Skip to main content

Posts

இற்றைத் திங்கள் அந்நிலவில்

2023 ஜூன்மாத சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரைத்தொடர்           சங்கப் பெண்கவிகள் : 1 பழந்தமிழ் பாடல்களின் தொகுப்பான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தமிழின் செவ்விலக்கிய நூல்கள் ஆகும். இவை சங்கஇலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. 470 க்கும் மேற்பட்ட புலவர்களால் சங்கஇலக்கியத்தில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் முப்பதைந்திற்கு மேற்பட்ட பெண்புலவர்களின் பாடல்கள் உள்ளன. இப்புலவர்களுள் ஔவையர் எண்ணிக்கையில் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சங்கஇலக்கியம் பாடுபொருள் சார்ந்து அகப்பொருள், புறப்பொருள் என்று பகுக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளிலும் பெண்புலவர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பொதுவாக  பெண்புலவர்களில்  ஔவையாரும், காவற்பெண்டும்  பள்ளிப்பாடங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.  காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்க...

வெந்தழலால் வேகாது: 3

           ஜூலை 2023 வாசகசாலை இணைய இதழில்  வெளியான  கட்டுரை                              மானுட ஆடல்       மனிதர்களுக்குள்ளான உறவும்,அன்பும், உதாசீனமும் என்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத, விடைசொல்ல முடியாத உணர்வுகளாகவே உள்ளன. ஏன் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது நேசிக்கறோம் என்பதற்கு சரியான பதில் இல்லை. இது நம்முடைய அறிவு என்ற நிலையில் இருந்து நழுவிய ஒன்று என்று நினைக்கிறேன். என்றாலும் பல நேரங்களில் கணக்கீடுகளுக்கு  உட்பட்டதாகவும் இருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனை பயன்படுத்திவிட்டு உதறுபவனாகவே இருந்திருப்பான் என்று நினைக்கிறேன். அதனால் தான் பந்த பாசம் என்ற கட்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.             எழுத்தாளர் கி. ராஜநாராயணன் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகும் கதைகளின் பொது அம்சமாக மனிதர்களுக்குள், உறவுகளுக்குள், ஆண்பெண்ணிற்குள் உள்ள உறவினை இரு எல்லைகளில் அணுகப்பட்டுள்ளன. ஒரு எல்லையில் வாழ்வின் தொடக...

வெந்தழலால் வேகாது :2

        புரவி இதழிலி வெளியான கட்டுரை                           உயிர்ப்பின் வெளி            இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின்   புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத்  தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும் போது வா. - வில்லியம் சிட்னி வால்கர்  உன் கடிதத்தை இவ்வாறாக எதிர்பார்த்தேன் என்று கி.ராவிற்கு கு.அழகிரிசாமி எழுதுகிறார். கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள் ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் கி.ரா இந்தக்கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுபூர்வமானவை என்கிறார். இந்தநூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைகழிப்புகளும், அன்பின்பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை. சென்னையில் இருந்து இடைசெவலிற்கு தினம...

துறைமுகம் : சிறுகதை

      ஜூலை 2023 வாசகசாலை இணைய  இதழில் வெளியான சிறுகதை.                   துறைமுகம் பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனைப்போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது.  காலையிலையே ஜானகியிடம் கோபத்தை காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் Kஎண்கள் காணாமல் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள். ஆனால் அவள் தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு யாரிடமும் குரல் உயர்த்தாத நான் அவளிடம் மட்டும் கத்தித்தொலைக்கிறேன்.  மதராஸ் வழக்கம் போல காலை நேர அவசரத்தில் இருப்பதை பார்த்தபடி ஒதுங்கி நடந்தேன். இன்னும் இந்த அவசரம் எனக்கு கைவரவில்லை. வீட்டில் சீக்கிரமே கிளம்பிவிடுவேன். மேலும் துறைமுகக்கழகத்தற்கு மணலில் நடக்க வேண்டும். சென்ற ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி. எஃப் படிக்கும் போது தினமும் ட்ராமில் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த மூன்றாம்  நாளே ட்ராம்காற்று என் குல்லாயை பறித்து சாலையில் வீசியது.  சமஸ்கிருத வகுப்பில் பேராசியர் கிருஷ்ண சாஸ்த்ரி முறைத்து எழுப்பினார். “மிஸ்ட்டர் சீனிவாச ராம...

மரணமும் ஆசிரியர்களும்

மனதிற்கு ஆசிரியரின் துணை எவ்வகையிலேனும் அவசியம். அதுவும் இழப்பின் காலத்தில் ஆசிரியருடன் எவ்வகையிலேனும் அருகில் இருக்க வேண்டும். அதை நான் மீண்டும் மீண்டும் நடைமுறையில் உணர்கிறேன்.  ஜூன் மாதம் சின்னய்யாவிற்கு [சித்தப்பா] உடல் நிலை மோசமானது. ஜூலை துவக்கத்தில் இறந்தார். மிக மெதுவாக படிப்படியான புற்றுநோய் மரணம்.  மாடியில் அவரை பார்த்துவிட்டு கீழிறங்கும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை பற்றிய விசாரணையை தொடங்கி மனம் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. நீலி கட்டுரைக்காக அம்பையின் 'காட்டில் ஒரு மான்' தொகுப்பை வாசித்து முடித்துவிட்டு மாடியேறுவது தான் கடைசியாக உயிருடன் சின்னய்யாவை பார்ப்பது என்று நினைக்கவில்லை. அன்று இரவு அவர் இறந்தார். ஏற்கனவே நீலிக்காக எழுதிய கட்டுரைகளை அவரிடம் சொல்லும் போது புன்னகைப்பார். வலி இருந்தாலும் நான் சொல்லும் கதைகளையும், கட்டுரைகளையும் கேட்டு தலையாட்டிக்கொள்வார்.  அவருக்கு எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,கல்கி,வாசந்தி,சுஜாதாவை பிடிக்கும்.  அம்பை சொல்கிற அளவுக்கா நாங்கள் இருக்கிறோம் என்று ஒரு முறை கேட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் வயிற்றில் பரவத்தொடங்கி நுரையீரலில்...

அடுத்த நாட்கள்

மிக மெல்ல தீப்பிடித்து சாவின் ஐந்தாம் நாள் சீறி எரிகிறது பிரிவின் எரி, பிரிவின் கைப்பிடித்து மனம்  இருளிற்குள் செல்லப்பார்க்கிறது, அதோ மழைமுடித்த காலை வானம். மேகங்களின் இடையில் கிழக்கே ஔிக்கீற்று சிதறுகிறது. அதன் எதிரே  மரகதப்பச்சையாகிறது மாமலை. அறுப்பு முடிந்த கழனியில் மிதக்கின்றன... நாளை முளைக்கப்போகும் நெல்மணிகள். வானில் வெள்ளை பறவை ஒன்று  இறைதேடிப்பறக்கிறது... உதித்துக்கொண்டிருக்கும் சூரியனின் வெப்பத்தில் என் சிறகுகளும் உலரட்டும்...

மாயை : சிறுகதை

       [2020 ல் எழுதிய சிறுகதை]                                                                        மாயை சிலநாட்களாக பெய்து கொண்டிந்த மழையால் ஆறு பெருகி ஏரிகளில் வாய்க்கால்களில் ஓடைகளில் நிறைந்து அலையடித்துக் கொண்டிருந்தது.இருட்டிற்குள் நீரின் மினுமினுப்பு மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்திருந்த பாரிஜாதத்தின் கண்களிலும் அதே ஈரமினுமினுப்பு. இருவரும் நேரம்காத்து ஏரிக்கரையில் நின்றார்கள்.ஏரிக்காற்று தயங்கித்தயங்கி நகர்ந்து சென்றது.மேட்டிலிருந்து நோக்க தெருவின் கோடியில் பந்தல் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.சிவராசு வண்டியின் இருக்கையை தட்டியபடி சட்டென்று பேச்சை துவங்கினார். “பாரி…பாரிஐாதம்..”  கிழக்கு பக்கம் திரும்பியிருந்த பாரிஜாதம் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஒற்றை வைரம் மூக்கில் ஔிரும் முகம் கண்டு அவர் கண்களை சுருக்கிக்கொண்டார்.சிரித்தாலும் புன்னக...