நித்தியம் காற்றில் அசைகையில் இலைளெல்லாம் மலர்களாகிவிடுகின்றன. காற்றற்ற போதும் மலர்களைக்காண நீ இன்னும் கொஞ்சம் உடைய வேண்டும். காலையில் கவிஞர் இசையின் இந்தக்கதையை வாசித்ததும் எனக்கு ராமனும் கைகேயியும் மனதில் வந்தார்கள். பத்துவயதில் சிறுவர்களுக்கான ராமாயணம் புத்தகத்தை வாசித்தேன். அந்தப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் மனதை கற்பனையில் அமிழ வைப்பவை. காட்டிலிருந்து திரும்பிய ராமர் மறுபடி கைகேயி மீது அன்பாக இருந்தார் என்ற கதையை இருபது வயது வரைக்கூட என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் அப்போதெல்லாம் ஒருவருடன் பேசாமல் இருப்பதை அவருக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைப்பேன். காந்தி எபெஃக்ட் என்று அய்யா கிண்டல் செய்வார். [காந்தியை சரியாக புரிந்து கொள்ளாமை] . பேசாமல் ஒருவரை தவிர்ப்பது வன்மம்,இது மனிதர்களை கைவிடுவது,கோபக்காரர்களாக ஒருவரை மாற்றுவது என்ற கருத்து அவருக்கு இருந்தது. பெரிய பிழைகளுக்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார். ' பேசமாட்டேன்' என்று முதன்முதலாக சொன்ன போது தங்கை மகன் ராஜமித்திரன் 'ஏன் தம்பிக்கிட்ட கமலா பேசமாட்ட...'என்று முகம் சுருக்கிய முதல் தருணம் இன்ன...