Skip to main content

Posts

அமுதம்

      ஜூலை 25, 2021  சொல்வனம்   இதழில் வெளியான  சிறுகதை   அமுதம் அந்தியின் மஞ்சள் எரியும் நேரம். இன்று ஏனோ தெருவே மஞ்சளாய் கலங்கிக்கொண்டிருந்தது. “ஊர்மேல மாரியம்மன் சேலயை விரிச்சுவிட்டாப்ல…”என்ற  பார்வதி வானத்திலிருந்து கண்ணெடுத்துக்கொண்டாள். வீட்டுவாசல்படிக்கு இருபுறமிருந்த மண்திண்ணைகளின் இடைவெளியில் சாணி மெழுகிய தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து அரிசி களைந்து கொண்டிருந்தாள். ஈயக்கிண்ணத்தில் கண்ணாடிவளையல்கள் உராயும் ஒலி ஒருதாளம் போல சீராகக்கேட்டது. “சித்திரமாச அனல் அவிஞ்சு வைகாசி பெறந்திருச்சுல்ல… மெதுவா காத்தும் மழயும் எந்திரிக்கும். ஆகாசம் இப்படி சாயங்காலமா செத்தநேரம் மஞ்சக்கட்டும்…கொத்தம்பட்டியில…” என்ற அவள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தாள். வெள்ளையன் அசையாமல் வலதுத்திண்ணையில் படுத்திருந்தார். வட்டக்குங்குமம் பளிச்சென்று தெரியும் சிவந்த முகம் கோபத்தால் மேலும் சுருங்கியது. இத்தனை பெரிய பொட்டு வைக்கும் பழக்கத்தை யாரிடமிருந்து பழகிக்கொண்டாளோ. அறுபது வயதிலும் வயல்வேலைக்கு செல்லும் இடிபிடி இருந்தாலும் இதற்கென்று கண்ணாடிமுன் நிற்க பொ...

அகமும் புறமும் : 7

      அக்டோபர் 16 வாசகசாலை இணைய  இதழில் வெளியான கட்டுரை.    பசித்திருத்தல்   யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க,இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்;கண்டும், மற்றும் மற்றும் வினவுதும்,தெற்றெனப்; பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? செய்த்தோ? கூறுமின்,எமக்கே. சிறுகுடிகிழான்  பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.  புறநானூறு: 173 திணை: பாடாண் திணை துறை: இயன் மொழிக்காஞ்சி பாடலுக்குரிய தலைவனின் இயல்புகளை பாடுதல் என்பது இயன்மொழிக்காஞ்சித்துறையின் பொதுவான இலக்கணமாகும். இது பாடாண்திணைக்குமானது. ஒரு வள்ளலை வேந்தன் பாடியது என்பது இப்பாடலின் சிறப்பு. கிள்ளிவளவன் என்ற அரசன் தன்னை ஒரு பாணனான உருவகித்துக்கொண்டு பண்ணனை தலைவனாக ஏற்று பாடிய பாடல். இந்த வரிகளை வாசிக்கும் போது மீண்டும்  மீண்டும் ‘சோறுடை கை...

எஞ்சும்சூடு

    2021 ஜூன் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான  சிறுகதை.                                                               எஞ்சும்சூடு                              தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்றுகுனிந்து களைகளை பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது.  வெயில் ஏற ஏற தண்ணீரின் ஆவிஅடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும் போது ஒருவருஷம் போல ஊருக்குவந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசிதங்கம் இருந்த இடத்தை சைகையில் காட்டி எடுத்து, த...

கடல்

      2020 நவம்பர் 1 பதாகை இணைய இதழில் வெளியான  சிறுகதை.                                                                      கடல் அப்பொழுதுதான்  நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ? பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம். லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள். “நித்யா…எனக்கு அத்த...

அலைவு

  2020 ஜூன் 1 பதாகை இதழில் வெளியான சிறுகதை.                                                                       அலைவு நிலாவெளிச்சத்தில் மாரியம்மன் கோவிலின் பெரிய வேப்பமரத்தை கண்டதும் கண்களை கசக்கிக்கொண்டு கண்ணன் எழுந்து நின்றான்.முந்தின நிறுத்தத்தில் இறங்கியிருக்க வேண்டும். வலதுபுறம் சென்ற வயல்பாதையில் நடந்தான்.இன்னும் மேற்கே நடக்க வேண்டும்.வியர்வையில் கசகசத்த முரட்டுசட்டைக்குள் காற்று புகுந்து எளிதாக்கியது.வரிசையாக நுணா, புங்கை,பனை,ஈச்சம் மரங்கள்.மேட்டுக்காடு. சற்று தொலைவில் களத்தில் மின்விளக்கின் ஔி தெரிந்தது.  வெளிச்சம் அருகில் வரவர அவன் கால்கள் தயங்கின.எதிரே காற்றுபுகுந்த சோளக்காடு பேயாட்டமிட்டது.இங்கே பாதையில் படுத்துக்கொள்ளலாம் அல்லது  வந்தபாதையில் திரும்பலாம்.ஊருக்கு செல்லும் கடைசி பேருந்தாவது கிடைக்கும். ஊரில் மட்டும் என்ன இருக்கிறது.வீட்டில் தங்கை குடும்பம் இருக்கிறது.ஒருநாளைக்கு சலிக்காமல...

மழைத்திரை

      2019 நவம்பர் 25 சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை                                                                      மழைத்திரை   கண்விழிக்கும் போதே சாந்திக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.பக்கத்துக்கட்டிலில் பையன்கள் உறங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.சரியான உறக்கமில்லாத கண்களில் எரிச்சல் காந்தியது. சமையல்கட்டினுள் நுழையும் போது படபடப்பு சலிப்பாக மாறியது.அடுத்த நொடியில் எந்தக்கஷ்ட்டம் இருந்தாலும் இதை செஞ்சுதான் தீர்க்கனுமா என்று எரிச்சலானது. லைட்டரை கொப்பரைத்திண்ணையில் வீசினாள்.மூன்றுநாட்களாக நசநசத்து பெய்து அனைத்தையும் சில்லென்று மாற்றியிருந்தது மழை. காலை உணவின் பொழுது சாந்தி,“அம்மா பாவக்கா குழம்புல கடைசியா கொஞ்சூண்டு வெல்லமும் எண்ணையும் சேப்பாங்க.நானும் சேக்கறேன் ருசி வரமாட்டிக்குது,”என்றாள். சக்திக்கு ஆத்திரம...

ஈசனின் பாதங்களில்

  இன்று தீபாவளி. நேற்றிலிருந்து சத்தங்கள் அதிர்ந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் தள்ளி சென்றால் தலை தப்பிக்கும் என்று நினைத்தேன். தம்பியின் நண்பனின் குடும்பம் 'பெரியண்ணசாமிய பாத்துட்டு அப்பிடியே அய்யாத்து தண்ணியப் பாத்துட்டு வரலாம்' என்று அழைத்து சென்றார்கள். சற்று தள்ளியிருந்து கண்டாலும் அருகிருந்து உணர்ந்தாலும் கொல்லிமலை தரும் ஆசுவாசம் மனதை அமிழ்த்தி வைக்கக்கூடியது. 'வேறெதையும் நினைக்காது என்னுடன் இரு' என்று அது முதலில் தன் குளிர் காற்றால் தொடும். மேற்கே ஊர்எல்லையை கடந்த உடன் சில்லென்று காற்று சட்டென்று தழுவும். அப்போதே நம் அன்றாட மனதை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. முன்பெல்லாம் இங்கு உயிர்வளியின் அளவு உச்சத்தில் இருக்கிறது அதனால் மூளை நல்ல உயிர்வளியை பெறுவதால் இப்படி இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் இந்த சில ஆண்டுகளில் உயிர்வளியின் அளவு அதிகரிக்கும் என்றால் சுறுசுறுப்பாகாமல் மனம் எப்படி அமிழ்கிறது என்று கேள்வி எழுகிறது. கொல்லிமலையின் அடியில் அய்யாற்றின் கர்ஜனையில், அதன் வேகத்தில் மனம் அமிழ்ந்து விடுகிறது. மௌனமாக அடுக்கடுக்காக எழுந்து நிற்கும் மாமலை. கடந்த இருமாதங்களின்...