Skip to main content

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் சிறுகதை

      இந்தியாடுடே இலக்கியஆண்டுமலர் சிறுகதை 2            


              எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம்

பைத்தியக்காரப்பிள்ளை என்ற சிறுகதையை எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். இக்கட்டான காலக்கட்டங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள் நிறம் இழக்கின்றன. இந்தக்கதை வறுமையில் தாய் மகனின் உறவை விசாரிக்கிறது.



கும்பகோணத்தின் சௌராஷ்ரா தெருவின் நெருங்கிய குடியிருப்பு ஒன்றின் அதிகாலையில் கதை தொடங்குகிறது. நாலறை மணிக்கு எழுந்த ராஜம் சந்தடி செய்யாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு காபிகடைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா விழித்துவிடுகிறாள்.

அவன் எழுந்ததிலிருந்தே அம்மா மீதான சலிப்பில் ஏன் இப்படி இருக்கிறாள்? இவள் ஒரு அம்மாவா என்றே எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து பத்துபிள்ளகளை பெற்ற அம்மா. பத்தாவது பிள்ளை பிறந்ததும் குடித்தே இறந்து போகும் அப்பா.



எப்பொழுதும் பிள்ளைகளை திட்டவும் பேச்சால் அவமானப்படுத்தவுமாக வேலைவாங்கும் அம்மா. இந்தக்கதை வறுமை பீடித்த வாழ்வில் தாய்மகனின் அன்பை பரிசீலிப்பதாகவோ தாய்மை சார்ந்த கேள்வியை எழுப்புவதாகவோ கொள்ளலாம்.

கும்பகாணத்தின் சௌராஷ்ரா தெரு என்றதும் நமக்கு தி.ஜாவின் பாபுவின் யமுனா நினைவிற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. தி.ஜா காட்டாத கும்பகோணத்தின் மற்றொரு முகம். அதே மகாமகம் குளம். அதே மாதிரியான தற்கொலை எண்ணத்துடன் செல்லும் இளைஞன். இவன் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை அம்மா அவமரியாதையாக பேசிவிட்டதற்காகவும்,தன்னை தன்கடமை உணர்வை, பொறுப்புணர்வை உதாசீனம் செய்யும் அம்மாவை அழவைக்கவும் தன்னை மாய்த்துக்கொள்ளும் இளைஞனின் தற்கொலை செய்துகொள்ளும் அந்தநாள்தான் கதை. 



காலையில் எழுந்ததிலிருந்து மிக மெல்ல அவனின் மனஅழுத்தம் தொடங்கி வலுப்பெறுவதும்,அவன் அதை விலக்கி விலக்கி தவிர்க்க முயன்றும் பழையநினைவுகளும் சுயபச்சாதாபமும் இணைந்து அதை மூடுவதுமான போராட்டம் கதையில் கைக்கூடியுள்ளது. இறுதியில் தங்கையிடம் ஒருரூபாய் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் போதுதான் வாசிப்பவர்களுக்கே ஒருபதட்டம் ஏற்படும். இயல்பாக தோன்றும் தற்கொலை உணர்வு அனைவரும் எப்போதாவது கற்பனை செய்து பார்ப்பதுதான். 



அதிலிருந்து உண்மையான அதை நோக்கி மனம் செல்வதை கதை இயல்பாகத் தொடுகிறது. எண்பதுகளின் இளைஞர்கள் கதை. அதிலும் மூத்தஆண்பிள்ளைகளுக்கு அன்றிருந்த குடும்பபாரம். மேலும் அன்றிருந்த மனநிலை. மூத்தப்பிள்ளை என்றால் தந்தைக்குப்பிறகு பொறுப்பேற்க சமூகமும்குடும்பமும் அவர்களை தள்ளுகிறது அல்லது அதை ஒரு இன்றியமையா கடமையாக கட்டமைக்கிறது. அதை எதிர்கொள்பவர்களை இன்று புரிந்து கொள்வது கடினம். 

அந்தத் தலைமுறையின் எச்சங்களான முதியவர்களை இன்று காண்கிறேன். அவர்களின் வாழ்க்கை மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது. பிள்ளைகளிடமும் ஏச்சு,இளையவர்களும் எரிச்சலுமாக அவர்கள்அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்கள் 'லௌகிகத்தின் ஏமாளிகள்' என்று நான் சொல்வேன். இன்னும் மீறிசென்று அடுத்தத்தலைமுறை மிதித்தேறிய தோள்களைக் கொண்ட வலியவர்கள் என்றும் சொல்லலாம். பொதுவாக அந்தத்தலைமுறையின் இளம்வயதின் மனநிலையை காட்டும் இந்தக்கதை உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மனிதமனம் எதிர்பாராது தன்னை மாய்த்துக்கொள்ளும் உளநெருக்கடி என்றைக்கும் உள்ள மானுடசிக்கல் என்பதால் அதை எந்தமிகையும் இன்றி இந்தக்கதையில் வெளிப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...