Skip to main content

Posts

அழிகாட்டு சித்திரங்கள் [எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 கருத்தரங்க கட்டுரை]

எழுத்தாளர் பெருமாள் முருகன் [சென்னை மாநில கல்லூரியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 அகவை நிறைவு என்ற கருத்தரங்கத்தில் அவர் படைப்புலகம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு 'நனவிலியின் நிலம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரை]   அழிகாட்டு சித்திரங்கள் இலக்கியம் எழுதப்படுவதன் அடிப்படைகளாக உள்ள விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு பதிலாக ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதிலிருந்து மனித மனதின் அறிந்து கொள்ள முடியாத ஒரு விழைவு என்பது வரை பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. கண்முன்னே ஓடும் ஆற்றில் நொடியில் கரையும் மண்கட்டி போல கரையும் காலம் மனிதருக்குள் ஏற்படுத்தும் பொருளின்மையை எதிர்கொள்ள மனிதஇனம் கலை ஓவியம் எழுத்தை உண்டாக்கிக்கொண்டது என்பதும் ஒரு அடிப்படை. காலத்தில் திளைக்க இசை. இசையின் மூலம் எந்த காலத்திலும் திளைக்கமுடியும். எழுத்தும் கலைகளும் காலத்தை பிடித்து வைத்து ஆடி திரும்பிக்காட்டும் முயற்சி என்று சொல்லலாம். காலமென்றான பிரபஞ்சத்தின் முன் மனித பிரக்ஞையின் ஆகப்பெரிய எத்தனம் கலைகளும் இலக்கியமும்.  எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல் முற்றம்,கூளமாதாரி ஆகிய ம...
Recent posts

தும்பி அறியும் பெருங்காடு

 நான் செய்த நேர்காணல்களை 'தும்பி அறியும் பெருங்காடு  '   என்னும் நூலாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது. வாசகசாலை நண்பர்களுக்கு அன்பு. நூலிற்கு நான் எழுதிய என்னுரை. எழுதியவர்களுடன் ஒரு உரையாடல் நண்பர்களுக்கு… இந்த நூலில் உள்ள நேர்காணல்களில் முதல் மூன்று நேர்காணல்கள் கொரானா உலகத்தொற்றின் இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. நேர்காணல்கள் புரவி அச்சிதழ், வாசகசாலை இணைய இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. இந்த நூலில் நேர்காணல்கள் வெளியான காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்கள். இவை இரண்டாயிரமாவது ஆண்டிற்கு பின்னர் எழுதப்பட்ட படைப்புகள். 2006ல் வெளியான கானல் நதியும், 2010ல் வெளியான துயிலும் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்கள். நீலகண்டம், பேய்ச்சி, கங்காபுரம் என்று மூன்று நாவல்களும் 2019ல் வெளிவந்துள்ளன. இந்த மூன்று நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்கள். தொன்மத்தையும், நாட்டார் தெய்வங்களையும், வரலாற்றையும், நவீன கால சிக்கல்களையும் பேசும் நாவல்கள். காயாம்பூ 2021லும் ஹரிலால் 2022லும் வெளிவந்துள்ளன. காயாம்பூ _ குழ...

2025 ன் நாட்கள்

 இந்த ஆண்டு வெள்ளிமலை மரபிலக்கிய வகுப்புடன் தொடங்கியது.  வம்சவிருட்சம் _ எஸ்.எல் பைரப்பா புத்தம் வீடு _ ஹெப்சிபா ஜேசுதாசன் காவியம் _ ஜெயமோகன் மீஸான் கற்கள்_ புனத்தில் குஞ்ஞப்பதுல்லா நாலுகெட்டு _ எம்.டி.வாசுதேவன் நாயர் பாத்துமாவின் ஆடு,மதிலுகள் _ வைக்கம் முகமது பஷீர் [இரண்டாம் முறை] கூளமாதாரி _ பெருமாள் முருகன் முனைவர் வேதாசலத்தின் நூல்கள் நவீன தமிழிக்கிய அறிமுகம் [ மூன்றாவது வாசிப்பு] மாகே கஃபே _அரிசங்கர் பாரீஸ் _ அரிசங்கர் நெருப்பு ஓடு _ தேவி லிங்கம் சூன்யதா _ ரமேஷ் பிரேதன் மௌனி சிறுகதைகள்  இந்த ஆண்டு வாசித்த நூல்களுள் இந்த நூல்கள் முக்கியமானவை. கவிதை வாசிப்பனுபவங்கள்,இரண்டு சிறுகதைகள், எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா ,பெருமாள் முருகன் படைப்புகள் பற்றி கருத்தரங்க நிகழ்விற்கான கட்டுரைகளும்,நாவல் வாசிப்பனுபவங்களும் எழுதியிருக்கிறேன்.  2024 ம் 2025 ம் ஆண்டுகளின் அன்றாடத்தில் வாசிப்பிற்கும் எழுதிற்கும் இது வரை சந்திக்காத இக்கட்டுகளை, சூழல் காரணமான நெருக்கடிகளை உணர்ந்த ஆண்டுகள்.  இந்த ஆண்டில் இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். வரண்டகாலத்தில் உயிர்ப்பிடிக்கும் சப்...

நீலபத்மநாபன்

 [ எழுத்தாளர் நீலபத்மநாபனிற்கான தமிழ்விக்கி பக்கத்தை பார்த்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதம். 11/11.2022 ல் எழுதிய கடிதம்] அன்பு ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். அதிகாலையில் மழை பெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம். கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தே ரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்த...

சினார் லிபி

  எங்கோ ஒரு மலைமுகட்டிலிருந்து பறந்து வந்த சிவந்த இலை சொன்னது... அங்கு ஒரு சினார்காடு உதிர்வதை அந்த நிலம் முழுக்க பூத்துக்கொண்டிருப்பதை..

பகீரதனின் பகீரதி

 [2025 மார்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் எழுத்தாளரின் படைப்புகள் குறித்த ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை’ என்ற விமர்சன கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. அந்தத்தொகுப்பில் உள்ள நீரதிகாரம் பற்றிய கட்டுரை.] பகீரதனின் பகீரதி எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவலை வாசிக்கும் போது நம் புராணத்தில் உள்ள பகீரதன் கதை மனதில் வந்தது. பகீரதன் இஷ்வாகு குலத்தை சேர்ந்த ராமனின் முன்னோர். பகீரதனின் முன்னோர்கள் அஸ்வமேத யாகத்தின் பொருட்டு திக்விஜயத்திற்காக அனுப்பிய யாகக்குதிரை திரும்பி வர தாமதமாகிறது. அதை தேடியலைகிறார்கள்.  கபிலமுனிவரின் குடில் வாயிலில் குதிரை நிற்கிறது. முனிவர் குதிரையை கட்டி வைத்திருக்கிறார் என்று நினைத்து அவரின் தவத்தை கலைப்பதால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகி எரிந்து சாம்பலாகிறார்கள். அவர்கள் சாபவிமோஷனம் பெற்று விண்ணுலகம் எய்துவதற்கு கங்கை பூமிக்கு வரவேண்டும். தலைமுறைகள் காலமாக முயற்சித்தும் அதை செய்யமுடியவில்லை. பகீரதன் தன் முன்னோர்களுக்காக கங்கையை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருக்கிறா...

இரு கரைகளின் கதைகள்

 [ எழுத்தாளர் அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபே என்ற இரு நாவல்களையும் எழுத்தாளர் தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலையும் முன்வைத்து…] இருகரைகளின் கதைகள்                  சமூகமாக ஓரிடத்தில் நிலைகொள்வதும் இடம்பெயர்வதும் சமூகமாக தன்னை திரட்டிக்கொள்ளும் மானுடத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. நிறைந்த கலம் வழிந்து வெளியறுவதைப்போல அல்லது ஓட்டை விழுந்த கலத்திலிருந்து வெளியேறும் நீரைப்போல ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் எத்தனிப்பும் மறுபக்கம் இடப்பெயர்வும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே பொருள்வயின் பிரிதல் உள்ளது. சிலப்பதிகாரத்தில் தன் பொருளை இழந்த கோவலன் கண்ணகியின் சிலம்பை ஆதாரமாகக்கொண்டு புதுநம்பிக்கையுடன் மதுரைக்கு பொருள் ஈட்ட செல்கிறான். அப்படி வாழ்க்கை பற்றிய கனவுடன் இடம்பெயர்பவர்களை இன்று வரை காண்கிறோம். பெரும்பாலும் பொருள்ஈட்டுதல் நிமித்தம் இடப்பெயர்வு நடக்கிறது. பின்பு போர்சூழல்,பஞ்சங்களில் மக்கள் கூட்டமாக இடம்பெயர்ந்தார்கள். அவமானங்கள் மற்றும் சூழல் வாழ்க்கைக்கு தடையாகும் பட்சத்தில் தனிமனிதன் ...