Skip to main content

Posts

Showing posts from July, 2024

முதல் உரை

 எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் அவர்களின் புனைவுலகம் குறித்த கருத்தரங்கத்தை சிற்றில் இலக்கிய அமைப்பு மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து நடத்தியது. இதற்கான நாவல் அரங்கில் நானும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் பேசினோம். என்னுடைய முதல் உரை. என்னால் பிறர் கவனிக்கும்படி பேச முடியுமா? என்று எப்போதுமே எனக்கு ஒரு ஐயம் உண்டு. எனக்கு மற்றவர்களின் கவனத்தை மேலோட்டமாக தொட்டு திருப்பும் அளவுக்கூட குரல் வளம் இல்லை. என் முதல் தொகுப்பு வெளியான மகிழ்ச்சியை இல்லாமல் செய்தது என்னுடைய ஏற்புரை. புத்தகம் வெளியானதை விட ஏற்புரையில் சரியாக பேசவில்லை என்பதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து திரும்பு வழி முழுக்க அதே நினைவு. அந்த ஏற்புரையை நான் இன்னும் பார்க்கவில்லை. யாருக்கும் பகிரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கேட்டார்கள். அதே போல கிருபா விருது வாங்கும் போதும் கிருபாவின் படைப்புலகம் குறித்து சில வரிகளே பேசினேன்.  விஷ்ணுபுரம் விழாவில் உரையாடல் அரங்கு என்பதால் சரியாக பேசினேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுரேஸ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் நான்கையும் வாசித்து இரண்டுவாரங்களுக்கு முன்ப...

சிபியும் புறாவும்

 [கவிஞர் யூமாவாசுகி கவிதைகள் குறித்து....] இரவின் குளம்புகள் வெற்றுக்குடல் மிதிக்கும் குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவை குதறும் நாயாகிறது பசி                        _கவிஞர் யூமாவாசுகி கவிதை ‘தன்னிலை’ வடிவமாக இருப்பதால் மொழியின் உக்கிரமான வடிவமாக இருக்கிறது.  கவிஞன் அனைத்திலும் தானாகிறான். கடவுளைப்போல அல்லது இயற்கையை போல. அவன் உருகும் எலும்பாகவும், நிணமாவும் இருக்கும் நேரத்தில், ஒரு மலராகவும் கனியாகவும் இருக்கிறான். கவிஞர் யூமாவாசுகியின் தொடக்ககால கவிதைகள் மங்கலான ஒரு நகரத்தையும், சந்துகளையும் கொண்டது. இதை பின்புலமாக விரித்து அங்கு அகப்பட்டுக்கொண்ட மென்மையான ஒரு புறாவை நம்மால் காணமுடிகிறது. அந்தப்புறா பசித்திருக்கிறது. அந்தப்புறா பயம் கொண்டிருக்கிறது. அந்தப்புறா வேட்டைக்குள்ளாகிறது. அந்தப்புறா தன்னை குருதியும் சதையுமாக அம்பின் நுனியில் கொண்டு வைக்கிறது. ‘எப்போதாவது இவ்வழியே வரும் வாழ்க்கை இடறி இதில் விழும்போது வசப்படுத்திவிடத்தான் காத்திருக்கிறேன் அம்மா…. என்னை நினைத்துக்கொள்’ இதை போன்று அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் போன்ற...