Skip to main content

அணி நிழற்காடு

              மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் இந்தக்கட்டுரை மனதை சஞ்சலமாக்குகிறது. 


கட்டுரைக்கான சுட்டி:

http://vallinam.com.my/navin/?p=5673


அணி நிழற்காடு



உலகம் முழுவதுமே இது போன்ற அழித்தல்கள்  நடைபெறுகின்றன. ஒருமுறையேனும் தன்னை சுற்றியுள்ள இயற்கை அழிக்கப்படுவதை பார்த்தவர்களுக்கு இந்த பதட்டம் புரியும். நேசித்த ஒரு மரம் வெட்டப்படுவதை, புயலில் அடியோடு சாய்வதை கண்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். எங்கோ நடப்பதல்ல இது. என்னென்னவோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கண்ட மரங்கள் ஒரு நாளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.

மனிதனால் காட்டிற்குள் இருக்க முடியாமல் தான் வீடுகட்டிக்கொண்டான். நமக்கு காட்டினுள் நிற்க, அங்கே போராடி வாழ முடியவில்லை. அதிலிருந்து பாதுகாப்பு சுவரை உண்டாக்கிக் கொண்டோம். அதனுள் ஔிந்து கொள்வது நமக்கு நிம்மதி. ஆனால் நம் மனம் காட்டை விழைவது. அதனால் மீண்டும் அதை நோக்கி சென்று.. சென்று...  திரும்பி வருகிறோம்.

அதையும் வேவ்வேறு காரணங்களை முன் வைத்து அழிப்பது எந்த வகையில் அறம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் இயற்கையின் ஒரு சிறு அங்கம். இயற்கை என்பது நமக்காக, நம் பயன்பாட்டிற்கானது மட்டுமல்ல. 

இது போன்ற அலையாத்தி காடுகளை ஏன் அழிக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்திருந்தால் அந்த முயற்சி முளையிலேயே மறைந்திருக்கும். தேவை என்ன என்பதில் தெளிவு இருந்திருக்கலாம்.

வாழ இடமே இல்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

உணவிற்காக விவசாயம் செய்ய நிலமில்லாமல் காட்டை அழிக்கிறோமா? 

ஒரு உயிர் சூழல் என்பது அத்தனை எளிதான ஒன்றாக நமக்கு ஆகிவிட்டதா?

 ஒரு காட்டை அழிப்பது என்பது காட்டை அழிப்பது மட்டும் தானா? 

நாம் சுற்றிப்பார்க்க, பொழுது செலவு செய்வதற்காக ஒரு உயிர்சூழலை அழிக்க வேண்டுமா? 

பின்விளைவுகள் பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் இயற்கையை அழிக்கும் முடிவுகளை எடுக்கலாமா?

வள்ளுவர் ஒரு நாட்டின் அரண் என்ன என்று இப்படிக்கூறுகிறார்.


'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்'


பொருள்: மணி போல தெளிந்த நீரும்,வெட்ட வெளியான நிலமும்,மலையும்,அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண்.

இந்த அலையாத்திக்காடுகளை இப்படியே அதன் இயல்பு மாறாமல் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அவசியம் பன்முகம் கொண்டது. நாட்டின் பாதுகாப்பு,காட்டில் உள்ள அலையாத்தி மரங்கள் அந்த இடத்திற்கு தரும் பாதுகாப்பு,அது தரும் உயிர் வளி என்று பலகாரணங்கள்.

ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் பாதையை,சின்னஞ்சிறு மின்மினிகள் ஔிர்ந்து உலவும் அவற்றின் வாழ்விடத்தை 'நாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்' எந்தவித அறமும் இன்றி எடுத்துக்கொள்ளலாமா? அப்படி  எடுத்துக்கொள்வதற்கு பெயர் என்ன?

 அந்த மரங்களும்,மின்மினிகளும்,சிற்றுயிர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழப்பிறந்தவை. அவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதை பற்றிய குற்ற உணர்வோ,அறமோ,மனசான்றோ அல்லது அவற்றின் மீதான சிறிய அளவிலான அன்போ அவற்றை காக்கட்டும்.







Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...