Skip to main content

அகம் என்னும் காடு

 எனக்கு தமிழ் புத்தாண்டு மனதிற்கு நெருக்கமானது. நிலத்தின் வசந்தம். 

அதிகாலையில் தினமும் வாசலில் கோலமிடும் போது கிருஷ்ணர் பாதங்களை படிகளுக்கு கீழே மனிதகால்கள்படாத இடத்தில் வரையும் போது கிருஷ்ணா ரா என்று மனதிற்குள் சொல்வது வழக்கம். பதிமூன்று வயதிலிருந்து சடங்கிற்காக சொல்லத்தொடங்கி, வழக்கமாகி, கவனமில்லாமல் அனிச்சை செயலாகி, இப்போது அனிச்சையான கவனமாகி உள்ளது. கிருஷ்ணா ரா என்று எதை அழைக்கிறேன்? சிறுவயதில் அப்படி அழைக்கும் போது அது வெறும் வார்த்தை. பின்னால் தவழும் கண்ணனின் சிலை மனதில் இருந்தது.  பின் வளர்ந்து உரலை இழுக்கும் தாமோதரன். கதைகளுக்குள் பித்தாக இருந்த நாட்களில் உலகுண்ட பெருவாயன். அதன் பின்னால் தொலைகாட்சிகளில் பார்த்த ராதாகிருஷ்ணர்கள். கல்லூரி நாட்களில் முதன்முதலாக திருப்பாவை படித்த நாட்களில் ஆண்டாளின் மோகனன். பின் வெண்முரசின் கிருஷ்ணன்..குறிப்பாக  நீலம் நாவலின் கிருஷ்ணன்.

 நீலம் வாசிக்கும் போது ஓவியர் சண்முகவேலின் கிருஷ்ணர்கள். தினமும் ஒரு கிருஷ்ணன். அழகான அதிகாலைகள் அவை. சற்று பெரிய மென்நீல பூவின் மீது பூக்கள் உதிர சிவந்த குட்டிப்பாதங்கள். நான் அன்றாடம் வாசலில் வரையும் பாதத்தின் உச்ச வடிவங்களில் ஒன்று. உடைந்த வெண்ணெய் பானையில் இருந்து  வெண்ணையுடன் காற்றில் பறக்கும் நீலன். ராதையின் இடையில் மடியில் அமர்ந்தவன். பூதகியின் மார்பில் ஔிரும் நீலன். பூதகியிடம் இருப்பவன் மிக அழகான கண்ணன். அவளுடைய நஞ்சு முழுக்க இவனில் நிறைய ஔிரும் நீலன் என்று தினமும் ஒரு கண்ணன்.

இத்தனை கிருஷ்ணர்களில் மனதில் தங்கியிருக்கும் ஓவியம் சொல்வளர் காடு நாவலில் வரும் கிருஷ்ணர். வெண்முரசு வாசிக்கும் போது மனதில் தங்கிவிட்ட கிருஷ்ணர். பாண்டவர்கள் பணையமாக அனைத்தையும் இழந்து வனம் புகுந்த பின்னர் கிருஷ்ணர் அவர்களை காண வருகிறார். அவருக்கும் துவாரகையில் அரசியல் குழப்பங்கள். பெருங் கோபத்தின் இன்னொரு முகமாக அலட்சியமாக இருக்கும் திரௌபதியை கடிந்து கொள்கிறார். பின் தருமரிடம் உரையாடிவிட்டு விடைபெறுகிறார். தருமரின் பார்வையில் இருந்து வரையப்பட்ட ஓவியம். கிருஷ்ணர் தனியாக காட்டை பார்த்து நடந்து செல்கிறார். இந்த ஓவியத்தை பலமுறை தேடி எடுத்து பார்த்திருக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு கூட. 


                    ஓவியம் : ]சண்முகவேல் வெண்முரசு நாவலில்]

நம் மனதில் நம்மை அறியாமலேயே சில விதைகள் விழுந்து விடுகின்றன. காலம் செல்ல செல்ல முளைத்து மரங்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அகம் ஒரு காடு. அறியாத வயதில் விழுந்த  விதைகள் வளர்ந்த காடு.  பல ரூபங்களும், நிகழ்வுகளும், சொற்களும், உணர்வுகளும், கனவுகளும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதில் இந்த 'கிருஷ்ணா ரா' வை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

தினமும் கிருஷ்ணா ரா... வென்று எதை அழைக்கிறேன். கண்டிப்பாக அது தூல வடிவமான ஒன்று இல்லை. அந்த வானின் அதிகாலை நிறங்களை,பட்சிகளை,தென்னம்கீற்றின் தலைகுலுக்கலை,வேம்பின் உழைவை,வீட்டின் எதிரில் உள்ள கிணற்று சுவரில் எததனை முறை அழித்தாலும் விடாப்பிடியாக தளிர்க்கும் அரசங்கன்றின் அடர் இளம் சிவப்பான தளிரில்,அதன் அருகில் பூத்துக்குலுங்கும் வாடாமல்லிநிற நித்யமல்லி மலர்களில்,வரையும் கோலத்தில், ஈரமான துளசி செடியின் இலைகளில், வாசிக்கும் புத்தகங்களில் சொல்லாக மொழியாக...

 அன்றாடம் என்னை எழவைக்கும் ஒன்றையே தினமும் அழைக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இரவு வெப்பத்தின் விளைவாக அதிகாலையில் எழுந்ததும் சின்ன சூரைக்காற்றுடன் மழை. சொல்லில் வைக்க முடியாத ஒரு தண்மை. மிக மென்மையான தண்மை. காற்றாக மழையாக...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்ட  பாசுரம் இது. இந்தப்பாடலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இந்தப்பாடகியின் குரலில் இந்த இசையில் அமுதமாய்...

https://youtu.be/aAunpj7yHJQ?si=w8tlGTqS-vm_sagg


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...