காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து தப்பித்து இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது. மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான். இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும்
பெண்கல்வியிலிருந்து தன்னறம் நோக்கி https://www.jeyamohan.in/182820/ மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் எழுத்தாளர் லோகமாதேவி,ஜெயந்தி ஆகியோர் எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதங்கள் உள்ளன. அவர்களுடைய கல்வி வேலை சார்ந்த போராட்டங்களை,கல்வியால் தாங்கள் பெற்றவைகளை எழுதியிருந்தார்கள். உண்மையில் அவர்களுடையது நிறைவான வெற்றிக்கதைகள். எழுத்தாளர் லோகமாதேவி லோகமாதேவியை கவனிக்கும் போது 'இந்த மாதிரி நானும் பள்ளி அளவிலாவது ஆசிரியராகியிருந்திருக்க வேண்டும்' என்று எனக்குத் தோன்றும். ஆனால் மூன்று நான்கு முறை ஆசிரியர் தகுதி தேர்வுகள் எழுதியும் ஒருமதிப்பெண் ,இரண்டு மதிப்பெண்கள் என்று வழக்கம் போல கணிதம் காலைவாரிவிட்டது . தனியார் பள்ளி வேலை பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு மாதிரி சக்கையாகப் பிழிந்து வீட்டிற்கு அனுப்புவது. என் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இரு வண்டிகளை ஒரு மாட்டை வைத்து ஓட்டுவதற்கு இயலாத என் திறமையின்மையும் ஒரு காரணம். இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு கொஞ்சம் தள்ளி இன்னொரு பக்கம் உள்ளது என்பதற்காக இந்தப்பதிவை எழுதுகிறேன். என்னுடையது ஒரு மாதிரி லௌகீகத்திற்கு அரு
இசையாகி நின்றாய் புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு. எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர். இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல். 1. நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிருப்பதாக நினைக்கிறீர்களா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதி
Comments
Post a Comment