் வரை அவன் கவனமெல்லாம் கையிலிருக்கு பொம்மை மீதோ, பலூன் மீதோ இருக்க வீடே போராடிக்கொண்டிருக்கும். போர்க்களத்தில் பூக்கும் பூவாக அவன் உலகத்தில் அவன் இருப்பான்.  அதையெல்லாம் கடந்து பள்ளி செல்லும் முன் கையசைக்கும் அந்த நொடி இனி இருபத்துஐந்து ஆண்டுகளாவது இப்படி கிளம்புவான் என்று தோன்றியது. முதன் முதலாக தனித்து அவன் வயது சமூகக்குழுவிடம் விடுகிறோம். இனி அவனை சமூகம் கைகளில் எடுத்துக்கொள்ளும். சமூகம் என்றால் நேரடியாக அல்ல. சமூகத்தின் வெவ்வேறு பிரதிநிதிகளான அவனின் சகர்கள்.




ராஜமித்திரன் பள்ளிக்கூடம் சென்றப்பின் சிலநிமிடங்கள் அவனுடைய பொம்மைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று இந்த வரிகள் தோன்றியது. இந்த வார்த்தைகளும் இங்கே இருக்கட்டும்....

சங்கக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பதால் வரும் சிக்கல் இது.

கூறுவார் யார் தோழி

பால்பாட்டிலை கைவிட்டு

பையை எடுத்துக்கொண்டு

பள்ளிக்கூடம் சென்றுவிட்டான்

அவன் கலைத்துவீசி

 பிரிவாற்றாமையால்

முகம்திருப்பி கிடக்கும் 

பொம்மைகளிடம்...தலைவன்

பொன்மதிய பொழுதில்

இல்லம் வந்து சேர்வான் என்று

கூறுவார் யார் தோழி? ☺






Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...