ஊரில் வழக்கம் போல கார்த்திகை மாத பயிர்ப்பொங்கல். வரிசையாக சிறுதெய்வங்களுக்கும், வயல்தெய்வங்களுக்கும் வழிபாடுகளும் பலிகொடுத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. நாளை கோட்டைப்பிள்ளையாருக்கும்,ஊமைப்பிடாரிக்கும் பொங்கல் என்று நேற்று ராஜேந்திரன் அண்ணா தண்டோரோ போட்டுவிட்டு சென்றார். சின்னய்யாவின் பள்ளித்தோழர். சின்னய்யாவின் இறப்பால் ஒரு ஆண்டுக்கு கோவில்கள் வழிபாடுகள் வீட்டில் விழாக்கள் வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கள் தலைமுறையில் சின்னய்யா வீட்டில் முதல் இழப்பு. அய்யாவின் திருமணத்திற்கு முன்பு தாத்தா இறந்தார். காரியத்தன்று புரோகிதர் அண்ணா 'இந்த வருஷம் உங்களுக்கு அமாவாசை விரதம் தவிர எதுமில்லை..மனசை காத்துண்டிருக்கனும்' என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது சாதாரணமாக இருந்தது. [ஆனால் இந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை 'வீட்ல எல்லாவளும் எப்படி இருக்கேள்...'என்றபடி வந்துவிட்டார். இவரும் ,இவர் அப்பா கண்ணன் அய்யாவும், பாட்டனார் சப்தரிஷிதாத்தாவும் மிகவும் உற்சாகமானவர்கள். வரும் போதே உற்சாகத்தை அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு வருபவர்கள்] ஆனால் இந்த நான்கு மாதங்களில் 'மனசை க...