Skip to main content

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு அஞ்சலி

         கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார்.




"மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்"
                _பிரான்ஸிஸ் கிருபா

       பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன. 

"கணங்கள்தோறும் 

என்னை நானே

தண்டித்துக்கொண்டிருக்கும்

போது….ஏன்

நீயேனும் கொஞ்சம்

என்னை மன்னிக்கக்கூடாது"

பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது!






"நடைபோடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று

ஒற்றை விரலுக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி

முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்

வலியில் துவள்கிறது நிலம்..."


இந்தக்கவிதையும் ஒரு விரலின் இருப்பை ,இன்மையை பேசுகிறது. அந்தவிரல் யாருடையதாகவும்,எதனுடையதாகவும் இருக்கலாம். காற்றோ, மழையாகவோ அவ்விரல் இருக்கலாம்.



"நடக்கத்தொடங்குகிறேன்...கொலைவாள் நீட்டி நீ மன்னித்துக்காட்டிய வழியில்...." என்ற வரிகளில் நின்று அதிர்கிறது மனம். பிரான்சிஸின் கவிதைகளில் அன்பும், மன்னிப்பின் வலியும்,துயரமும்,குரூரமும்,கருணையும் ஒன்றைஒன்று விரல்பிடித்துக்கிடக்கின்றன.


"சூரியனை நம்பக்கூட சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில்..."

முன்னால் உள்ளகவிதைக்கு மாற்றுதிசையில் நிற்கும் கவிதை இது. கொலைவாள்கூட மன்னிக்கும் என்ற நம்பிக்கைக்கு அப்புறம் உள்ள மாபெரும் நம்பிக்கையிழப்பு.




பிரான்சிஸ் கிருபா விகடனுக்கு அளித்த பேட்டிலிருந்து மூன்று பதில்கள் மட்டும்:

நிலம், இருப்பிடம் என்பதைப் பற்றியான உங்களின் மதிப்பீடு என்ன?’’

“ `நிழலைத்தவிர ஏதுமற்றவன்’ என்ற என் படிமம்போல, ஏனோ நிலமும், இருப்பும் எனக்குப் பொருந்தமாட்டேன் என்கின்றன. அறைகள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. உறங்குவதற்கு மட்டுமானவையாக அவை எஞ்சி நிற்கின்றன. கடற்கரைதான் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.”

உங்கள் கவிதைகளில் பைபிளின் தாக்கம் இருக்கிறதே?’’

“ `பழைய ஏற்பாடு’ நான் விரும்பி வாசித்தது. அதன் மொழி உச்சம். ஒருவேளை என்னுடைய உரைநடையில் அதன் தாக்கமிருக்கலாம்.”

வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என்னால் மூன்று இட்லிகளைக்கூட முழுமையாகச் சாப்பிட முடியாது. சில சமயங்களில் அதற்கும்கூடப் பணமிருக்காது. முகம் தெரியாதவர்களின், நண்பர்களின் அன்புதான் எனக்குள்ளிருக்கும் வெற்றிடத்தை இட்டு நிரப்புகிறது. நண்பர்கள்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார்கள்.”


கவிதை எழுதுகிறேன் என்று எழுதத்தொடங்கித்தான் எழுதுபவர்கள் தொடக்ககாலத்தில் எதையாவது எழுதத்தொடங்குகிறோம். என்றாலும் கவிஞராகவே இருப்பது என்பது வெகுசிலருக்கே வாய்க்கிறது அல்லது வெகுசிலரே அத்தனை வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் கவிஞர்கள் என் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரியவர்கள். கவிஞருக்கு அஞ்சலி.


 பிரான்ஸிஸ் கிருபாவின் படைப்புகள்

நாவல்
தொகு

  • கன்னி

கவிதை தொகுப்புகள்தொகு

  • மல்லிகைக் கிழமைகள்
  • சம்மனசுக் காடு
  • ஏழுவால் நட்சத்திரம்
  • நிழலன்றி ஏதுமற்றவன்
  • மெசியாவின் காயங்கள்
  • வலியோடு முறியும் மின்னல்.

விருதுகள்

  • சுந்தரராமசாமி விருது - கவிதைக்கான விருது (2008)
  • சுஜாதா விருது - சம்மனசுக்காடு (2017)
  • மீரா விருத்
  • ஆனந்த விகடன் விருது




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...