ஈராயிரமாண்டு மனநிலை
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8RieQG3qjfIacoeUNkLhXgm_tcSCdDJR8Up7A0H6W3AIaZ0sJYKGibrM9GRqfyOxE62UAUAN17__-8030ZM-g_G_COTPX4Vgfqnb6FBZgZnJz-LJY4NUUSxVrEZtwVTxdHlc0Mz5zNoeHZDOJRQ6GJLlE607WSgVa4NFh9TwgcOtHEbtuIDyN5Ec0BTE/s1600/images%20-%202024-06-14T055741.073.jpeg)
எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் 'அப்பாவின் குரல்' கதையை சென்ற ஞாயிறு காலையில் வாசித்தேன். அம்மா விடியற்காலையில் துறையூரில் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டார். சமையல் அறை பேச்சரவம் இன்றி அமைதியாக இருந்தது. பத்து நாட்களாக தினமும் அந்தியில் பெய்யும் மழை காலை நேரத்தை இதமாக்கிக் கொண்டிருக்கிறது. நேற்றும் அதற்கு முன்தினமும் நல்ல மழை. சமைக்கும் போது 'அப்பாவின் குரல்' கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பின் வீட்டு நந்தினி குரூப் 4 தேர்விற்கு கிளம்பி அவள் அம்மாவிடம் சொல்லிக்கொள்ள வந்திருந்தாள். அடுத்தத்தெருவில் அவளின் கணவன் வீடு. எத்தனைப் பெண்கள் அடுப்படியில் தன் கணவனிடம் கேட்ட தகாத சொல்லை நினைத்து நினைத்து வெதும்பியிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. பெண்ணை நடத்தை சார்ந்து கீழ்மை படுத்த,காயப்படுத்த சொல்லப்படும் இரண்டுசொற்களை இந்தக்கதையின் நாயகன் தன் மனைவியை பார்த்து தான் சொல்லிவிடக்கூடாது என்று நினைக்கிறான். அப்பா அம்மாவை திட்ட பயன்படுத்தும் அந்த சொற்கள் அம்மாவின் ஆழத்தை எந்த அளவுக்கு பாதித்தது என்று புரிந்திருப்பவன். அவன் தன் மனைவியை திட்டுவதற்கு அந்த சொற்களை பயன்படுத்தாமலிருக்