[ 2024 அக்டோபர் வாசகசாலை 100 வது இதழில் வெளியான சிறுகதை] விக்ரமாதித்தனும் வேதாளமும் கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன் . அதன் கீழே பெரிய வலை . அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப்பிடிக்கிறேன் . அந்தரத்திலிருந்து ஒரு முகம் என்னை குனிந்து பார்க்கிறது . அதன் கண்களில் எத்தனை குளுமை . கமலா .. என்று அழைக்க நினைக்கிறேன் . குரல் எழவில்லை . விழித்துக்கொண்டேன் . தேகத்தை சிரமப்பட்டு அசைத்து நிமிர்ந்து படுத்தேன் . நான் படுத்திருப்பது ரயில் பெட்டியின் கீழ் படுக்கை . ஒன்றிரண்டு படுக்கைகளில் ஆட்கள் இல்லை . வானம் வெளுக்கும் நேரத்தில் மெட்ராஸ் வந்துவிடும் . அதற்குள் யாருக்காவது காகிதம் எழுத வேண்டும் . பங்குனி மாதம் . ஜன்னலுக்கு வெளியே பார்ப்பவருக்கு நேரங்கொடாமல் அதிகாலை காட்சிகள் ஓட்டப்பந்தயம் நடத்தின . பஸ் பிரயாணம் ஒரு சுகானுபவம் . மெல்ல வெற்றிலை போடுவது போல . எரிச்சல் கொண்ட கண்கள் களைத்து வந்தது . ...