சுவை
மழையையே பார்த்துக்கொண்டு
கைகளை மறந்து போனேன்...
சட்டென்று குனிந்து பார்த்தேன்
என் வெல்லக்கட்டி எப்போதோ
கரைந்து போயிருந்தது.
வெல்லக்கட்டியை
வைத்திருந்த கையையும்
வழிந்தோடும் நீரையும்
மாறி மாறி பார்த்தேன்.
கலங்கல் நீரில் ஒன்றுமில்லை.
குழிந்திருந்த மறுகையின்
உள்ளங்கை நீருக்கு
குளிரின் சுவை.
Comments
Post a Comment