ஒரு விதை
எத்தனை எளியது இந்நிலத்தில்..
செடிகளில்
கொடிகளில்
மரங்களில் என்று
ஒரு விதை
எத்தனை எளியது
இந்த நிலத்தில்..
காற்றில் பறந்து
நிலத்தில் கிடந்து
நீரில் மிதந்து
எத்தனை புரளல்கள்
அதன் வழியில்..
நிலத்தில் நின்று
நீரில் நனையும்
ஒரு விதையில் முளைவிடும்
உள்ளுணர்விற்கு முன்..
ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது
இந் நிலத்தில்..

Comments
Post a Comment