Skip to main content

அகமும் புறமும் 11

          2022   டிசம்பர்   16     வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை.

                     போர்க்களத்தின் பூ




மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி

போது விரி பல் மரனுள்ளும் சிறந்த

காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே

கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;

காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,

ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை

பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.


புறநானூறு: 272

பாடியவர்: மோசி சாத்தனார்

திணை: நொச்சி

துறை : செருவிடை வீழ்தல்


மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. நொச்சி போருக்கான மலர். போரில் வென்றவர்களோ தோற்றவர்களோ சூடிய மலர் அல்ல. போருக்கு செல்லும் போது போர்வீரர்களால் சூடப்பட்ட மலர். எனில் அது எத்தனைக்கு ப்ரியமான மலராக இருந்திருக்கக் கூடும். 



அதனால்தான் மோசிக்கிரனார்

‘காதல் நன்மரம் நீ..’ என்கிறார்.

இன்று தெய்வங்களும் பெண்களும்  மலர்களை சூடிக்கொள்கிறார்கள். அன்று மலரானது ஆண்களுக்குமானதாக  இருந்திருக்கிறது. போருக்கு செல்லக்கூடிய போர்வீரர்கள் ஒரு மலரை சூடுவார்கள்  என்றால் மலர் என்பது அங்கு ஒரு அடையாளம். வென்றெழும் வேட்கையின் ,ஆற்றலின் மலர் நொச்சி எனக்கொள்ளலாம். 

இந்தப்பாடல் காட்டும் சித்திரத்தைப் பார்க்கலாம். கோட்டையை சுற்றிலும், வீடுகளை சுற்றிலும் காவல் மரமாக நொச்சி இருந்திருக்கிறது. வேலிமரம். கோட்டைஅரண்களும், வீட்டின் அரண்களும் நொச்சி மரங்களால் ஆனவை. அந்த மரங்களில் கோர்க்கப்பட்ட மணிச்சரம் போன்ற மலர்கொத்துகள் மலர்ந்துள்ளன. வளையல்கள் அணிந்த கரங்களை உடைய பெண்களின் ஆடையாகவும் நொச்சிமலர் கொத்துகளும், இலைக்கொத்துகளும் இருந்திருக்கின்றன.

‘தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி’ என்றால்  வளையல்களை அணிந்த பெண்களின் ஆடையாக இருக்கிறாய் என்று மோசிக்கீரனார் நொச்சியைப் பார்த்துக்கூறுகிறார். [ அல்குல் என்பது அரைஞாண் கயிறு கட்டக்கூடிய இடம்]

மரத்தின் பாகங்களில் இருந்து ஆடை தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தழையாடையாக பயன்பட்டிருக்கலாம். வீட்டை சுற்றி இயல்பாக வேலி மரமாக வளர்க்கப்படக்கூடியது என்பதால் ஆடையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பெண்களின் அரணாகவும், வீட்டிற்கான அரணாகவும், நாட்டிற்குமான அரணாக இருப்பதால் போர் செய்ய புறப்படுபவர்களுக்கும் அரணாக அவர்கள் தலையில் இருக்கக்கூடிய பெருமை உனக்கே உரியது என்று கவிஞர் சொல்கிறார். நொச்சியின் கிளைகள் இல்லாத குச்சிகளை கொண்டு படல்கள் பின்னி வீட்டிற்கு சுற்று மதிலாக வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டுப்பட்டிகளுக்கான படல்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன.

போர்க்களத்தில் ஒரு பூ அரணாகும் என்று நம்பும் வழக்கம் நமக்குள்ளது. மலர் எத்தனை மென்மையானது. போருக்கும் மலருக்கும் என்னத்தொடர்பு. நமக்கு மலர்களுடனான தொடர்பு ஆதியில் இருந்து இன்றுவரை அறுபடாத ஒன்று. நாம் காலத்தால் எத்தனை எத்தனை  விஷயங்களை கைவிட்ட பின்பும் நம் கைகளில் மலர்களுடனேயே வந்திருக்கிறோம். பல சமயங்களில் சொற்களின் பதிலியாக மலர்களே நமக்கு முன் நிற்கின்றன.  நம் அன்றாடத்தில், விழாக்களில்,மகிழ்ச்சியில், துக்கத்தில் உடனிருக்கின்றன. இறப்புவீட்டில் ஒரு மலரை வைப்பதைவிட நம்மால் வேறென்ன பெரிதாய் சொல்லிவிட முடிகிறது. அதே தொடர்பு தான் போர்வீரன் வாள் எடுக்கும் போது இணையாக ஒரு பூவையும் எடுக்கிறான். பாதுகாப்பிற்காக ஆணியும்  ஆடைகளைப்போலவே ஒரு மலரை தன் தலையில் அணிகிறான். மலர் என்பது இங்கு போர் அடையாளம் என்பதிலிருந்து செயலிற்கான ஒன்றாக மாறுவதை காண்கிறோம். மதிலை தாக்கி அழிப்பதை நொச்சித்திணை என்றே சங்கஇலக்கியம் சொல்கிறது. முப்பது அடிவரை எளிதாக வளரக்கூடிய இம்மரங்களை உயிர்மதில்களாக வளர்ந்திருப்பார்கள். மேலும் கோட்டைகளுக்கு வெளியே வளர்த்து உருவாக்கப்படும் காவல்காடுகள் நொச்சிமரங்களால் ஆனவை என்ற குறிப்பும் உள்ளது.

‘நொச்சி மரமானாலும் வச்சிப்பாத்து வெட்டு’ என்ற பழமொழி இன்று வரை உள்ளது. இந்த பழமொழி பற்றி எனக்கு பலவித யோசனைகள் உண்டு. ஒருநொச்சி மரம் எங்கள் வயலில் ஆற்றோரமாக வயல் மேட்டில் இருக்கிறது. நொச்சி எங்கும் அரணாகத்தான் நிற்கிறதோ என்று இப்போது தோன்றுகிறது. எந்த  உறவையும் சட்டென்று நினைத்ததும் வெட்டிவிடக்கூடாது அல்லது எவ்வளவு எளிய பொருள் என்றாலும் அதை அழிக்கும் முன்பு யோசித்து செய்ய வேண்டும் என்ற அன்றாடப்பொருளில் இந்தப்பழமொழியை பயன்படுத்துகிறோம். 

காவலரண்களை மாற்றி அமைப்பதற்காக இந்த மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்ததால் காவலாக உள்ள நொச்சி வேலி அடிக்கடி அழிக்கப்பட்டிருக்கலாம். எளிதில் வெட்டக்கூடிய, மறுபடி வேலி அமைக்கும் அளவுக்கு எளிதில் வளரக்கூடிய ஒரு மரம். போரில் காவலே முதலில் அழிக்கப்படும் என்பதும் மாறாத நெறி. போர்வீரர்கள் வாள்எடுத்ததும் யோசிக்காமல் மதிலை அழிக்கும் வேகத்துடன் இருப்பார்கள்.  அதிலிருந்து இப்பழமொழி உருவாகியிருக்கலாம். போர்களுக்காக உருவான பழமொழியாகவும் இருக்கலாம். படையெடுத்தல் என்பதே எண்ணி எண்ணி செய்யவேண்டியது தானே. சங்ககாலத்தில் தமிழ்நிலத்தில் எத்தனை எத்தனை போர்கள். அவற்றின் குறிப்புகளாக சங்கக்கவிதைகளே உள்ளன.

நொச்சியின் மலர்கள் நீலநிற கொத்துகளாக மலர்பவை. மிக அழகானவை. சங்கக்கவிதைகள் காதலை, போர்களை, வெற்றிகளை, தோல்விகளை, நடுகற்களை பாடுவதைப்போலவே இவை ஒவ்வொன்றுக்குமான பலவகையான பூக்களையும் சேர்த்தே சொல்கின்றன. அந்த வகையில் ‘காதல் நன் மரம்’ என்று ஒரு கவிஞன் போர்காலத்தில் நொச்சியைப்பாடி அம்மலரை காலத்திற்கும் மலர வைத்திருக்கிறான்.




கோர்த்த மணிச்சரம் போல

பூங்கொத்துகளை உடைய நொச்சியே,

மலரும் மரங்களில்

நீயே அன்பிற்குரிய மரம்.

அகன்ற நகரில்

கண்காணும் வரை நீயே பூத்திருக்கிறாய்.

வளைகரங்களை உடைய 

பெண்களின் ஆடையானாய்.

கோட்டையின் காவலரண் ஆனாய்,

ஊரை பகைவரிடத்தில் விட்டுக்கொடுக்காமல் காக்கும் போர்வீரனின் தலையிலிருக்கும் உரிமையும் உன்னுடையதே.


மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி

போது விரி பல் மரனுள்ளும் சிறந்த

காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே

கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;

காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,

ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை

பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.


புறநானூறு: 272

பாடியவர்: மோசி சாத்தனார்

திணை: நொச்சி

துறை : செருவிடை வீழ்தல்


மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. நொச்சி போருக்கான மலர். போரில் வென்றவர்களோ தோற்றவர்களோ சூடிய மலர் அல்ல. போருக்கு செல்லும் போது போர்வீரர்களால் சூடப்பட்ட மலர். எனில் அது எத்தனைக்கு ப்ரியமான மலராக இருந்திருக்கக் கூடும். 

அதனால்தான் மோசிக்கிரனார்

‘காதல் நன்மரம் நீ..’ என்கிறார்.

இன்று தெய்வங்களும் பெண்களும்  மலர்களை சூடிக்கொள்கிறார்கள். அன்று மலரானது ஆண்களுக்குமானதாக  இருந்திருக்கிறது. போருக்கு செல்லக்கூடிய போர்வீரர்கள் ஒரு மலரை சூடுவார்கள்  என்றால் மலர் என்பது அங்கு ஒரு அடையாளம். வென்றெழும் வேட்கையின் ,ஆற்றலின் மலர் நொச்சி எனக்கொள்ளலாம். 

இந்தப்பாடல் காட்டும் சித்திரத்தைப் பார்க்கலாம். கோட்டையை சுற்றிலும், வீடுகளை சுற்றிலும் காவல் மரமாக நொச்சி இருந்திருக்கிறது. வேலிமரம். கோட்டைஅரண்களும், வீட்டின் அரண்களும் நொச்சி மரங்களால் ஆனவை. அந்த மரங்களில் கோர்க்கப்பட்ட மணிச்சரம் போன்ற மலர்கொத்துகள் மலர்ந்துள்ளன. வளையல்கள் அணிந்த கரங்களை உடைய பெண்களின் ஆடையாகவும் நொச்சிமலர் கொத்துகளும், இலைக்கொத்துகளும் இருந்திருக்கின்றன.

‘தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி’ என்றால்  வளையல்களை அணிந்த பெண்களின் ஆடையாக இருக்கிறாய் என்று மோசிக்கீரனார் நொச்சியைப் பார்த்துக்கூறுகிறார். [ அல்குல் என்பது அரைஞாண் கயிறு கட்டக்கூடிய இடம்]

மரத்தின் பாகங்களில் இருந்து ஆடை தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தழையாடையாக பயன்பட்டிருக்கலாம். வீட்டை சுற்றி இயல்பாக வேலி மரமாக வளர்க்கப்படக்கூடியது என்பதால் ஆடையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பெண்களின் அரணாகவும், வீட்டிற்கான அரணாகவும், நாட்டிற்குமான அரணாக இருப்பதால் போர் செய்ய புறப்படுபவர்களுக்கும் அரணாக அவர்கள் தலையில் இருக்கக்கூடிய பெருமை உனக்கே உரியது என்று கவிஞர் சொல்கிறார். நொச்சியின் கிளைகள் இல்லாத குச்சிகளை கொண்டு படல்கள் பின்னி வீட்டிற்கு சுற்று மதிலாக வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டுப்பட்டிகளுக்கான படல்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன.

போர்க்களத்தில் ஒரு பூ அரணாகும் என்று நம்பும் வழக்கம் நமக்குள்ளது. மலர் எத்தனை மென்மையானது. போருக்கும் மலருக்கும் என்னத்தொடர்பு. நமக்கு மலர்களுடனான தொடர்பு ஆதியில் இருந்து இன்றுவரை அறுபடாத ஒன்று. நாம் காலத்தால் எத்தனை எத்தனை  விஷயங்களை கைவிட்ட பின்பும் நம் கைகளில் மலர்களுடனேயே வந்திருக்கிறோம். பல சமயங்களில் சொற்களின் பதிலியாக மலர்களே நமக்கு முன் நிற்கின்றன.  நம் அன்றாடத்தில், விழாக்களில்,மகிழ்ச்சியில், துக்கத்தில் உடனிருக்கின்றன. இறப்புவீட்டில் ஒரு மலரை வைப்பதைவிட நம்மால் வேறென்ன பெரிதாய் சொல்லிவிட முடிகிறது. அதே தொடர்பு தான் போர்வீரன் வாள் எடுக்கும் போது இணையாக ஒரு பூவையும் எடுக்கிறான். பாதுகாப்பிற்காக ஆணியும்  ஆடைகளைப்போலவே ஒரு மலரை தன் தலையில் அணிகிறான். மலர் என்பது இங்கு போர் அடையாளம் என்பதிலிருந்து செயலிற்கான ஒன்றாக மாறுவதை காண்கிறோம். மதிலை தாக்கி அழிப்பதை நொச்சித்திணை என்றே சங்கஇலக்கியம் சொல்கிறது. முப்பது அடிவரை எளிதாக வளரக்கூடிய இம்மரங்களை உயிர்மதில்களாக வளர்ந்திருப்பார்கள். மேலும் கோட்டைகளுக்கு வெளியே வளர்த்து உருவாக்கப்படும் காவல்காடுகள் நொச்சிமரங்களால் ஆனவை என்ற குறிப்பும் உள்ளது.

‘நொச்சி மரமானாலும் வச்சிப்பாத்து வெட்டு’ என்ற பழமொழி இன்று வரை உள்ளது. இந்த பழமொழி பற்றி எனக்கு பலவித யோசனைகள் உண்டு. ஒருநொச்சி மரம் எங்கள் வயலில் ஆற்றோரமாக வயல் மேட்டில் இருக்கிறது. நொச்சி எங்கும் அரணாகத்தான் நிற்கிறதோ என்று இப்போது தோன்றுகிறது. எந்த  உறவையும் சட்டென்று நினைத்ததும் வெட்டிவிடக்கூடாது அல்லது எவ்வளவு எளிய பொருள் என்றாலும் அதை அழிக்கும் முன்பு யோசித்து செய்ய வேண்டும் என்ற அன்றாடப்பொருளில் இந்தப்பழமொழியை பயன்படுத்துகிறோம். 

காவலரண்களை மாற்றி அமைப்பதற்காக இந்த மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்ததால் காவலாக உள்ள நொச்சி வேலி அடிக்கடி அழிக்கப்பட்டிருக்கலாம். எளிதில் வெட்டக்கூடிய, மறுபடி வேலி அமைக்கும் அளவுக்கு எளிதில் வளரக்கூடிய ஒரு மரம். போரில் காவலே முதலில் அழிக்கப்படும் என்பதும் மாறாத நெறி. போர்வீரர்கள் வாள்எடுத்ததும் யோசிக்காமல் மதிலை அழிக்கும் வேகத்துடன் இருப்பார்கள்.  அதிலிருந்து இப்பழமொழி உருவாகியிருக்கலாம். போர்களுக்காக உருவான பழமொழியாகவும் இருக்கலாம். படையெடுத்தல் என்பதே எண்ணி எண்ணி செய்யவேண்டியது தானே. சங்ககாலத்தில் தமிழ்நிலத்தில் எத்தனை எத்தனை போர்கள். அவற்றின் குறிப்புகளாக சங்கக்கவிதைகளே உள்ளன.

நொச்சியின் மலர்கள் நீலநிற கொத்துகளாக மலர்பவை. மிக அழகானவை. சங்கக்கவிதைகள் காதலை, போர்களை, வெற்றிகளை, தோல்விகளை, நடுகற்களை பாடுவதைப்போலவே இவை ஒவ்வொன்றுக்குமான பலவகையான பூக்களையும் சேர்த்தே சொல்கின்றன. அந்த வகையில் ‘காதல் நன் மரம்’ என்று ஒரு கவிஞன் போர்காலத்தில் நொச்சியைப்பாடி அம்மலரை காலத்திற்கும் மலர வைத்திருக்கிறான்.


கோர்த்த மணிச்சரம் போல

பூங்கொத்துகளை உடைய நொச்சியே,

மலரும் மரங்களில்

நீயே அன்பிற்குரிய மரம்.

அகன்ற நகரில்

கண்காணும் வரை நீயே பூத்திருக்கிறாய்.

வளைகரங்களை உடைய 

பெண்களின் ஆடையானாய்.

கோட்டையின் காவலரண் ஆனாய்,

ஊரை பகைவரிடத்தில் விட்டுக்கொடுக்காமல் காக்கும் போர்வீரனின் தலையிலிருக்கும் உரிமையும் உன்னுடையதே.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...