Skip to main content

Posts

Showing posts from May, 2023

சுவை

  மழையையே பார்த்துக்கொண்டு கைகளை மறந்து போனேன்... சட்டென்று குனிந்து பார்த்தேன் என் வெல்லக்கட்டி எப்போதோ கரைந்து போயிருந்தது. வெல்லக்கட்டியை வைத்திருந்த கையையும் வழிந்தோடும் நீரையும் மாறி மாறி பார்த்தேன். கலங்கல் நீரில் ஒன்றுமில்லை. குழிந்திருந்த மறுகையின் உள்ளங்கை நீருக்கு குளிரின் சுவை.

அகமும் புறமும் : 20

   2023  மே 1   வாசகசாலை இணையஇதழில் வெளியான கட்டுரை: அகமும் புறமும் நிறைவு   காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை : 14 பாடியவர் : பேரெயின் முறுவலார் திணை : குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை,கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன. மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம். ஒரு தலைக்காதல் பொருந்தாக்காம வகையை சேர்ந்தது.  தலைவி தன் காதலை ஏற்காத நிலையிலோ அல்லது தலைவியின் இல்லத்தார் தன் காதலை ஏற்காத போதோ தலைவன் மடலேறுகிறான். என்றாலும் உடன்போக்கு என்ற வழக்கம் உள்ளதால் குடும்பத்தாரின் ஏற்புக்காக தலைவன் மடலேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.  தலைவன் பனைமரத்தின் கருக்கு ஓலையால் செய்யப்பட்ட குதிரையில் ஊர் மன்றிற்கு வருகிறான். சிறுவர்கள் அந்தக்குதிரையை இழுத்து வருவது மடலேறுதலின் வழக்கம்.  தலைவன் தான் விரும்பும் தலைவி யார் என்று ஊருக்கு அ...

அகமும் புறமும் : 19

      2023 மார்ச்  16 வாசகசாலை இணைய இதழில் வெளியான    கட்டுரை.        அகநக நட்பு யாழொடும் கொள்ளா,பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன_ ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு : 92 பாடியவர்: ஔவையர் பாட்டுடைத்தலைவன்: அதியமான் நெடுமான் அஞ்சி திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி ஔவையார் அதியமானை பாட்டுடை தலைவனாக்கி ‘எண்தேர்செய்யும் தச்சன்’ [புறம் 87] போன்ற புகழ் பெற்ற பலப்பாடல்களைப் பாடியுள்ளார். உவமை அழகுகள் மிக்க பாடல்கள் அவை.  தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்ததை கூறும் பாடல் உள்ளது. புலால் நாற்றமடிக்கும் என்  தலையை அவனுடைய நறுமணம் மிக்க  கையால் தடவுவான் என்று ஒளவை ஒருபாடலில் சொல்கிறார். ‘முழவுத்தோள் என் ஐயை’[புறம் 89] என்ற வரியில் தலைவனாக,இறைவனாக,தந்தந்தையாக அவனைப் பாடுகிறாள். அதியமானை ‘என் ஐயை’ என்று இன்னும் சில பாடல்களிலும் கூறுகிறாள். ‘நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை’[ புறம் 94]...

அம்பையின் படைப்புலகம் : 1

 பிப்ரவரி 2023 நீலி இணைய இதழில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் அம்பை அவர்களின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து….                 விழிப்பிற்கான சொல் ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள்,சிறைகள்,தூக்குமரங்கள்,ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?’ என்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் வரிகளுடன் இந்தக் கட்டுரையை தொடங்குகிறேன். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையில் வரும் வரிகள் இவை. பொதுவாகவே அம்பையின் கதைகளின் ஆதாரமான, பெண்களை நோக்கிய அம்பையின்  சொற்கள் இவை. ஒரு பிரார்த்தனையைப்போல ஒரு வேண்டுகோளைப்போல பெண்களை நோக்கி ஒலிப்பவை.  இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. நான் முதன்முதலில் வாசித்த பெண் எழுத்தாளர் அம்பை. பதினாறு வயதில் என்று நினைக்கிறேன். அதுவரை எழுத்தாளர்கள் என்றால் ஆண்கள் தான் என்று நினைத்துக் கொண்டிரு...

வெயில்நேர மதியம்

விழித்துப்பார்க்கும் போது அந்தரத்தில் மரக்கிளைகள், அங்கங்கே இலைகள் வழிவிட்ட ஔிவில்லைகள், மிச்சமெல்லாம் நிழல். கண்களை மூடினால் இலைகளின் சலசலப்பு காதுகளையும் மறந்தால் காற்றின் தொடுகை. 'நின்னா சும்மா மரம் மாதிரி நிக்கனும்'