Skip to main content

Posts

புதையல்:சிறுகதை

 2017 டிசம்பர் சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை. நன்றி:சொல்வனம்                     புதையல்                                                                                                                                                                     “ஒருமுறை பார்ப்பதால் என்ன நடந்துவிடும்?” என்ற கேள்வியுடன் படிகளில் இறங்கினேன். கால்களில் மெல்லிய நடுக்கமிருந்தது. வியர்வையில் நனைந்த உள்ளங்கைகளை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டேன். இருபுறமும் இழுக்கும் மனதின் கடிவாளத்தை இழுப்பதே வேலையாக இருக்கிறது. தமிழ் மேடமை பார்ப்பதற்கே எனக்கு ...

விலக்கம் சிறுகதையின் ஒலிவடிவம்

 நன்றி:சொல்வனம் மற்றும் சரஸ்வதி தியாகராஜன் https://youtu.be/3mQZ2sXky-A

நீள்ஆயுள் நிறைசெல்வம் சிறுகதையின் ஒலிவடிவம்

சொல்வனம் இதழில் வெளியான நீள்ஆயுள் நிறைசெல்வம் கதையின் ஒலிவடிவம். சொல்வனம் மற்றும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.   https://youtu.be/yYbIRN8e7sQ

கடல்_ பற்றி ஒரு வாசிப்பனுவம்

 எழுத்தாளர் சாரோ லாமா விற்கு நன்றி. இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கிய குறைவான நூல்களில் கமலதேவியின் ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. இதற்கு முன் சில கதைகளை இணைய இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது வேறு ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது. கமலதேவியின் கதை சொல்லல் முறை நிதானமான நடையைக் கொண்டது. உணர்ச்சித் தீவிரங்களோ உறவு மோதல்களின் பெருவெடிப்புகளோ இல்லாதது. மனம் ஆழ்ந்து கனத்துக் கிடக்கும்போழ்தில் திடீரென வானில் வெளிப்படும் கீற்று நிலவைப் போல கமலதேவியின் சொற்கள் மேலெழுந்து ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அந்தச் சித்திரம் வாழ்வின் மாயாஜாலச் சித்திரமாக தோற்றம் கொள்கிறது. மனித மனம் கொள்ளும் விசித்திரங்கள், இயலாமைகள், இயலாமையை மீற விரும்பும் மனித இருப்பு, குறிப்பாக பெண் இருப்பு இந்தக் கதைகளை முக்கியானதொன்றாக்குகின்றன. ‘அவரவர் மனத்தின் இயலாமைகளை மீறவே சக மனிதர்களிடம் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம்’ கமலதேவியின் கதைகளைப் படிக்கையில் எனக்குள் உறுதிபெற்று நின்றது. கச்சிதமான சொற்களால், கச்சிதமான உணர்வெழுச்சியைப் பின்னல் போல நெய்து இத்தொகுப்பில் சில பிரமாதமான கதைகளை அவரால்...

புலன்விசாரணை:சிறுகதை

         2017 அக்டோபர் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை. புலன் விசாரணை       இன்று புரட்டாசியின் மழைஅதிகாலை.மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது.மென்குளிர் காற்று.வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன்.வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது.நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்தது.கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஔியெழ இன்னும் நேரமிருக்கிறது. இருளில் அமைதியிலிருக்கிறது ஊர்.பக்கத்து வீடுகளில் மெதுவான அரவங்கள் கேட்டாலும் யாரும் அமைதியை கலைக்கத்துணியாமல் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.கொல்லிமலையின் ஒருகுன்றடியில் பறந்துவிழுந்த பசும் ஆலிழை போன்ற பசும்மணமும், உள்ளங்கையளவுமான ஊர்.தெருவில் நடந்து செல்லும் பசுக்களின் குளம்போசையும்,செருமலும்,மணியோசையும், தெருமுக்கில் அவை செல்லும் பாதையை ஒலியால் மனதில் வரைந்தன. ஏதோ ஒருபசு அப்போதுதான் இட்டசாணியிலிருந்து எழும்நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்கள...

இதழ்கள்

   இந்த மார்ச் மாதத்துடன் புரவி இதழ் தன்னுடைய முதல் ஆண்டை நிறைவு செய்கிறது.                      ஓவியம்: பார்கவி சிறுவயதில் விடுமுறையில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்களுக்காக அஞ்சல்கார அய்யாவுக்காக காத்திருப்போம். அவர் பெயர் ராமராஜ். என்னுடைய பள்ளி வகுப்பு தோழன் பாஸ்கரனின் தந்தை. அஞ்சல்காரர்களின் சைக்கிள் மணிஒலிக்கு என்று விஷேசமான தன்மை உள்ளது. 'சீக்கிரம் வா' என்று கண்டித்து அழைப்பது. அவர் எங்கள் ஊர் மட்டுமல்லாது இரண்டு மைல் தொலைவில் உள்ள கொல்லிமலை அடிவார பசலிகோம்பை வரை செல்லவேண்டும். அந்தப்பதட்டத்தில் அதட்டிக்கொண்டே இருப்பார்.  அஞ்சலில் வரும் இதழ்கள் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. சிறுவயது பரவசங்கள் மெல்ல  மெல்ல இயல்பான விஷயங்களாக மாறிவிடுவதுதான் வாழ்வின் இயல்பான அபத்தம் அல்லது துயரம் அல்லது முதிர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. சில பரவசங்கள் இயல்பாகவே எந்த முயற்சியும் இன்றி உதிராமல் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.  எனக்கு அந்த மாதிரியான சில விஷயங்களில் ஒன்று இதழ்கள். எங்கள் ஊர் நூலகத்தின் மேசைகளில் கிடக...

கங்காபுரம் : நேர்காணல்

 மார்ச் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் நேர்காணல். எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு அன்பும், நன்றியும். ஒரு அரசனின் அகமும் புறமும் கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் புனைவிற்கான பொற்கிழி விருது பெற்றுள்ள அவருக்கு நம் மனமார்ந்த  வாழ்த்துகள். கங்காபுரம் இவரின் முதல்நாவல். இது ஒரு வரலாற்று நாவல். ராஜேந்திர சோழன் என்னும் பேரரசரின் அகப்போராட்டங்களின் வழி நகரும் இந்த நாவல் சோழப்பேரரசின் மகத்தான காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. தன் அகப்போராட்டங்களில் இருந்து எழுந்து ஆகப்பெரிய செயல்களை நோக்கி நகர்ந்த  பேரரசரின் கதை இது. ஐம்பது வயதிற்கு மேல் கங்கை , இமயம் வரை திக்விஜயம் செய்தல்,புதிய தலைநகரை உருவாக்குதல்,சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை வெட்டுல்,சிவனிற்கு ஆலயம் எடுப்பித்தல் என்று அவரின் செயல் நோக்கிய நகர்வு வியப்பானது. இது  பலதுறைகள் சார்ந்த நுண்தகவல்களை கொண்ட நாவலான காங்காபுரத்தை  மையப்படுத்திய, உரையாடல் வடிவிலான  நேர்காணல். 1.கவிதையிலிருந்து நாவல் போன்ற வி...