Skip to main content

Posts

Showing posts from August, 2025

பிள்ளையார்

ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன்.  அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான். தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள்  பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள். இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள்...

உன்னிப்பூக்கள்

உச்சிப்பொழுதின் வெயிலில் வாய்க்கால் தண்ணீரின் பளபளப்பு. அம்மாச்சியின் ஊதாப்பூ சேலைக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தேன்... கண்கள் கூசிக்கொண்டே இருந்தது. மூன்று நாட்களாக எந்தநிமிஷத்திலும் விட்டு போய்விடுவாள் என்று தெரியும். வாய்க்காலிற்கு மேலே  களத்திலிருந்து குரல்கள்.. சேலையை அலசி கல்லில் வைத்துவிட்டு பெருமூச்சுடன் நின்றேன். கால்களை தழுவி நீர் ஓடியது. உன்னிப்பூ கொத்து காற்றிலாடி உசுப்பியது... இருட்டிலும் வெளிச்சத்திலும் பளபளக்கும் அம்மாச்சியின் பத்துக்கல் மூக்குத்தி போல.

உலராத கண்ணீர்

 [ 2025 ஜூலை கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்]                 [ கவிஞர் போகன் சங்கர்] கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித்தில்லை என்றாள் அவள் இங்கு பறவைகள் இருக்கின்றன என்றாள் நூற்றுக்கணக்கில் பிறகு  ஊழிவரும்வரை  உறங்க முடியாத தெய்வங்கள் ஆயிரக்கணக்கில் காலத்தில் உறைந்த விழிகளை மூட முடியாமல் பார்த்துக்கொண்டே இருக்கின்றன எப்போதும் எல்லாவற்றையும் என்று சிரித்தாள். அது வீசப்பட்டது போல பெருகி வெளியங்கும் நிறைந்தது அந்த சிரிப்பின் முடிவில் வைரம் போல் மின்னும் இரண்டு கூர்க் கொடும்பற்களை நான் ஒருகணம் பார்த்தேன் அஞ்சி ஓவென்று அலறினேன் அவள் வாய்மீது விரல் வைத்து அஞ்சாதே என்று புன்னகைத்த போழுது யாரோ எய்தது போல இளவெயில் நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி இறங்கி அவள் உதடுகள் மேல் அமர்ந்தது. நான் அது சிறகுகள் அசைய அசைய மது உண்பதைப் பார்த்தேன். அப்போது ஒரு புத்தனின் கண்கள் அவளிடம் இருந்தது அல்லது முலை கொடுக்கும் தாயின் கண்கள் ஆனால் ஒரு ஓவியத்தின்...

காட்சி...

  https://youtu.be/_YNIG1TKMdk?si=GqsGmIiSuEyU1LU9 இந்தப்பாடல் பதினோரு வயதிலிருந்து வெவ்வேறாக மனதில் நீங்காமல் உள்ளது. பதினோரு வயதில் பாடலில் வரும் காட்சிகள்  பிடித்தது. இப்போதும் காட்சிகள் தான் இந்தப்பாடலை திரும்ப பார்க்க வைக்கிறது. ஒரு Break தேவைப்படும் போது  இந்தப்பாடலின் காட்சிகள் சலிக்காதவை. இந்தப்பாடல் நான் ஐந்தாம் வகுப்பு முடித்து  புதுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது கேட்டப்பாடல். அப்போது தான் சன் டி.வி கனெக்ஷன் உப்பிலியபுரம் என்ற ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வீடுகளில் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் தூர்தர்ஷன் மட்டும். ட்யூஷன், பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த வீட்டு முற்றங்களில் நின்று கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்போம்.  ஒரு நாள் இரவு ட்யூஷன் முடிந்து அப்போது பிரபலமாக இருந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் பார்த்த பாடல் இது. அய்யா ட்யூஷன் ஹாலை பூட்டிவிட்டு சைக்கிளில் வருவார். வீட்டிற்கு நான்கு தெருக்கள் நடக்க வேண்டும். பாடல் முடிந்ததும் வழியெல்லாம் வானத்தை நிலாவை பார்த்துக்கொண்டு தனி...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...

காலன் அகாலன்

  அகாலத்தில் எங்கோ பற்றிய எரி... காலபைரவனின் இதழ்கடை துளி புன்னகை, தலைமுறைகளின் சிதைகளில் மிஞ்சிய ஒரு கனல்துண்டம். காட்டெரிக்கு மூலம் இல்லை. ஒரு சருகு சிறு பொறி உண்டு செரிக்கிறது காட்டை. பசுமரக் கிளைகளில் செந்தளிர்கள் அன்று பூத்த பூக்கள்.. கனல் பூத்தக் காட்டில் காலம் வேகும் மணம். அவன் நடனத்தின் பதங்களில் மண்ணுக்குள்  விதைகளின் கண்கள் திறக்கின்றன.