எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இரு நேர்காணல்களின் தொகுப்பானது புனைவின் வரைபடம் எனும் சிறுநூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூலில் எழுத்தாளர்களின் நேர்காணல் முக்கியத்துவம் குறித்து எஸ்.ரா குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் மனமும்,வாழ்வும்,அன்றாடமும் எழுத்தாளர் அல்லாதவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. பொதுவாக வைக்கப்படும் கோட்டிற்குள் நிற்க திணறுபவை.
எழுத்தாளர்களுடைய படைப்புகளுடன் இணைத்து அவர்களுடைய அந்த படைப்பு சார்ந்து அவர்கள் சொல்வதை எழுதுவதை கேட்பதும் வாசிப்பதும் ஒரு துணை வாசிப்பு போல. சிலருக்கு புத்தகமே போதுமானது.
அந்த வகையில் துயில் நாவல் குறித்து எனக்கு இருந்த கேள்விகளுக்கு அல்லது நாவல் பற்றிய என் எண்ணங்களின் பகிர்தலிற்கு இந்த நேர்காணல் உதவியாக இருந்தது. அது அவருக்கும் நல்ல நேர்காணலாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன். புரவி இதழிற்கு நன்றி.
Comments
Post a Comment