Skip to main content

Posts

Showing posts from August, 2022

அகமும் புறமும் : 2

                 2022 ஆகஸ்ட் 1,வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.             மொட்டவிழும் கணம்                                  ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? அகநானூறு:82     பாடியவர்:கபிலர்   திணை:குறிஞ்சி அகநானூற்றில் களிற்று யா...

முதல்பயணி

                             முதல் பயணி மழைமுடித்த சாலை யாருமற்று கருமையாய் நீண்டு செல்கிறது... முதல் பயணியாய் அப்போதுதான் சுடர்ந்த தெருவிளக்கு வெளிச்சம்

அகமும் புறமும் _ 1

  வாசகசாலையின் இணைய  இதழில் சங்க கவிதைகள் சார்ந்து புதிய தொடர் ஒன்றை எழுத உள்ளேன். இதுதான் என னுடைய முதல் 'தொடர் எழுதும் ' முயற்சி. இதற்காக என்னுடைய வாழ்வனுபவத்திற்கும், நான் கேள்விப்பட்ட மனிதர்களின் வாழ்வனுபவத்திற்கும் ஒத்துப்போகும் பாடல்களை தேடுவது தான் சவாலானது. நிறைய கவித்துவமான பாடல்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான அனுபவம் எனக்கு கிடைக்கும்போது ஒருவேளை மீண்டும் எழுதலாம். இந்த சிறிய வாழ்வின் எல்லைக்குள் எத்தனை சங்கப்பாடல்களுக்கான அனுபவங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஏற்கனவே உணர்ந்த சில தருணங்கள் சட்டென தெளிந்து வருகின்றன. பாடல்களை வாசிக்கும் போது சில வாழ்க்கைகளை புதிதாக இணைத்து கொள்ள முடியலாம். நானே என்னுள் இருப்பவற்றை தேடி கண்டடையும் அனுபவமாகவும், உணர்ந்தவைகளை பகிரும் அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் நன்கு அறிந்த சில சங்கப்பாடல்கள், என் வாழ்வின் வெளிச்சத்தில் எனக்கு என்னவாக இருக்கின்றன என்பதாகவும் இருக்கலாம். செங்காந்தலின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே  இலக்கியங்கள் தன் ஆன்மாவாக கொண்டிர...