Skip to main content

Posts

அகமும் புறமும் 18

       ஏப்ரல் 1 ,2023          வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.           ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப், பொலங்கலம் சுமந்த பூண்தாங்க இளமுலை, ‘வருக மாள,என் உயிர்!’ எனப் பெரிது உவந்து, கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன், ‘மாசுஇல் குறுமகள்! எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?’ என யின்தற் கரைய,வந்த விரைவனென் கவைஇ, களவு உடம்படுநரின் கவிழ்ந்து,நிலம்கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு,யானும் பேணினென் அல்லெனோ_ மகிழ்ந! _ வானத்து அணங்குஅருங் கடவுள் அன்னோள்,நின் மகன்தாய் ஆதல் புரைவது_ ஆங்கு எனவே! அகநானூறு:16 பாடியவர்: சாகலாசனார் திணை : மருதம் துறை :  தலைவனுக்கு தலைவி கூறியது. அகத்துறை முழுவதுமே  உன்னதமான காதல் வரிகள், தருணங்கள் நிறைந்துள்ளன. ...

அவள்

எப்போதும் அவளைத் தேடிச்செல்கிறேன். அன்றொரு நாள் அவளிடம் எதையாவது  கேட்கச்சொன்னார்கள். என்ன கேட்பது? சொல்லாகி நிற்பவள் முன்பு வெற்று கல்லென்று நின்றேன். மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே செல்கிறேன். ஆனால் அவள் சென்ற பாதையில் அல்ல.. அவளை அடையவும் அல்ல அவளாக மாறவும் அல்ல. என்றாலும்  அவளையே தேடிச்செல்கிறேன். அவள் மதுமணக்கும் மலர்வனம். நான் சமனமாகாத துலாத்தட்டில் விழும் ஒற்றை துளசி.

சன்னிதி

  சன்னிதியின் படிகளில் படிந்திருக்கும் ஒவ்வொரு சுவட்டிலும் வியர்வையின் ஈரம்.. உள்ளே சிவந்த ஔியாய் தேங்கி நிற்கிறது அமைதி... ஆகாயத்தின் கீழே உக்கிரமானவெயிலில் நனைந்தபடி கோபுரஉச்சியில் தனித்து நிற்கிறது சிலுவை.. உன் கோபுர இடுக்கொன்றில்  கூடு கட்டியிருக்கும் குருவி ஒன்று தன் குஞ்சுகளை  உன்னிடம் விட்டுவிட்டு இறைதேடி செல்கிறது... அதன் இறகில் நீ அமர்ந்து பறக்கிறாய்.

பாலாமணி பங்களா

 [2023 மார்ச் 16 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை] பாலாமணி பங்களா காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழையநவாப் காலத்துக் கட்டில். மாசிமாதக்குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல் வழியே உள்ளே புகுந்து அறையின் இதமான சூட்டை குழைத்தது. எப்போதும் பங்களாவில் ஐம்பது அறுபது பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் வெளியேறிவிட்டார்கள். இவளே மற்ற நாடகக் கம்பெனிகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தாள். நினைக்க நினைக்க அறைக்குள் மூச்சு முட்டியது. வெளியே வந்து பின்பக்கமாக நின்றாள். முதல்மாடியின் பின்பக்க உப்பரிகை அது. கைப்பிடி கட்டையில் கையூன்றி குனிந்து நின்று கொண்டாள். எந்த நேரமும் வயிற்றுப்புண்ணின் வலி இருந்து கொண்டிருந்தது.  வரிசையாக அத்தனை அறைகளும் ஒழிந்து கிடந்தன. சுவரில் அங்கங்கே திட்டு திட்டாய் சிவந்த சாந்துப்பொட்டு இழுப்பல்கள் மங்கியிருந்தன. காய்ந்த பூச்சரம் ஒன்று காலில் தட்டுபட்டதும் பாலாமணி  சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு...

அகமும் புறமும் 17

                    ஆம்பல் குளம்                    அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையாயினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்ன வைகலுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே. புறநானூறு  திணை : பொதுவியல் திணை துறை : தாபத நிலை பாடியவர் : ஓக்கூர் மாசாத்தனார் . ஒரு பெண் தன் இளம் வயதில் விருப்பத்துடன் தன்னை அழகுபடுத்திக்கொள்ள பயன்படுத்தும் பொருட்களை கணவன் மறைவிற்கு பின் பயன்படுத்த சமூகம் விடுவதில்லை. தற்காலத்திலும் இந்த நிலை முழுவதுமாக மாறவில்லை.  கட்டாயப்படுத்தி சடங்குகளை  செய்ய வைத்துவிட்டு கைம்மை நோன்பு என்று சொல்கிறோம். இந்தப்பாடல் அந்த வகையான ஒரு கைம்மை நோன்பை காட்டுகிறது.  உணவு பழக்க வழக்கங்களை கூட கணவனை இழந்தப்பின் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். சூரியன் உதிப்பதற்கு முன் ஒரு வேளை உணவு. அதுவும் எப்போதும் உண்ணும் உணவல்ல. அல்லி அரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவு.  அல்லியின் கிழங்கு கோடையிலும் அழியாதது. தண்டிற்கு மேல் உள்ள சூழ...

அகமும் புறமும் 16

         2023 மார்ச் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந,என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல். [தலைவி கூற்றை தோழி கூறுவது. பரத்தை இல்லம் சென்று நீண்ட காலம் கழித்து திரும்பும் தலைவனுக்கு தோழி உரைத்தது] காதலில் எப்போதும் ஒருவித பித்து நிலை உண்டு. உற்றவரைத் தவிர அது பலநேரங்களில் மற்றவருக்கு  புரிவதில்லை. எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் உள்ள அம்மாவின் பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தங்கவேலு பெண்டாட்டி என்றே அழைப்பார்கள். அவரின் மகன் வயதில் உள்ள நாங்கள் விஜயகுமார்அம்மா என்று சொல்வோம்.  விவரம் தெரிந்ததில் இருந்தே நான் தங்கவேலுவை பார்த்ததில்லை. அவர் பக்கத்து ஊரில் எங்கோ வேறொரு அம்மாவுடன் வாழ்ந்தார். விஜயகுமார்அம்மா தன்  கணவரின் பரம்பரை சொத்தான ஒரு ஏக்கர்நிலத்தின் விவசாய  வேலைகள் முழுவதையும் தனி ஒருவராகவே செய்வார். மற்றநாட்களில் கூலி வேலைக்கு செல்வார்.  ...

அகமும் புறமும் : 13

                        பெருந்துணை குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின்  மனைவியொடு இனிய புல்லென்றனையால்_வளம்  கெழு திருநகர் வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெருங்காடு முன்னியபின்னே புறநானூறு : 250 திணை : பொதுவியல் துறை :கையறு நிலை பாடியவர்: தாயங்கண்ணியார் குடும்பம்,ஊர்,நாடு என்ற எந்த அமைப்பும் தலைவனை மையமாகக் கொண்டது. மரபுப்படி உலகின் தலைவன் இறைவன். இறை என்ற சொல்  தந்தையையும், தலைவர்களையும் குறிக்கிறது. இதில் ஆண் பெண் கடந்து யார் தலைமை கொள்கிறார்களோ அவர்களையும் வைக்கலாம். அவர்களின் இழப்பு அந்த அமைப்பை நிலைகுலைய வைக்கிறது. நாம் சமூகமாக வாழத்தொடங்கியதிலிருந்தே தலைவன் என்பது முக்கியமான கருதுகோல். அதேப்போல காட்டிலும் அனைத்து மிருகங்களும் தங்களுக்கான தலைமையின் பின்தான் இயங்குகின்றன. இறைவனையும், தலைவையும் தந்தை என்றும் சொல்கிறோம்.  இந்தப்பாடலில் ஒரு வள்ளலின் இழப்ப...