Skip to main content

மழைமுகம்

பனிநீர்,குளிர்,தண்மை,நளிர்,அளி என்று பல சொற்கள் நம்மிடம் உண்டு. எனக்கு தண்மை என்ற சொல் மீது ஈர்ப்பு உண்டு. அந்த சொல்லிலேயே அந்த உணர்வு தெரியும். குறைச்சல் கூடுதலில்லா ஒரு இதநிலை. அன்பு போல.

இங்கு அனைத்து பருவநிலைகளுமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோடை, குளிர், மழை,காற்றுகாலம் என்று அனைத்துமே. 


கோடை மழைக்கான முதல் முழக்கமே எங்காவது பக்கத்தில் இடிவிழும் சத்தத்துடன் நம்மை அதிரவைத்தடி வரும். இந்த கோடைமழையும் எப்பொழுதும் போல இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் இடிவிழுந்தபடி வந்தது. சென்ற முறை ஒரு பனைமரத்தை எரிய வைத்தது.

இரண்டுநாட்களுக்கு முன் மழைப்பெய்யாமல் முழக்கமாக மட்டும்  அமைதியாகிவிட்டது. அடுத்தநாள் காலையில் மாடியில் படிந்திருந்தன புழுதியில் நீர்சொட்டுகளின் தடங்கள். கண்ணன் தன் மழைக்கால்களுடன் சீராக நடந்து விளையாடியது போல தூரலின் காய்ந்த தடங்கள். மாடியின் சிவப்பு ஓட்டுத்தரை முழுவதும் ஏதோ ஒரு லிபியை தூரல்கள்  எழுதி சென்றிருந்தன.

நேற்று இரவு அரைமணி நேரத்திற்கு மேல் மழை. ஒரு உழவு மழை. காய்ந்து கிடக்கும் மண்ணை கலப்பையால் மேலாக ஒரு கீறுகீறிப்போடலாம். ஆனால் பெரும்பாலும் இங்கு அப்படி ஒன்றும் நிலத்தை சும்மா போட்டு வைப்பதில்லை. ஆற்றுப்பாசனம் நின்று போனால் ஏரி, கிணறுகள்,ஆழ்குழாய் நீர் பாசனங்கள்  என்று மாற்று வழியில் நீர் வளங்கள் உண்டு. ஆனால் விவசாயிகளின் தங்கள் பயிர் ஒருமுறையாவது 'மழைமுகம்' காண வேண்டும் என்று பயிர் நடவுக்கு பிறகு  வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது குழந்தை தாய்முகம் காண்பது போன்ற ஒன்று.

வடக்கத்தி மழை. மழை வரும் முன்னரே நல்ல தண்மையான காற்று. படிகளில் காற்றை உணர்ந்தபடி நின்றேன். அமிர்தம் என்ற சொல் மனதில் சட்டென்று வந்தது. உடலே தித்திக்கும் ஒரு உணர்வு. நகரவே தோன்றவில்லை.

அம்மா , "என்னா மின்னலு உள்ள வர மாட்ட...மூத்த பிள்ளைங்க இடி மின்னலுல நிக்கவே கூடாது..." என்று கத்தினார். சிறுவயதிலிருந்தே கேட்பது. தலைச்சம்பிள்ளைகள் மேல் தான் இடி முதலில் விழுமாம். ஏமனுக்கு பிடிச்சதும் தலைச்சம் பிள்ளைகள் தான் என்பார்கள். 

 மழை முடிந்த கொஞ்ச நேரத்தில் மறுபடி எப்போதும் போல புழுக்கம். மழை பெய்த சுவடே இல்லை. 

காலையில் எழுந்ததும் வழக்கம் போல அறைக்குள் வெப்பம். மாடிக்கு சென்று நின்றால் கொல்லிமலை குளிப்பாட்டி தூங்க வைத்த குழந்தை போல மேகங்கள் சிகரங்களை மறைக்க அமைதி தவழ படுத்திருந்தது. இத்தனை நாட்களாக  பார்க்கவே கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. செம்பு நிறத்தில் பார்க்கும் போதே வெப்பம் தெரியும்படி...தவம் செய்யும் விஸ்வாமித்திரரை போல. கோபத்துடன் ரங்கநாதர் படுத்திருப்பது போல,கோபம் கொண்ட கன்னி என்று ஒவ்வொரு நாளும் ஒன்று தோன்றும்.

'தங்கச்சி செல்லியாயி கோவத்துல இருக்கா... மாரியாயி வரனும் 'என்பார்கள். யாருக்கும் தணியாத அந்த கன்னி மாரிக்கு கனிவாள் என்பது நம்பிக்கை. செல்லியாயின் கோபமே கோடையாக மாறி நிற்கிறது. அக்கையும் தங்கையும். மழையும் வெயிலுமாக நிற்கும் ஒன்றின் இருமுகங்கள். 

காலையில் மாடியில் நல்ல தண்மை. இந்தத் தண்மையை அமிர்தமாக உணர வேண்டும் என்றால் செயற்கை குளிர் சாதனங்கள் இல்லாது இந்த நிலம் போல வெயிலில் தவமிருந்திருக்க வேண்டும். [ கொஞ்சம் நடைமுறை உணர்வு இல்லாமல் சொன்னாலும் உண்மை] இன்னும் ஒரு படி மேலே சென்று உயிர்சிலிர்ப்பை உணர வேண்டும் என்றால் ஒரு விவசாயியாக வெயிலின் கீழ் நாள் முழுதும் நிற்க வேண்டும். அதனால் தானோ என்னவோ மாரி அவர்களுக்கு தலையில் கைவைத்து அருளும் அன்னை, அவர்கள் தொட்டு சிலிர்க்க வைக்கும் செல்ல மகள். அவர்கள் கெஞ்சியும் கொஞ்சியும் கூத்தாடும் தேவி.

அக்கை முகம் கண்டாள் தங்கை. இனி இருவரும் மாறிமாறி விளையாடும் விளையாட்டில் இந்த நிலம் செழிக்கும். 


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...