Posts

அம்பறாத்தூணி [கவிஞர் இசை கவிதைகள்]

Image
 [மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை] இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு.  அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.            கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள்.  அ

வெளிச்சம்

Image
 [ஏப்ரல் 1 2024 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை] வெளிச்சம் வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல்பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயுங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ்  அரசுக்குடியிருப்பின் ஸ்பர்டாங்க் சாலை நீண்டது. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பின் முன்னால் வளர்க்கப்பட்டிருந்த  மரங்களின் நிழல்படிந்த வழியில் ஒரு ஃபோக்ஸ் வேகன் பீட்டில் கார் நிதானமாக சென்றுகொண்டிருந்தது. எதிரே சுதேசி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். இங்கு யாரைத்தேடி வருகிறாரோ.  ருக்மிணியின் கல்யாணம் முடிந்தப்பின் உறவுகள் கிளம்பி சென்றுவிட்டார்கள்.  பெரிய அக்காவும் , “பக்கத்துல தானே.. எதுன்னாலும் உடனே ஓடி வந்திடறேன்,” என்று நேற்று சாயங்காலமாக கிளம்பி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்வீட்டிற்கு சென்று விட்டாள். அக்காக்கள் கல்யாணமாகி சென்ற போது தங்கை  ருக்மிணி இருந்ததால் மனதிற்கு இத்தனை மசமசப்பாக இல்லை . அப்பா வழக்கம் போல பரபரப்பாகவே இருக்கிறார். ஒரு கல்யாணகாரியம் சரி

சூடாமணி கதைகள்_ கடிதம்

Image
  வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாசகசாலை தளத்தில் வெளியான வெளிச்சம் படித்தேன். மெல்லிய அகில் புகை போல வாழ்ந்து மறைந்த சூடாமணி அவர்களின் சித்தரிப்பு சற்றும் மிகையின்றி வந்துள்ளது. என்னுடைய பிரியத்துக்கு உரிய எழுத்து அவருடையது. சாந்தமான நடையால் சலனங்களை ஏற்படுத்தும் தன்மையுடையது. உங்கள் சிறுகதை என்னை ஒரு மீள்வாசிப்புக்குத்  தூண்டுகிறது.  நன்றி சூரியன் MR  அன்புள்ள சூரியன், நலம். நலம் விழைகிறேன். எழுத்தாளர் சூடாமணியின் கதைகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்தும், மறுபடியும் அவர் கதைகளை வாசிப்பதற்கு என் கதை தூண்டுகோலாக நீங்கள் உணர்ந்தது குறித்தும் மகிழ்ச்சி. வாசிங்க. அன்புடன், கமலதேவி வெளிச்சம் கதைக்கான இணைப்பு :  https://vasagasalai.com/velicham-sirukathai-kamaladevi-vasagasalai-92/

இற்றைத்திங்கள் அந்நிலவில் 9

Image
 [பிப்ரவரி 2024 சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை] சந்தனம் வாடும் பெருங்காடு நல்வெள்ளியார் நான்கு அகப்பாடல்கள் பாடியுள்ளார்.  தலைவியும் தோழியும்  திணைப்புனத்தில் காவலிற்கு இருக்கிறார்கள். அங்கு வரும் மணிப் பூண் அணிந்த தலைவன் தலைவியிடம் பணிந்து பேசி தன் காதலை அறிவிக்கிறான். மறுக்கும் தலைவியின் மனதிடத்தை வியந்து திரும்பி செல்கிறான்.  அடுத்தநாள் தலைவி இப்படி சொல்கிறாள்.. ‘ இகுபெயல் மண்ணின் நெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடியகூறி’ [அகநானூறு 32] பெய்யும் மழையில் கரையும் மண் போல அவனால் என் மனம் கரைவதை கண்டு கொண்டானோ என்று பதறி மறுத்தேன் என்று வருத்தத்துடன் கூறுகிறாள்.  அதற்கு தோழி… இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே  தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா… என்கிறாள். அடுத்தப்பாடலில் ஒரு தோழி தலைவனிடம் தலைவியின் நிலைய

வாடிவாசல்

Image
 [2024 ஜனவரி நடுகல் இணைய இதழில் வெளியான கட்டுரை] எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல்.  மதுரை பக்கமிருக்கும் ஊரில் நடக்கும் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வே அதன் கதை.  ஜல்லிக்கட்டிற்காக ஆட்களும் காளைகளும் சங்குவாடியை நோக்கி ஒரு வெயில் மதியத்தில் கிளம்பி சாரி சாரியாக வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. பொழுது அணையும் நேரத்திற்காக கும்பல் காத்திருக்கிறது.  காளைகளை ஜல்லிக்கு விடும் வாடி வாசல் அருகே கூட்டம் இடித்துக்கொண்டிருக்கிறது. வாடிவாசலின் வலதுபுறம் ஊன்றப்பட்ட பனை மரத்தின் பக்கத்தில் திட்டிவாசலில் பிச்சி நிற்கிறான். அவன் ஒரு மாடுபிடி வீரன். அவனுடைய சகா மருதனும் உடன் இருக்கிறான். அவர்களுக்கு அருகில் நிற்கும் ஜல்லிக்கட்டு பார்வையாளரான கிழவர் அவர்களுக்கு பேச்சு துணையாகிறார். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பார்க்கும் அவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். செல்லாயிசாட்டு முடிந்து ஜல்லிக்கட்டு துவங்கப்படும் வழக்கம் முதல் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வை சார்ந்த அனைத்து தகவல்களும், நுணுக்கங்களும்

இற்றைத்திங்கள் அந்நிலவில் 8

Image
 [2024 பிப்ரவரி  சொல்வனம் இணையஇதழில் வெளியாகிய கட்டுரை] வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் காக்கைப்பாடினியார் நச்செள்ளை குறுந்தொகையில் ஒரு பாடலும், புறநானூற்றில் ஒரு பாடலும், பதிற்றுப்பத்தில் ‘ஒருபத்தும்’ பாடியுள்ளார்.  திண்தேர் நள்ளிகானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே  [குறுந்தொகை 210] தலைவன் தோழியிடம் தான் பிரிந்து சென்ற காலத்தில் தலைவியை நலத்துடன் பார்த்துக் கொண்டதற்காக நன்றி சொல்கிறான். அதற்கு தோழி இந்த தொண்டி நாடு முழுவதும் உள்ள பசுக்கள் தந்த நெய்யுடன்,சேரநாடு முழுவதும் கழனிகளில் விளைந்த சோற்றை கலந்து பலிசோறாக வைத்தாலும் அந்த காக்கைக்கு தகும். ஏனெனில் அது தினமும் நம் இல்லத்தில் கரைந்து உன் வரவை அறிவித்ததாலேயே அவள் நலத்துடன் இருந்தாள் என்கிறாள். இந்தப் பாடலில் நாட்டு வளமும், மக்களின் அன்றாட வாழ்வில் தொடரும் நம்பிக்கையும் சொல்லப்பட்டுள்ளது. காகத்தைப் பாடியதால் நச்செள்ளையார் காக்கைப்பாடினியார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். ப

இற்றைத்திங்கள் அந்நிலவில் 7

Image
 [2024 ஜனவரி சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை] தீரத்தின் ஔி சங்கப்பெண்கவிகளின் பாடல்களில் ஒப்பீட்டளவில் அகத்தை விட புறம் பற்றிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. என்றாலும் துறவு,மன்னனின் வீரம்,இழப்பு,கைம்மை நோன்பு,தோற்றவனின் வீரத்தை வெற்றவன் முன்பாடுதல் என்று விதவிதமான பாடுபாருட்களில் பாடியுள்ளார்கள். மாறிப்பித்தியார் புறநானூறில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் துறவறம் பூண்டவர்களின் துறவு நிலையையும்,முன்னர் உலகவாழ்வில் அவர்களின் நிலையையும் ஒப்பிடும் பாடல்கள். இவரின் இரண்டு பாடல்களும் தாபதவாகை துறையை சார்ந்தவை. இரண்டு பாடல்களிலும் பாடப்பட்ட தலைவனின் தலைமுடியின் அழகு மாறியுள்ளதை பற்றி சொல்லப்படுகிறது. சடாமுடி வளர்த்தல் மற்றும் நறுநெய்யிட்ட மின்னும் கருங்கூந்தல்  சங்கப்பாடல்களில் அங்கங்கே இருப்பதை காணலாம். துறவின் குறியீடாக புரிசடை உள்ளது. ‘ கழைக்கண் நெடுவரை அருவியாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தேறல் செந்தீ வேட்டுப் புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே [புறம் : 251] இல்லறத்திற்கு பிறகு துறவறம் ஏற்று வாழும் வாழ்க்கையைப் பாடுவது தாபதவாகை எனப்படுகிறது. இரண்டுபாடல்களிலும்  துறவறத்தில் இருக்