Skip to main content

Posts

Showing posts from 2025

2025 ன் நாட்கள்

 இந்த ஆண்டு வெள்ளிமலை மரபிலக்கிய வகுப்புடன் தொடங்கியது.  வம்சவிருட்சம் _ எஸ்.எல் பைரப்பா புத்தம் வீடு _ ஹெப்சிபா ஜேசுதாசன் காவியம் _ ஜெயமோகன் மீஸான் கற்கள்_ புனத்தில் குஞ்ஞப்பதுல்லா நாலுகெட்டு _ எம்.டி.வாசுதேவன் நாயர் பாத்துமாவின் ஆடு,மதிலுகள் _ வைக்கம் முகமது பஷீர் [இரண்டாம் முறை] கூளமாதாரி _ பெருமாள் முருகன் முனைவர் வேதாசலத்தின் நூல்கள் நவீன தமிழிக்கிய அறிமுகம் [ மூன்றாவது வாசிப்பு] மாகே கஃபே _அரிசங்கர் பாரீஸ் _ அரிசங்கர் நெருப்பு ஓடு _ தேவி லிங்கம் சூன்யதா _ ரமேஷ் பிரேதன் மௌனி சிறுகதைகள்  இந்த ஆண்டு வாசித்த நூல்களுள் இந்த நூல்கள் முக்கியமானவை. கவிதை வாசிப்பனுபவங்கள்,இரண்டு சிறுகதைகள், எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா ,பெருமாள் முருகன் படைப்புகள் பற்றி கருத்தரங்க நிகழ்விற்கான கட்டுரைகளும்,நாவல் வாசிப்பனுபவங்களும் எழுதியிருக்கிறேன்.  2024 ம் 2025 ம் ஆண்டுகளின் அன்றாடத்தில் வாசிப்பிற்கும் எழுதிற்கும் இது வரை சந்திக்காத இக்கட்டுகளை, சூழல் காரணமான நெருக்கடிகளை உணர்ந்த ஆண்டுகள்.  இந்த ஆண்டில் இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். வரண்டகாலத்தில் உயிர்ப்பிடிக்கும் சப்...

நீலபத்மநாபன்

 [ எழுத்தாளர் நீலபத்மநாபனிற்கான தமிழ்விக்கி பக்கத்தை பார்த்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதம். 11/11.2022 ல் எழுதிய கடிதம்] அன்பு ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். அதிகாலையில் மழை பெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம். கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தே ரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்த...

சினார் லிபி

  எங்கோ ஒரு மலைமுகட்டிலிருந்து பறந்து வந்த சிவந்த இலை சொன்னது... அங்கு ஒரு சினார்காடு உதிர்வதை அந்த நிலம் முழுக்க பூத்துக்கொண்டிருப்பதை..

பகீரதனின் பகீரதி

 [2025 மார்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் எழுத்தாளரின் படைப்புகள் குறித்த ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை’ என்ற விமர்சன கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. அந்தத்தொகுப்பில் உள்ள நீரதிகாரம் பற்றிய கட்டுரை.] பகீரதனின் பகீரதி எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவலை வாசிக்கும் போது நம் புராணத்தில் உள்ள பகீரதன் கதை மனதில் வந்தது. பகீரதன் இஷ்வாகு குலத்தை சேர்ந்த ராமனின் முன்னோர். பகீரதனின் முன்னோர்கள் அஸ்வமேத யாகத்தின் பொருட்டு திக்விஜயத்திற்காக அனுப்பிய யாகக்குதிரை திரும்பி வர தாமதமாகிறது. அதை தேடியலைகிறார்கள்.  கபிலமுனிவரின் குடில் வாயிலில் குதிரை நிற்கிறது. முனிவர் குதிரையை கட்டி வைத்திருக்கிறார் என்று நினைத்து அவரின் தவத்தை கலைப்பதால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகி எரிந்து சாம்பலாகிறார்கள். அவர்கள் சாபவிமோஷனம் பெற்று விண்ணுலகம் எய்துவதற்கு கங்கை பூமிக்கு வரவேண்டும். தலைமுறைகள் காலமாக முயற்சித்தும் அதை செய்யமுடியவில்லை. பகீரதன் தன் முன்னோர்களுக்காக கங்கையை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருக்கிறா...

இரு கரைகளின் கதைகள்

 [ எழுத்தாளர் அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபே என்ற இரு நாவல்களையும் எழுத்தாளர் தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலையும் முன்வைத்து…] இருகரைகளின் கதைகள்                  சமூகமாக ஓரிடத்தில் நிலைகொள்வதும் இடம்பெயர்வதும் சமூகமாக தன்னை திரட்டிக்கொள்ளும் மானுடத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. நிறைந்த கலம் வழிந்து வெளியறுவதைப்போல அல்லது ஓட்டை விழுந்த கலத்திலிருந்து வெளியேறும் நீரைப்போல ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் எத்தனிப்பும் மறுபக்கம் இடப்பெயர்வும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே பொருள்வயின் பிரிதல் உள்ளது. சிலப்பதிகாரத்தில் தன் பொருளை இழந்த கோவலன் கண்ணகியின் சிலம்பை ஆதாரமாகக்கொண்டு புதுநம்பிக்கையுடன் மதுரைக்கு பொருள் ஈட்ட செல்கிறான். அப்படி வாழ்க்கை பற்றிய கனவுடன் இடம்பெயர்பவர்களை இன்று வரை காண்கிறோம். பெரும்பாலும் பொருள்ஈட்டுதல் நிமித்தம் இடப்பெயர்வு நடக்கிறது. பின்பு போர்சூழல்,பஞ்சங்களில் மக்கள் கூட்டமாக இடம்பெயர்ந்தார்கள். அவமானங்கள் மற்றும் சூழல் வாழ்க்கைக்கு தடையாகும் பட்சத்தில் தனிமனிதன் ...

உடன்போக்கு சிறுகதையின் மொழியாக்கம்

  என்னுடைய உடன்போக்கு என்ற சிறுகதை  மொழிபெயர்ப்பாளர் சஹாவால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள முதல்கதை. கதைக்கான சுட்டி https://vishnupuramusa.org/2025/11/28/elopement/

மலர்வு

 ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். பத்து வயதிற்கு மேல் தான் கிணற்று தண்ணீருக்கு பழகினேன் . தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார்.  யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கை...

அகத்தின் வெளிச்சம்

ஒரு வாரம் போல மழை. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நேற்று வரை அடை மழை. பக்கத்துவீட்டு அம்மா யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார் என்று கவனித்தால் 'வானம் நெனைச்சு நெனச்சு பெய்யுது' என்று வைதுகொண்டிருந்தார். வயல் வேலை எதாவது இருக்கும்.  மூன்று நாட்களாக சூரியனே தென்படவில்லை. வெளிச்சம் மட்டும் மங்கலாக. எனக்கு அடைமழை மிகவும் பிடிக்கும். அம்மாவிற்கு பிடிக்காது. ஏனெனில் வீடு நசநச வென்று இருக்கிறது என்பார். வீட்டில் மேற்குபக்கம் மூக்கால் வாசி சுவர் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டது என்பதால் வரவேற்பறை மழையும் வெயிலும் வெளிச்சமும் பனியும் காற்றும் புழுதியுமாக காலநிலைக்கு ஏற்ப இருக்கும். தங்கை வரவேற்பறையும் வாசலும் ஒன்று தான் என்பாள்.  திரைசீலையை ஒதுக்கினால் மழை அழகாக தெரியும். கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கும் அவ்வாவின் மிகப்பெரிய எதிரியே இந்த திரை சீலை தான். அதை நாங்கள் இழுத்துவிடுவதும், அதை அவர் மறுபடி விலக்கி விடுவதுதான் நாள் முழுவதும் வேலை. நாம் ஒரு வயதில் அசௌகரியமாக உணர்வதே இன்னொரு வயதில் சௌகரியமாகவும் இருக்கும் போல.  ஆனால் நான் வாசிக்கும் எழுதும் இடம் அகத்தளம் என்று சொல்லும் அளவுக்கு உள்...

அன்னை அமர்ந்திருந்த பீடம்

 மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான்.  எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.  இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது.  இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான்.  முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும்.  தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்...

விளையாட்டு

  கலைத்து விளையாட ஒரு கோலம் கூட இல்லை. துரத்தித்தியோட யாருமில்லை. தலைகொடுத்து மரங்களும் செடிகளும் தேமே என்று நிற்க.. தனியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது மழை.

ஔியை மறந்து விட்ட பயிர்

 காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல.  ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான்.  புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது. நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.  பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்....

இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம். அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன். இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்...

மொட்டு மலர் அலர்

 [வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை] மொட்டு மலர் அலர் பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது.  நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என்  கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள். வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள். “உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,” “ம்,” “ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,” “முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”  பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள். வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநே...