2019 நவம்பர் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. இந்தக் கட்டுரை வெளியானது எனக்கு மறந்திருந்தது. அண்மைய வாசிப்பில் புத்தகங்கள் உணர்த்திய அசலான 'வன்முறை' மனதில் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகளும்,கேள்விகளும் இந்தக் கட்டுரையை நினைவுபடுத்தியது. இதை எழுதிய அன்றை விட இன்று இந்தக் கட்டுரை எனக்கு முக்கியமானதாக தெரிகிறது. காதலும் வீரமும் காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய எழுதும் எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு. குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாக கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என்பக்கத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து என் மடியில் கால்நீட்டி கதை சொல்லு என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். சங்கோஜத்துடன் என்னைப்பார்த்து திரும்பியவள் நான் புன்னகைத்ததும் மகனிடம் திரும்பிக் கொண்டாள். நானும் காக்காவா,நரியா,சிங்கமா,புலியா,ராஜகுமாரியா,குமாரனா...