பசியற்ற வேட்டை
காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து தப்பித்து இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது. மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான். இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும்
Comments
Post a Comment