Skip to main content

Posts

Showing posts from July, 2024

சிபியும் புறாவும்

 [கவிஞர் யூமாவாசுகி கவிதைகள் குறித்து....] இரவின் குளம்புகள் வெற்றுக்குடல் மிதிக்கும் குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவை குதறும் நாயாகிறது பசி                        _கவிஞர் யூமாவாசுகி கவிதை ‘தன்னிலை’ வடிவமாக இருப்பதால் மொழியின் உக்கிரமான வடிவமாக இருக்கிறது.  கவிஞன் அனைத்திலும் தானாகிறான். கடவுளைப்போல அல்லது இயற்கையை போல. அவன் உருகும் எலும்பாகவும், நிணமாவும் இருக்கும் நேரத்தில், ஒரு மலராகவும் கனியாகவும் இருக்கிறான். கவிஞர் யூமாவாசுகியின் தொடக்ககால கவிதைகள் மங்கலான ஒரு நகரத்தையும், சந்துகளையும் கொண்டது. இதை பின்புலமாக விரித்து அங்கு அகப்பட்டுக்கொண்ட மென்மையான ஒரு புறாவை நம்மால் காணமுடிகிறது. அந்தப்புறா பசித்திருக்கிறது. அந்தப்புறா பயம் கொண்டிருக்கிறது. அந்தப்புறா வேட்டைக்குள்ளாகிறது. அந்தப்புறா தன்னை குருதியும் சதையுமாக அம்பின் நுனியில் கொண்டு வைக்கிறது. ‘எப்போதாவது இவ்வழியே வரும் வாழ்க்கை இடறி இதில் விழும்போது வசப்படுத்திவிடத்தான் காத்திருக்கிறேன் அம்மா…. என்னை நினைத்துக்கொள்’ இதை போன்று அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் போன்ற...