Skip to main content

Posts

Showing posts from May, 2022

சிறுகதை: சொல் பேச்சுக் கேட்காத கரங்கள்

 2018 ஜீலை பதாகை இதழில் வெளியான சிறுகதை. சொல்பேச்சுக் கேட்காத கரங்கள் பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது.அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தது.கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏறமுடியாமல் பேருந்தில் ஏறினார்.பேருந்தில் நல்ல கூட்டம்.அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள்.வேட்டியை மடித்துக்கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தப்பின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலயகட்டிக்கிட்டு நிக்க முடியாது…வேணாம்,”என்ற குரல் தடுக்கையிலேயே எழுந்து கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமர சொன்னதும் அமர்ந்து கொண்டார்.பக்கத்தில் அமர்ந்திருந்தஅம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார்.இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான்.கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறிய கற்றிருக்கிறது.அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,”என்றாள்.நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்ற...

கடல்: ஸ்பாட் லைட் நிகழ்வு

 என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பான 'கடல்' குறித்து வாசகசாலையின் ஸ்பாட் லைட் என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசப்பட்டது. வாசகபார்வையில் நந்தினி மாரிமுத்து அவர்கள் பேசினார். ஜா.ராஜகோபாலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இருவருக்கும் அன்பும் நன்றியும்.  வாசகபார்வைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/33rqYWlKldU சிறப்புரைக்கான காணொளி இணைப்பு கீழே: https://youtu.be/4SfKiRnr0cw வழக்கம் போல வாசகசாலைக்கு எப்போதும் என் அன்பு.

நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று: சிறுகதை

 2018 மே பதாகை இதழில் வெளியான கதை. நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று இளம்காலை விடுதியின் வாயிலில் நின்ற என்தோளில் சங்கரிதான் கைவைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான சற்றுதண்மையான கைகளின் தொடுதலுக்கு நெக்கியது உடல்.நண்பர்கள் அனைவரிடமும் தயக்கமில்லாமல் எதார்த்தமான சங்கரியின் இந்தத் தொடுகை முதலில் விதிர்ப்பை , சிறுபதட்டத்தை உண்டாக்கி பின் இயல்பாகியது .  பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நிமிர்ந்த சங்கரியிடம் நான், “மலரக்கா வரலயா?”என்றேன். இல்லையென தலையாட்டிய சங்கரி,  வாயிலவரிடம், “அண்ணா...ஏழுமணிக்கெல்லாம் வந்திருவேன்,”என்றபடி படியிறங்கினாள்.நாங்கள் நடந்துசென்ற  சிமெண்ட் பரப்பில் வெயில் ஔியாய் விரிந்திருந்தது. “சாப்பிட்டியாம்மா?”என்ற அவரின் குரல் கேட்டு சங்கரி திரும்பி புன்னகைத்து தலையாட்டினாள். வடக்காக சாலையைக்கடந்து பேருந்துநிலையத்தின் காந்திசிலையருகே நடந்து கொண்டிருக்கையில், நேர்காட்டில் தொலைவில் கண்களில்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தைக் கண்டதும், “மழை வராப்ல இருக்கு சீக்கிரம் வேலைய முடிக்கனும்.வழியில் எதாச்சும் கோயிலுக்கு போயிட்டு போலாம்,”என்றேன்.மனதில...

கங்காளனின் பாதங்கள்

 கடல் புத்தகத்தின் எழுத்தாளர்களுக்கான பிரதிகள் வந்து சேர்ந்ததும் ஆண்டாள் நினைவிற்கு வந்தாள். திருவெள்ளறை ஆண்டாள். எப்போது திருவெள்ளறைக்கு சென்றாலும் வெளிசுற்றில் ஆண்டாளை வணங்கிவிட்டு அருகில் உள்ள தூண்வரிசைகள் நீளும் மதிலோர பிரகாரத்தில் அமரும் போது எழுத்தெல்லாம் சுடராகி எரியவேண்டும் என்ற பாரதியின் சொற்கள் நினைவிற்கு வரும். சொற்கள் வேண்டும் என்று ஆண்டாளிடம் அன்றி யாரிடம் கேட்பது. கடல் புத்தகத்தை அவள் பாதங்களில் வைக்க எண்ணியிருந்தேன். இதுவரை எழுதும் பெண்கவிஞர்களின்  ஒன்றிணைத்த வடிவமாக எனக்கு ஆண்டாள் இருக்கிறாள். அங்கு செல்ல அமையவில்லை. நேற்று ஜம்பேரி என்ற பெரிய ஏரியை கோடையில் பார்க்கச்சென்றிருந்தேன். கொல்லிமலைத் தண்ணீரை சேமிக்கும் மிகப்பெரிய ஏரி அது.  வைரிசெட்டிப்பாளையம் என்ற ஊரின் மேற்குபுற எல்லையில் உள்ளது. கொல்லிமலைத்தொடரும் பச்சைமலைத்தொடரும் இணைவதை உயர்ந்த ஏரிக்கரையிலிருந்து கண்டேன் . பெயர் வைத்து நாம் தான் மலைத்தொடர்களை பிரித்து விட்டோம்.  ஏரிக்கரை ஊரின் நாயகர் சப்தரீஸ்வரர். நாயகி குங்குமாம்பாள். மிகப்பழைய கோவில். காலையில் இறைவனுக்கு மாணிய நெல் அளந்து குவித்திருந்த...

நேர்காணல்: லாவண்யா சுந்தரராஜன்

 வாசகசாலை ஏப்ரல் மாத இணைய இதழில் வெளியான நேர்காணல் இது. எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் முதல்நாவல் காயாம்பூ . அந்த நாவலை மையப்படுத்திய நான் செய்த நேர்காணல். குழந்தையின்மை என்ற பேசுபொருளை அணுகியிருக்கும் விதம் சார்ந்து தமிழ் நாவலில் செய்யப்பட்டுள்ள முதல் முயற்சி என்று நினைக்கிறேன். எழுத்தாளருக்கும் வாசகசாலை இணைய இதழிற்கும் என்  அன்பு. 1. கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி சொல்லுங்க இந்த நாவலை எழுத ஆரம்பித்த போது இதெல்லாம் எழுதலாமா? நாவலின் மைய பாத்திரமான நந்தினியை போன்ற பெண்களின் இவ்வளவு பெரிய வலியை படைப்பாக்கும் போது அது புலம்பல்களின் திரட்டு போல ஆகிவிடுமா? இதில் எதை எல்லாம் சொல்லலாம். எதைச் சொல்லாமல் விடுவது. வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி பல மனத்தடைகள் இருந்தன. மேலும் புனைவுகளை வாசிக்கும் போது அதில் நாவலாசிரியரை தேடும் வழக்கம் எல்லா வாசகர்களுக்கும் இருக்கும். நிஜம் போல எழுதப்பட்ட புனைவு தான் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. அப்போது நாவலாசிரியர் அல்லது கதைசொல்லியின் சாயலை அதில் உலவும் க...

கிரகணப்பொழுது: சிறுகதை

மார்ச் 2018 சொல்வனம் இதழில் வெளியான கதை கிரகணப்பொழுது        மாடியறையின் படியில் அடுத்திருந்த திண்ணையில் கையூன்றி அமர்ந்தேன்.விரிசலிட்ட ஆளுயரக்கண்ணாடி திண்ணையில் அமர்ந்திருக்கிறது.குப்பைவண்டியில் போட வேண்டும்.சாயுங்காலம் ஆறுமணி. முழுநிலாநாள் இது. இன்னேரம் கிழக்கில் இந்த பெரிய கம்பிஜன்னலின் வழி பச்சைமலை குன்றிலிருந்து ஔித்தகடு எழுந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று மெல்லிய இருள் சூழத்துவங்கியது.மேற்குபக்கம் அடர்சிவப்பில் ஔி மறைந்ததைப் பார்த்து அம்மா, “கீழப் போறேன்,” என்று இறங்கினார்.தெருவிளக்கு ஔிராததால் இருள் சீக்கிரம் கவிவது போலிருந்தது. தெருவில் நடமாட்டமில்லை.பதின்பயல்கள் ஏதோ சாகசம் என நினைத்து தெருமுடக்கில் நின்று உரக்க சிரித்துக் கொண்டிருந்தார்கள்.இதே போலொரு அந்தியில் பச்சைமலையின் மண்மலைக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் தாத்தா வீட்டுக்களத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கிழக்கே குச்சிவள்ளிக்கிழங்கு செடிகளின் பெரிய கைகள் போன்ற இலைகள் காற்றிலசைந்து கொண்டிருந்தன.அம்மா, பெரியம்மா, அம்மாச்சி என்று மூவரும் சமைத்துவிட்டு தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார்கள். பெரியம்மா,“அய்யாவுக்...

மிச்சமின்றி அழித்தல்

                          மிச்சமின்றி அழித்தல் அணைந்து பறக்கும் சாம்பலில் விழுகிறது விசும்பின் துளிகள் உயிர்பிடித்தெழுகின்றன  சாம்பலாய் போன  முதுகாடு ஔித்துவைத்திருந்த புதுமுளைகள்.

திரும்புதல்: சிறுகதை

      சொல்வனம் 2018  பிப்ரவரி இதழில் வெளியான கதை.                                      திரும்புதல் மழைகால இருளில் சுடரத்தொடங்கும் ஒற்றை விளக்கை சூழும் பூச்சிகளென பள்ளிவிட்டு வெளிவருகையிலேயே, அன்றாடம் வந்து மொய்க்கத்துவங்கி விடுகிறது. அதுவாக வருவதில்லை. மனம் காத்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ஒடுகம்பட்டி பேருந்துநிலையத்தில் நிற்கிறேன். பத்துநிமிடத்திற்கு ஒருஆள்,ஆடு,மாடு கடந்து போகும் பாதை.பக்கவாட்டில் பெயர் தெரியாத குன்றொன்று குற்றுச்செடிகளோடு நிற்கிறது. கையிலிருந்த உணவுப்பையை சிமெண்ட்பெஞ்சில் வைத்தேன்.சகஆசிரியைகள் பேசிக்கொள்ளும் ஒலிகளை உள்வாங்கி பதில் சொல்லிக் கொண்டு இன்னொரு தனிப்பாதையில் நடந்து கொண்டிருந்தது என் மனம். காலையில் கட்டிய பருத்திப்புடவை துவண்டிருந்தது. விசிறியிலை மடிப்புகளை சரி செய்தேன். அக்காண்டிக்குருவி மின்கம்பியிலிருந்து எழுந்து பறந்தது.அது புளியமரக்கிளையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி எதையாவது நான் பார்த்துக் கொண்டிருந்தால் அ...